நிலையாய் நினைவிலே
நில்லுங்களேன் நினைவுகளே.
செய்யும் செயலை
செம்மையாய் செய்திடவே.
வந்தது வரட்டுமென
வருவதை வரவேற்று,
நல்லது நடக்க
நலமதை நவில்வோம்.
எது என்று
எனை எண்ணியே,
ஏன் ஏங்கினேன்,
ஏதுமில்லா ஏமாற்றத்திற்கு.
அதுயென்று, அதற்கென்று
அலைந்தேன் அனைத்துக்குமே.
ஆகையால் ஆட்பட்டு-
ஆடினேன் ஆனந்தமில்லாமலே.
ஓராயிரம் ஓரங்களில்
ஓடிய ஓடம்,
ஒதுங்குமே ஒன்றுமில்லா-
ஒப்பனைகளாய் ஒரு புறத்திலே.