Translate

Tuesday, December 29, 2015

கையால் இயக்கும் கார்.- வாழ்த்துங்கள்

நண்பர்களே! உங்கள் வாழ்த்துக்கள் இவருக்கும், எங்களைப்போன்ற மற்றவர்களுக்கும் ஓர் தன்னம்பிக்கை.




கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.(படத்தில் உதயகுமார்)

Relaxplzz

Monday, December 28, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி


ஐ.ஏ.எஸ். படிக்கும் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறவேண்டும் குறிக்கோளுடனும், முனைப்புடன் படிக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முக்கியதுவம் குறைந்திருந்தாலும், மக்களிடையே பெரும் மதிப்புள்ளது.
உடல் குறையோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை, அதிகாரத்தின் உச்சியில் அமரவைக்க ஆசைப்படுகிறேன். அதனால் தான் நாமக்கல் கலெக்டராக இருந்தபோது, நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தேன் என மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, சென்னை அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வரும் சகாயம் அவர்கள் உரையாற்றினார்.
#மேலும் மதுரைக்கு அருகிலுள்ள ஒரு அரசு பள்ளியில் பேசும்போது, ஐ.ஏ.எஸ். முடித்து பணியில் சேர்ந்து 23 வருடங்களில் 23 முறை பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு எனவும், புவிப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ( 33 சதவீதம் ) மரங்கள் இருக்க வேண்டும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் 11 சதவீத மரங்கள்தான் உள்ளது. இது கவலைக்குரியது. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது 20 இலட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்பட்டன. இங்கும் அதுபோல் நடப்படவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களால்தான் தமிழ் வளர்கிறது. எந்தநிலைக்கு உயர்ந்தாலும் தாய்மொழியான தமிழையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள் - Anandaradje Auguste


Anandaradje Auguste 

மாப்பிள்ளை ஆனந்தராஜ் அகஸ்த் மற்றும் குடும்பத்தினருக்கு,

மறை ஒலிக்கும் உள்ளத்தில்,
இறையவர் எந்நாளும்.
உறைக் கொள்வார் நிலையாக,
நிறை பங்காய் தந்தருள்வார்.
உன்னதமாய் உம் வாழ்க்கை
உருக்கொள்ளும் இத்தருணத்தில்,
உவப்புடன் வாழ்த்தினோம்,
ஆண்டவரின் நல்லாசிருடன்
குடும்பமது நலனாக! மகிழ்வாக!!
வளரட்டும் உயர்வாக!!!
இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பாசமுடன்
அப்பா, அம்மா
ஸ்ரீமதி.சோபனா முரளி.

Tuesday, December 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Liyakath Ali




துணையோடு இணையாய்.
இளமையோடு இனிமையாய்
சுவையான வாழ்வாய்
சுகமோடு மேலும்
திருமண வாழ்விலும்
நூறாண்டை நலமுடன் கடக்க,
ஆண்டவர் அருள்
அணைத்துமைக் காக்க.
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம்
மகிழ்வுடன் நாங்கள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய நண்பரே.      

Wednesday, December 9, 2015

வீட்டில்



அம்மியிலும், உரலிலும்
அரைப்பதையும் ஆட்டுவதையும்
மறந்த இக்காலப்பெண்டீர்,
தாத்பரியத்தை உணராமல்
அதிர்ஷ்டமென
வாங்கி வைக்கின்றனர்
வீட்டில் கடமைக்காய்


உல்லாசம் - குறுங்கவிதைகள்

சலனமின்றி ஒரு நொடி
சகலமும் நின்று போனால்!
சடுதியில் மாறுமே
சகலமும் தொடர்ந்து.




காலம்

வளர்பிறை முடிந்து
தேய்பிறையில்
வாழ்க்கை.


உல்லாசம்

இழந்தது
தன் *பொருளை.

