Translate

Showing posts with label புது தகவல். Show all posts
Showing posts with label புது தகவல். Show all posts

Wednesday, August 10, 2016

மாரடைப்பு - புது தகவல்




மாரடைப்பு எதனால் வருகிறது என பல விஞ்ஞான பூர்வமான பல தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதில் மாரடைப்பு மரணங்கள், உறக்கத்தில் தான் அதிக அளவில்  ஏற்படுகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது,
மாரடைப்பு மரணம் உறக்கத்தில் ஏற்படக்கூடிய காரணங்களில் குறட்டையும் ஒன்று அறிந்தால் வியப்படைவீர்கள்,

குறட்டை எப்படி ஏற்படுகிறது
நாம் பேசுவதும், பாடுவதும், ஒலியெழுப்புவதும் குரல்நாண்கள் தான், அதற்கு துணையானது சிறு நாக்கு எனப்படும் உள்நாக்கு, குறட்டை என்பது மூக்கின் வழியாக காற்று சென்று வராமல், வாயின் வழியாக சென்று வரும்போது தொண்டையில் உள்ள குரல் நாண்கள் அதிர்வினால் குறட்டை ஓசை வெளிப்படுகிறது, அமர்ந்திருக்கும்போது மேலிருந்து தொங்கும் சதையால் ஆனா உள்நாக்கு படுத்திருக்கும் நிலைக்கேற்ப துவண்டு கிடக்கிடக்கிறது, உறக்கத்தில் இல்லாத நேரங்களில் வாய் வழியாக சுவாசிக்கும்போது தொண்டை வரட்சி அடைந்தால், தன்னிச்சை செயலாக உமிழ்நீர் சுரந்து ஈரப்படுத்தி விடுகிறது, அல்லது நீர் பானங்கள் அருந்தும் உணர்வினை ஏற்படுத்துகிறது, ஆனால்
உறக்கத்தில் உமிழ்நீருக்கான தன்னிச்சை உணர்வு ஏற்பட வாய்ப்பில்லை, இருப்பினும் பல்வேறு வகையில் உள்ளுணர்வு தூண்டுதலால் நமக்கு சிறு நொடி விழிப்பு ஏற்படுத்தி, படுத்திருக்கும் நிலையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தும் நேரத்தில் உமிழ்நீர் தொண்டையை  நனைத்து விடும் அல்லது நீர் அருந்த வேண்டிய நிலை ஏற்படும், பின் மீண்டும் தொடரும் உறக்கம் ,
குறட்டைக்கான முக்கிய காரணிகள்
1) படுத்து உறங்கும் நிலை,
2) விழித்திருக்கும் நேரங்களில் வாய் மூடி மூக்கின் வழி சுவாசிக்காமை

குறட்டையினால் எப்படி மாரடைப்பு ஏற்படுகிறது 
அது சரி குறட்டைக்கும் மாரடைப்புக்கும் என்ன சம்பந்தம்? உணவுக்குழாயும், மூச்சுக்குழாயும் தொண்டை பகுதியில் இணைவது உங்கள் அனைவருக்கும் தெரியும், உறக்கத்தில் துவண்டு கிடக்கிடக்கும் தசையாலான உள்நாக்கு, தசையாலான மூச்சுக்குழாயுடன் உரசுவதாலும், மூச்சுக்காற்றினாலும் ஈரப்பதம் சிறிதுசிறிதாக குறைந்து தசைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும் போது நுரையீரலுக்கு செல்லும் காற்று குறைவதுடன் இதயத்திற்கு தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இதயத்துடிப்பு அதிகமாகி மாரடைப்பாக மாறுகிறது
நாம் தான் விழிப்பு ஏற்பட்டு தொண்டையை ஈரப்படுத்திக் கொள்கிறோமே! என்கிறீர்களா?
ஆமாம்,
1) இதுபோன்று தொடரும் நிலையில் இதயம் பலவீனம் அடைந்து ஒரு நாள் மாரடைப்புக்கு வழி வகுக்கிறது
மேலும்
2) போதைப்பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பவர்கள், எதிர்பாரா விதமாக அதிக போதை பொருளை ஒருநாள் உட்கொண்டால் கூட சுயநினைவில்லா மயக்கத்தினால், தன்னை மறந்த உறக்கத்தினால், விழிப்பேற்பட வழியின்றி
3)
தவிர்க்க முடியாத நிலையில் வாழ்ந்துக் கொண்டு குறட்டை விடுகின்ற சிலரை நான் இதில் குறிப்பிடவில்லை காரணம் தங்கள் நிலையை நினைத்து அந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால் அவர்களைப்பற்றி குறிப்பிடாமல் தவிர்த்து விட்டேன்,
 வேறு சில காரணிகள்
1) வெளிக்காற்றை சிறிதும் சுவாசிக்காமல் ஏசி அறைகளில் அடைந்து கிடத்தல்,
2) முகத்தை போர்வையால் முழுமையாக மூடி உறங்குதல்
3) வெளிக்காற்று உள்வரயியலா ஒருவர் உறங்கத்தக்க அறையில் அதிக நபர்கள் உறங்குதல் போன்றவை
சிறிதுசிறிதாக இதயத்தை பலவீன படுத்துவதுடன், அதன் மூலம் பல நோய்களையும் ஏற்படுத்தும்,
கடைசியாக குறட்டையை போக்க உறங்க செல்லும்போது கோலி, அல்லது வேறு பொருளை வாயில் அடக்கிக் கொள்ள சிலர் யோசனை தெரிவிக்கலாம், அதுபோல் செய்து விடாதீர்கள் அதுவே உயிருக்கு உலை வைத்துவிட கூடும், குறட்டையை போக்க அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் கிடையாது,  சரியான நிலையில் உறங்குதல், மூச்சு பயிற்சி, மூக்கு வழியாக மட்டுமே சுவாசித்தல் மூலமே
குறட்டை விடும் நிலையிலிருந்து விடுபட முடியும்
விழிக்கும்போது தொண்டை வறண்டிருந்தால் குறட்டை விடுகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம், ஆண், பெண் பேதமின்றி பெரும்பாலோர் குறட்டை விடுபவர்களே, கணவன் மனைவியாலோ, மனைவி கணவனாலோ, வாரிசுகளாலோ, உறவு, நட்புகளாலோ கேலி கிண்டலால் நொந்தவர்கள் பலர் இருப்பர், அவர்கள் குறட்டைக்கான காரணங்களிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் நண்பர்களே!

--
உங்கள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.