Translate

Showing posts with label கேல்வி பதில். Show all posts
Showing posts with label கேல்வி பதில். Show all posts

Wednesday, January 6, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் - கேல்வி பதில் 7

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழில் கடன் - கேல்வி பதில்

கேள்வி: மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்கள் புரிய, மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெட்டிக்கடைப் போன்ற சிறு தொழில்களுக்கு மாவட்ட சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் மூலமாக மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடன் தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து, அதிகபட்சம் ரூபாய் 2௦௦௦௦/= வரை பெறலாம்.

செய்ய வேண்டியவை:
1)      பெட்டிக்கடை எனில் சாலை நடைப்பதைகள் மற்றும் அரசு இடங்களாக இருந்தால், அங்கு கடை வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும்.
2)      உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உங்களுக்கு கடனில்லா சான்றும், மானியத்துடன் (சப்சீடியுடன்) கூடிய கடனுக்கு, கடன் தர ஒப்புதலும் பெறவேண்டும்.
3)      முக்கியமாக நீங்கள் கேட்க கூடிய கடனுக்கு, என்னென்ன செலவுகளுக்காக என்ற விபர பட்டியலை, வங்கி அதிகாரியின் அறிவுரைப்படி வழங்கவேண்டும்.
4)      அந்த வங்கியில் உங்கள் பெயரில் கணக்கு இருக்கவேண்டும் அல்லது புதிதாய் துவக்கவேண்டும். உங்கள் பங்கு தொகையினை வங்கியில் குறிப்பிடும் அளவுக்கு, உங்கள் கணக்கில் செலுத்தவேண்டும்.
5)       மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகநலத்துறை அலுவலகத்தில் கடன், மற்றும் அதற்குரிய மானிய (சப்சீடி) அளவுக்கும் ஒப்புதல் பெறவேண்டும்.
6)      வீட்டிலிருந்தபடி அல்லது வேறு தொழில்களுக்கும் மானியத்துடன் கடன் பெறலாம்.

7)      சமூகநலத்துறை அலுவலக ஒப்புதலை, வங்கியில் கொடுத்து கடனை பெற்று தொழில் நடத்தலாம்.     

8)      முதலும் கடைசியுமாக ஒன்று: நீங்கள் வாங்கும் கடனுக்குறிய தவணைத்தொகையை, தவணை தவறாமல் சரியான நாளில் முழுமையாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தினால் கூடுதல் வட்டி செலுத்தாமல், மானியத்தின் முழு பலனையும் அனுபவிக்கமுடியும்.

9)      மேலும் தொழிலுக்கான புது கடன் அல்லது வளர்ச்சி கடனை, எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பெற்று, நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து, சாதனையாளராகவும், சிறப்பான உயர் நிலையையும்  அடைய முடியும்.


*தொழிலிலே உயர்ந்து, வாழ்வில் சிறப்பாய் வாழ. வாழ்த்துக்கள் நண்பர்களே!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் - கேல்வி – பதில் - 6


 கேள்வி: 40% ஊனமுடைய அரசு உதவிகள் கிடைக்குமா?
பதில்: 40% சதவீதமும், அதற்கு மேல் ஊனமுள்ள நடக்கவியலா மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும்.
கேள்வி: 40% சதவீத ஊனமுடைய நான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிகிறேன். வீட்டிலிருந்து சென்று வர, அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் பெற என்ன செய்ய வேண்டும்?
பதில்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பணியாற்றுகின்ற நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம், குடும்ப அட்டை நகலுடன், விண்ணப்பம் எழுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடைப்பெறும் குறைதீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட  சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலக அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.
 கேள்வி: வட்டாச்சியர் (தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம்  விண்ணப்பிக்கலாமா / கூடாதா?
பதில்: விண்ணப்பிக்கலாம். ஆனால், மாவட்ட அளவில்   மாற்றுத்திறனாளிகளுக்கான நல சமூகநலத்துறை அலுவலகம் தனியாகவே இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதே, விரைவான நடவடிக்கைக்கும், விண்ணப்பத்தின் நிலைக்குறித்த தகவலை அறிந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு சிரமமுடையவர்கள், தாலுக்கா) அலுவலக சமூகநலத்துறை வட்டாச்சியரிடம் / அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:
1)      நடக்கவியலா மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கிடைக்கும்.
2)      கல்லூரியில் படிப்பவர்கள், அரசு / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சொந்த தொழில் புரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
3)      படிப்பவர்கள், பணிபுரிபவர்கள், அந்தந்த தலைமையிடத்திலிருந்து சான்று பெற்று (உண்மை சான்றும்), வாடகையிடங்களில் தொழில் செய்பவர்கள், அவ்விடத்தின் வாடகை சான்று, சொந்த இடமாக இருப்பின், இருப்பிட வரி / தொழில் வரி சான்று அல்லது மின்னிணைப்பு கட்டணம் ( இதில் தேவையானதை நகல் இணைக்க வேண்டும்)
4)      விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தில் இடம், தேதி குறிப்பிடுவதுடன், இணைப்பு சான்றுகளையும் பற்றியும் முடிவில் தவறாமல் குறிப்பிடவும்.
5)      விண்ணப்பத்தையும், வேறு உண்மை சான்றுகள் இணைத்தால் அதையும் நகல் எடுத்து  பத்திர படுத்திக்கொள்வது நல்லது. 

#இதில் தவறு, குறைப்பாடுகள் இருப்பின் தெரிந்தவர்கள் எடுத்துக்கூறி திருத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.