*அர்த்தத்தை


அங்கிள் ஆண்ட்டி

வளம் கொழித்த தேன்தமிழில்
உயிரிழந்து மறைந்தது
பல உறவு சொற்கள்,
இவ்விரு சொல்லால்.

  


 பண்ணார் தமிழே

கோடிகளில் நீ
கோடியில் நான்.
கொட்டட்டும் உன்னழகு.

கொஞ்சி நான் புனைய. 

எங்கே போனாலும்



பங்காளி சண்டை
பனைமரம் ஏற,
பதுங்கியிருந்த பனந்தேள்
பட்டென்று கொட்ட,
பதறித் துடித்தனர்
பல்லினைக் கடித்து.
முறைத்துப் பார்த்தனர்
ஒருவரையொருவர்

என்று பொங்கும் சுதந்திர தாகம்



எங்கோ பிறந்த
தமிழருக்கெல்லாம்
தாய்மொழி தமிழென,
தமிழிலே பொரிக்க,

தமிழன்னை பிறந்த
பொற்கொடி நாட்டிலே
தயக்கமென்ன,
ஒரேழுத்து தமிழிலே எழுத.

கிடைத்த சுதந்திரம்
தமிழுக்கில்லையோ?
அடிமையுணர்வு
இன்னும் அகலவில்லையோ?

ஒருவரி எழுத
ஓராயிரம் சிந்தனைகள்
ஒற்றியதைப் பார்த்தால்
ஒன்பதை தாண்டுகிறது
எழுத்துப்பிழைகள்.


Saturday, November 28, 2015

ஓட்டைகள் - ஹைக்கூ...


ஓட்டைகள்
ஆகாயத்தில் எத்தனையோ!,
அத்தனையும் மூடிவிட்டு
பொழிகிறது மேகங்கள்


இது புதுமொழியா?

கட்டாதவரை – 

கட்டித்தயிரை சாப்பிடறதுன
ஆம்பிளைக்கு இஷ்டம்.
ஆனா கெட்டுப்போன
பொம்பளைக்கு கஷ்டம்.





ஓரமாய்



திட்டங்கள் தவிடாக,
செயல்கள் திசைமாற,
உன் போக்கு(கே) முதலாக,
பிடிமானம் தவறவிட்டு
சறுக்கியதே சாக்கென
புலம்புவதில் அர்த்தமென்ன.

ஓடும் நீரினிலே
ஓடம் நிற்பதில்லை.
ஓரத்தில் நிறுத்தி,
ஒன்பது முடிச்சிட்டால்
ஓயாத நீரதுவும்
ஒதுங்கி செல்லும் தன் வழியில்

Friday, November 27, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் -Thiyagalakshmi Badri & Venkatesh Badri Babu

இறை தந்த செல்வமாய்
இணைந்திந்த வாழ்க்கை
இருவருக்கும் துணையாய்
ஈன்ற செல்வம் இரண்டாய்.

உல்லாச வாழ்க்கை
வாழ்விலே நிலைத்து,
உலகமதை சுற்றி
வானிலே பறக்க,

வளமும், நலமும்
வற்றாத  நதியாய்
வேங்கடரசன் அருளால்
கரைப்புரண்டோட,

எந்நாளும் நீங்கள்
ஆனந்தத்தில் திளைக்க,
மனம் கொண்டு வாழ்த்தினோம்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

 10/06/2015 

உயிர் - மெய்



அற்புதத் தமிழரசி  
அருளும் சொற்களெல்லாம்,
ஆனந்தமாய் இருக்குதடா,
அமிர்தமாய் ருசிக்குதடா.

அடங்கா காளையாய்
அங்குமிங்கும் துள்ளியபடி,
அழகான உருவிலே
அகிலம் முழுதும் சுற்றுதடா.

ஆரத்தழுவிக் கொண்டாட,
அரிய வார்த்தைகளில் உறவாட,
ஆயிரமாயிர வண்ணங்களில்
அழகுக்காட்டி ஒளிருதடா.

ஆரவாரம் ஏதுமின்றி
அறியும் நிலை ஏற்படுத்தி,  
அன்பை அள்ளிக்கொடுத்து
ஆளச்செய்து மயக்குதடா.

அகண்ட சுரங்களிலது மிளிர,
ஆழ உழுதுப் பார்க்கையிலே
அபூர்வ காட்சிகள் பல கொடுத்து,  
ஆலாபனை செய்ய ஊக்குதடா

Thursday, November 26, 2015

என்னருமை காதலனே


சொல்லிவிட்டு போனதெங்கே?
தேடாத இடமெல்லாம்
தேடிவிட்டு நான் வந்ந்தால்,
விழி மூடி திறப்பதற்குள்
என் முன்னே நிற்பதின் மாயமென்ன?

கோடிக்கோடி வார்த்தைகளை
கொட்டி வளர்த்த காதலில்
கொட்டுதடா கொடுந்தேளாய்
கொடிகளில் புரட்டியெடுக்க.
களவாடி செல்லுமோ
காசினால் தனைமறந்து போகுமோ?

ஏற்றி வைத்த காதல்தீபம்
அணையும் முன்னே,
விரைந்து வந்து
ஏற்றி செல்வாய் குதிரை மேலே.

விஞ்ஞானம் மெய்ஞானம்
அலசிப்பார்த்தேன்.
அஞ்ஞானமதை பிரித்துப்போட்டேன்
அஞ்சா ஞானமென பகுத்துக்கொண்டேன்.

உறுதியுடன் நாமிருந்தால்
ஓடாத ஊருக்கு வழியெதற்கு.
செல்லுகிறது நாட்கள் விரைவாக.
விருப்பம் நிறைவேறும் மகிழ்வாக.

பணியிட மாறுதலுக்கு – வாழ்த்துக்கள்.




ஏதேதோ நினைவுகள்
எங்கெங்கோ சிதற,
ஏற்றம் கொண்ட உம் வாழ்வை
மறந்தோம் யாம் வாழ்த்த.

கொண்ட தொழிலில்
திறமையால் உயர்ந்து,
சிறப்புடன் வாழ
மகிழ்வுடன் வாழ்த்தினோம்.

நல்லாசிகள் சுபகர்.

வாழ்க! வளர்க!!

1/6/15

ஊற்றுக்கண்




ஓயாமல் உலகை(யே)
சுற்றிவரும் காற்று தான்,
சுமந்து வந்தது தூதாய்
ஓசையின்றி உன் வாசத்தை.

கண்விழித்த நேரத்தில்
காற்று வரும் திசைநோக்கி,
கயல்விழியாள் மணம் நுகர
காத்திருந்தேன் முகம் காட்டி.

பாவையுனை நான் காண
பரவசத்தில் மனம் துடிக்க,
பசித்திருந்த ஏழையாய்
பருகிவிட துடித்திருந்தேன்.

மறைப்புகள் பெரிதாக – திரு
மணமென்னும் தடுப்பாக,
இணைதலை எதிர்நோக்கி
தகர்த்திட நான் பார்க்க,

குளிரிலும் வெம்மை ஊடுருவ,
குற்றாலமாய் உடலை நீராட்ட,
மறைப்பொருளாய் நினைவில் நீ சிரிக்க,

சுரந்தது சுரங்கள் ஊற்றாக.

புது கடைக்கு வாழ்த்து.

  
ரகுநாத் & சுதா ரகுநாத், புது கடைக்கு வாழ்த்து.

புதிய பாதைப் போட்டு,
பயணம் தொடர்ந்து விட்டீர்.
பாதை விரிவடைந்து
பயணம் சிறந்திடவும்,
பகலவன் ஒளி போல
பரவலாய் விரிந்திடவும்,
பரந்தாமன் அடியொற்றி
பரவசத்தில் வாழ்த்தினோம்.


வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!

30/05/15