அகமின்றி முகம் பூத்தான்
அலங்கார உடையணிந்தான்
அவதாரம் தனதென்று
அருமையாய் உமைக் கவர்ந்தான்.
அகந்தையை உள் மறைத்து
அழகான மொழி பகர்ந்தான்.
அடக்கி அவன் வாழ்வதாய்
அளவற்ற கதையளந்தான்
ஆதரவாய் தனைக்காட்டி
அள்ளியவன் முடித்து விட்டான்.
அன்றுரைத்த கதைகளையே
அனுதினமும் சொல்லியவன்
அறிவிளியாய் உமை செய்து
அனைத்தையும் இழக்கச் செய்தான்.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment