Translate

Monday, November 7, 2011

திருஷ்டி


ஆடிக்காற்றே,
அம்மாவாசை இருட்டே,
காட்டுக் கருப்பே,
கருங்குயிலாய் குரல் ஒலிக்க,
கானமயிலாய் நடை அமைய,
கருவிழியில் மை தீட்டி,
கார்கூந்தலில் பூ வைத்து,
கருஞ்சிவப்பு சாந்திட்டு,
கன்னத்தில் திருஷ்டி பொட்டிட்டு,
கலக்குகிறாய் அனைவரையும்.
கலக்கமடைந்து
கதறியே ஓடுகிறார்,
கற்பனையில் தேவதையாய்,
கனவுகளில் உனைக் கண்டு,
கவர்ந்து செல்லவே
கணைத் தொடுத்து வந்த
கருங்குரங்கு பட்டாளங்கள்.



பின்குறிப்பு:- யாருடைய மனத்தையும் புண் படுத்தும் எண்ணமில்லை. இருக்கின்ற அழகை, அலங்கோலப் படுத்திக் கொள்ளும் பெண்களுக்கும், தன் நிலை உணராமல் நிலையில்லா அழகை தேடும் ஆண்களுக்காகவும், அவர்களின் மனநிலையை அறிய எழுதப்பட்டது.

Sunday, October 16, 2011

இணைந்த உள்ளங்களுக்கு திருமண வாழ்த்து.




மணமகள்:- சௌ.சரண்யா மணமகன்:- S.K.விக்னேஷ்குமார்
மணநாள்: 30-09-2011 வெள்ளிக்கிழமை.
இடம்:- ஸ்ரீ வாசவி மஹால், நாமக்கல்.

இறைவனின் அருளால் இன்றைய நிகழ்ச்சி
இருமனம் இணையும் இல்லறத்தின் முதல் நாள்.

சங்குக்கழுத்து உடையவளோ
சந்தித்த நொடிப்பொழுதே
சந்தோச மனமுடனே
சம்மதித்து தலையசைத்தாள்
சரஸ்வதியின் பெண்ணிவள்.
தோழியர் புடைசூழ,
தொகைமயிலாய் மங்கையிவள்
அன்னம் போல நடைப்பயில
மங்கையிவளைக் கரம் பிடிக்க
மாப்பிள்ளையாய் உருவெடுத்து
மது உண்ட வண்டாக
மங்கை நினைவில் அவனிருந்தான்.

அரங்கம் முழுதும் அலங்கரித்து
சாத்திரங்கள் முடிவு செய்து
சான்றோர் அவை முன்னிருக்க
சரண்யாவைக் கைப்பிடித்தான்
சாகரத்தில் முத்தெடுக்க.

பட்டாபியின் மகளிவளோ
மங்கலக் குரலோசை
மண்டபத்தில் எதிரொலிக்க
பட்டமதைப் பெற்றுக் கொண்டு
மகாராணி ஆனாளே
மங்கள நாண் பூட்டிக் கொண்டு.

விக்னேஸ்வரனின் அருளுடனே
விக்னேஷ்குமார் துணையுடனே
வாழ்க்கைக்கடலை சிறப்பாக
வாசமடைய செய்வாளே.

பலமான உறவுகள்
பாலமாய் விளங்க,
சான்றோர் வாக்குகள்
வாழ்விலே பலிக்க,
இனிதான நினைவுகள்
விசாலமாய் படர,
நலமும் மகிழ்வும்
வளமுடன் இணைந்து,
பேரும் புகழும்
நிலையாய் உயர,

வாழ்த்துக்கள் எல்லாம் உரமாக,
வாழ்க்கை முழுதும் சிறப்பாக,
வாழ வேண்டும் செழிப்பாக,
வாழ்த்தினோம் நிறைவாக.

அன்புடன்,
மாமா தவபபுதல்வன் @ A.M.பத்ரிநாராயணன்,
மற்றும்,
தாத்தா P.A.மாணிக்கம் செட்டியார் மற்றும் குடும்பத்தினர்.


பின்குறிப்பு:- எமது நாமக்கல் சகோதரி திருமதி.சரஸ்வதி பட்டாபிராமன் & மாமா திரு.பட்டாபிராமன் அவர்களின் செல்ல(வ)ப்புதல்வி சௌ.சரண்யாவின் திருமண வாழ்த்து மடல்.



Sunday, September 11, 2011

தமிழாசிரியர் திரு.இராமலிங்கம்

எம்முடன் பணிநிறை தமிழாசிரியர் திரு.இராமலிங்கம் அவர்கள்.

புதிய உலகமாய்
புகுந்த ஊரும்
புதிதாய் தெரிய,
வாழ்க்கை நெறியை
வழக்கமான வழிக்கு
வகுத்துக் கொள்ள
நடப்பு செயல்களை
நாடினோம் முடிக்க .


புகுந்த இடத்திலும் 
புதிதாய் அறிமுகம்
பலவாய் இருக்க,
அதிலே ஒன்று 
அத்தியாய் இருக்க
ஆடிக் காற்றாய்
மனத்திலே மகிழ்ச்சி
விரிந்தே வீச

எம் தமிழ் ருசிக்க
மனமென்ற நிலத்தில்
குரு என்ற நிலையில்
தமிழெனும் (செந்தமிழ்) விதையை
தரமாய் பதித்து
தழைத்திட செய்த
ஆசிரியப் பெருந்தகை
அறிமுகமானார் நண்பராய் எமக்கு.

-தவப்புதல்வன்.

Wednesday, June 29, 2011

ஓட்டமாய் - R.S பிறந்தநாள் வாழ்த்து 2011,

ஓட்டமாய் நாட்களும் விரைந்தே செல்ல,
இனிதாய் வருடமும் கழிந்தது ஒன்று.

இன்று தொடங்கும் உமக்கான வருடம்,
மேலும் வாழ்விரே இனிதாய் கடக்க,

நலமுடனும் மகிழ்வுடனும்
நாட்களும் கழிய,

பிறந்தநாள் மகிழ்ச்சி
என்றுமே நிலைக்க,

வாழ்த்துக்களை வழங்கினோம்
வாழ்வாங்கு வாழ.

இப்படியும் ஒரு வாழ்த்து

வாழ்த்துனக்கு கேடா?
பூமிக்கு பாரமாய்
வீட்டிற்கு சுமையாய்
வாழ்க்கையை ஓட்டி
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

வேதனைகள் தந்தது தவிர
சாதனைகள் உண்டோ?
வயதும் கடக்குது
வாழ்வும் கழியுது (போகுது) வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?


உறவுக்கும் நீ துணையில்லை.
மகிழ்வும் நீ தரவில்லை.
கற்றதும் நிலையில்லை.
அனுபவமும் பயனில்லை.
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

எண்ணத்திலே தெளிவில்லை.
எழுத்திலே நிறைவில்லை.
மூடனாய் நீ
முதுமையைத் தொட்டாய்.
வீணாய் கழிக்கும் - உனக்கு
வாழ்த்தொரு கேடா?

செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

இன்று எங்கள் 34வது வருட திருமணநாள் நட்புகளே.

34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.



மஞ்சத்தில்  இணையாக
மகிழ்வாக உருண்டு விட்டோம்.

மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.

மார் தட்டும் நிலையாக
வாரிசுகளை வளர்த்து விட்டோம்.

இல்லறத்தில் நல்லறத்தை
வாழ்விலே முடித்து விட்டோம்.

சூதறியா மனத்துடனே
சுற்றமதை அணைத்துக் கொண்டோம்.

உடன்பிறவா நிலையிருந்தும்
உற்ற நட்புக்கு சிறப்பளித்தோம்.

இறுமார்க்க இயலாதே - நம்
செயலனைத்தும் சரியென்றே.

செப்ப வேண்டும் சுற்றமுடன் நட்புமே
குடும்பமுடன் சேர்ந்திணைந்து. 

#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
  ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
 தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன் 

Tuesday, June 28, 2011

கருத்திலே கொள்ளவில்லை

காதலித்த எனை நீ கருத்திலே கொள்ளவில்லை.

எழுதி வைத்த எழுத்துகளும் ஏட்டிலே காணவில்லை.

நினைவிலே எனை வைத்த நீயும் எங்கோ காணவில்லை.

மலர் பூத்தத் தோட்டதிலும் வாசமும் காணவில்லை.

மிதந்து வந்த காற்றிலும் தென்றலாய் குளுமையில்லை.

பனி பொழியும் வைகரையில் பாழும் மனம் இலயிக்கவில்லை.

மென்பஞ்சு படுக்கையிலும் மதி உறக்கம் கொள்ளவில்லை.

எனை மறந்த நிலையிலும் உனை மறக்க முடியவில்லை.

எனை பார்த்து சிரிக்குதடி நீ விரும்பிய உணவுகளும்.

உயிரும் உனக்காய் ஆடு(கு)தடி உண்ணநோண்பு எடுத்துக் கொண்டு.

எனக்கு உரிமை இல்லையடி அவன் கவர்ந்த பின்னாலே.

கலங்கிப் போய் இருக்குதடி கற்றுக் கொண்ட வித்தையெல்லாம்.

உடலெல்லாம் துடிக்குதடி எனை உதறிய விபரமறிய.

அழுத்தமாய் தெரியுதடி இருட்டிலும் உன் உருவம்.

பகலிலும் தெரியுதடி பக்கமெல்லாம் உன் உருவம்.

மனம் உன்னை மறக்காதடி மரணம் தழுவும் நேரத்திலும்.

எனை வாட்டிக் கொல்லுதடி எனைத் துறந்த ஏக்கம் மட்டும்.

பாலையாய் தெரியுதடி படர்ந்து நடந்த இடங்களெல்லாம்.

நினைவுகளும் கசக்குதடி நீயில்லா நிலை உணர்ந்து.

இரண்டு மனம் வேண்டுமடி கவி சொன்ன நிலைப்போல.

மறந்து வாழ வேண்டுமடி நினைவிலே ஒன்று மூழ்கிருக்க.

முடிவின்றி தெரியுதடி காட்டு வழி பாதைப்போல.

முகர்ந்து முகர்ந்து பார்க்கிறேன் நீ தொட்ட பொருளையெல்லாம்.

தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் உனைத் தழுவிய உடைகளையும்.

சுற்றி சுற்றி வருகிறேன் ஒன்றும் அறியா குழந்தைப்போல .

உன் வாசம் இருந்திடவே உள்ளறையை பூட்டி வைத்தேன்.

வருடங்கள் கழிந்த பின்னும் வழிப்பார்த்து நிற்கிறேன்.

இறைவனின் முடிச்சு என்றேன் நீ அருகிலிருந்த போதெல்லாம்.

கட்டவிழ்ந்து போனதோ, நான் கண்ட

நினைத்துத்தான் பார்க்கிறேன் நீ விலகியப் பின்னாலே.

இடையிலே ஏன்

என் நினைவிலே நீயும்
நிலையாய் இருக்க,

படுத்துறங்கும் நேரம்
கதையொன்றைச் சொன்னாய்.

கேட்கும் தோரணையில்
"உம்"மதைக் கொட்டினேன்.

துளிகளாய் நேரம்
கடந்தே செல்ல,

விழிகளை உறக்கம்
கவ்விக் கொள்ள,

"உம்"மென்ற ஒலியும்
தேய்ந்து போக,

மின்வெட்டாய் அதுவும்
துண்டித்து போக,

விடிந்ததும் கேட்டேன்
இடையிலே ஏன், விட்டாயென...

ஏங்கும் கடலலைகள்.

பெருங்கடலின் கவியலைகள்

உம் கால்களைத் தொடவில்லையா?

உணர்வுக்கு எட்டவில்லையா?

கவனத்தை ஈர்க்கவில்லையா?

உம் தீண்டுதல்களின்றி

திரும்புகிறது அலைகளோ ஏங்கி.


கால்களால் அளைந்தால்

பூபாளம் பாடும்.

கைகளால் இறைத்தால்

களிப்படைந்து துள்ளும்.

அலையின் மீதே- உன்

விழி பட்டால் போதுமே,

விரைந்து (துள்ளி) வருமே

உம் கால்களை அணைக்க.

Wednesday, June 22, 2011

வேசமிட்ட நண்பன்

நண்பனென்றே நம்பினேனடா!!!



உண்மையைச் சொல்லித் தோலைத்து விட்டேன்.
மதிப்பும் மரியாதையும் இழந்து விட்டேன்.
நட்புக்குறியவன் என்றிருந்தேன்.
உடனிருந்து குழி தோண்டி விட்டான்

நண்பனென்றே நான் நினைத்தேன்,
நயவஞ்சகன் என அறியாமல்.
என்னுடன் துணையாய் இருந்துக் கொண்டே,
துரோகக் கூலியையும் பெற்றுக் கொண்டான்.

இரட்டை வேடங்களில் வல்லவனாய்,
நினைத்ததை அவனும் முடித்து விட்டான்.
என்னைப் போலவே அவளும் தான்
ஏமார்ந்ததை நானும் அறிந்தேனே.

காசுடன் என்னுடன் விளையாடி,
களவாடி செல்ல உடனிருந்தான்.
கற்பிலே அவளுடன் விளையாடி,
கனவுகளை கலைத்து சென்று விட்டான்.
கண்ணீரிலே மிதக்க செய்து விட்டான்.
செயல்கள் வேறாய் இருந்தாலும்,
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றமே!!!

காற்றாய் மறைந்தான்

கண்டேன் அவனை

கலந்தது கண்கள்

கவர்ந்தது மனமே.

காதலனாய் ஆனவன்

கணவனாய் மாற,

கடிமணம் புரிந்தோம்

கலந்தோம் வாழ்விலே.

கற்பூரமாய் கரைய

கடந்தது நாட்கள்.

காண்பவர் ஏங்க

காதலில் மிதந்தோம்.

கட்டிய தாலியோ

காயும் முன்னே,

கட்டியவன் உரிமை

கருவாய் இருக்க,

காதலனாய் திகழ்ந்த

கணவனவன் உயிரை,

கவர்ந்து சென்றான்

காலனவன் வந்தே.

கதி கலங்கி போனேன்

கண்களோ இருட்ட.

கண்டவர், கண்கள் பட்டது போல,

கருகியது வாழ்க்கை

முளை விட்டப் போதே.

முழுமதியாளனை

மூப்பில்லா தலைவனை,

முன்தள்ளிய வயிற்றுடன்

முன்பொட்டை இழந்தேன்.

கொடும்பாவியாய் எனை நினைத்து

கொடுத்தானோ தண்டனையை.

கொஞ்சிக் கொஞ்சிப் பேசினோம்

துள்ளி விளையாடினோம்

கொடுப்பினை இல்லையே

கோபுரமாய் நிலைத்து வாழ.

அவணியில் புகழ் அடைந்திடவே

அவன் நினைவாய் பெற்றெடுப்பேன்.

என் உழைப்பும்

மகன் புகழும்

அவனுக்கு சமர்ப்பிப்பேன்

அவன் ஆத்மா சாந்தியடைய.

Monday, May 23, 2011

எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......

உன்னிலே உதித்த போதே

உறவுகளின் தொடக்கமம்மா.

மாதங்கள் பத்து சுமந்தாயே,

மரணத்தை நொடி பத்தில் அளித்தாயே.

பெண்ணாய் நீ இருக்கையிலே,

பெண்ணெனை காக்க மறந்தாயே.

உனை வளர்த்த உதிரத்தை

எனக்காக நீ கொடுத்தாய்.

உன் உதிரம் நானென மறந்து,

உதிர்த்துத்தான் விட்டாயே.

உனக்கிருக்கும் ஆசைத்தான்

எனக்கும் தான் இருக்காதோ.

காமத்திலே உமை இழந்தீர்.

காப்பதற்கு எமை மறந்தீர்.

அறியாமல் நாங்கள் உதித்ததிற்கு

அழித்தீரோ எமை, தண்டனையாய்.

{அளித்தீரோ எமக்கு தண்டனையை.}

பெற்றோர் உரிமையென நினைத்து

பெரும்பாவி ஆனீரே எமைக் கொன்று.

அப்பாவிகளாய் உம் கருவில் உதித்ததினால்

பெருந்தண்டனை அடைந்தோமே.

பாலோ வெளுத்திருக்க,

உம் மனமோ கருத்திருக்க,

பாலிலே நெல் கலந்து

பறித்தீரோ எம் உயிரை.

புண் தீர்க்கும் மருந்தாக

கள்ளிப்பாலிருக்க,

உயிர் போக்கும் மருந்தாக

கொடுத்தீரே எமக்குத்தான்.

நீச்சலறியா எம்மையும்

நீரிலே மூழ்கடித்தீர்.

மண் வாசனை அறியுமுன்னே

மண்ணிலே ஏன் புதைத்தீர்?

நாற்றமென எமை நினைத்தோ

குப்பையிலே வீசிச் சென்றீர்.

கொஞ்ச வேண்டிய எமை

கொடும்வெயிலில் போட்டு சென்றீர்.

மூச்சடங்கி போகவென

மூட்டைக்கட்டி போட்டு சென்றீர்.

மேடுபள்ள வாழ்வென என நினைத்து

தோண்டினீரோ பள்ளமதை நீர் எமக்கு.

முள்ளிலும் கல்லிலும் காயம் பட்டு

எறும்புகளும் பூச்சிகளும் எமை ருசிக்க,

உணவென எமை நினைத்தே

நாய்களும் கடித்துதற,

காத்துக் கொள்ள வழியின்றி

கதறித்தான் துடித்தோமே.

பசிப் போக்கும் பால் வேண்டி

குரல் கொடுத்தேன் அம்மாவென.

அம்போவென போட்டு சென்றீரே

எமை விட்டு வெகுதூரம்.

இறைவனிடம் பிறவி கேட்பேன்

இப்புவியிலே மீண்டும் பிறக்க.

வரமதை வேண்டி நிற்பேன்

உம் உயிரை எம் மடி சுமக்க.

கொஞ்சி நான் மகிழ்விப்பேன்

நான் இழந்த சுகத்தையெல்லாம்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சேர்த்துத்தான்,

உறவுகள் அனைவரையும் இணைத்துத்தான்,

சொல்ல விரும்புகிறேன் ஒன்றைத்தான்,

செவிக் கொடுத்துக் கேளுங்கள் இதையும் தான்,

கொல்லவென்றே சுமக்காதீர் எமையும் தான்.

உடல்பசி ஆறவென்றே நீர் இணைந்தீர்

உண்டான எமை அழிக்க ஏன் துணிந்தீர்?

இனிய பெற்றோராய் நீர் விளங்க,

உம் செல்லங்களாய் நாங்கள் வளர,

யோசிப்பீர் இணையுமுன்னே எமைத் தடுக்க.

தீட்டாதீர் திட்டங்களை எமை அழிக்க.

அழிக்கவே கருவுகளை சுமக்காதீர்,

இயற்கையின் நடப்பென்றே ஏற்பீரே.

விருப்பமின்றி உதிப்பதை தடுத்திடவே

முறையாக செயல்பட்டு தடுப்பீரே.

ஐய்யகோ.........

எப்படி சொல்வேன் இதற்கும் மேலே.......

Tuesday, May 17, 2011

எப்படி... எப்படி?


எனக்கொரு ஓர் உலகம் தனியாய் சுழல,
பரிதியும் மதியும் தோன்றியே மறைய,
பூத்த மலர்களும் புன்னகைப் பூக்க,
சுகந்தம் எங்கும் சுகமாய் பரவ,
பனியும் மழையும் இதமாய் பொழிய,
நளினமாய் மக்கள் மகிழ்வாய் திகழ,
உயிரினம் அனைத்தும் பகையின்றி உலவ,
எதிலும் இனிமை, எங்கும் மகிழ்ச்சி,
கழிந்திடும் பொழிதில் கீரல் பட்ட ஒலியாய்.

எங்கோ ஓலம் மனத்தை பிசைய,
நினைவுகளில் விரிச்சல் உச்சத்தை அடைய,
நிதர்சன நிலையை உணர்ந்தது மனமே,
தாபமுடன் கோபமும் பேராசை, பொறாமை
வீம்பு, தர்க்கம், உணர்வுகளில் பொய்மை.
எங்கும் எதிலும் நிலையற்ற தன்மை.
பெற்றெடுத்தத் தாயை கூறுபோடும் மனிதனாய்
காக்கும் பூமியை சல்லடையாக்கினான்.

இவன் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைத்தான்.
இயற்கையின் பிடியில் இருப்பதை மறந்தான்.
இரும்பென்ன, கல்லென்ன இடியாதென நினைத்தால்,
இயற்கையின் முன்னே நில்லாது போகுமே.
உணர்ந்தவன் நடந்தால் உயர்வாய் வாழலாம்.
என்ன வழி அவனுக்கு எப்படி சொல்வேன்?
ஏகப்பட்ட இரவுகள் எண்ணங்களில் அலைய,
என் மனம் தொலைந்தது ஏங்கியே தவித்து.

Saturday, May 14, 2011

அன்பு தோழி சத்யபாமாவுக்கு நன்றி.

வான்வெளியில் நாடு கடந்து

கைப்பேசி ஒலி வழியே

ஆனந்தமாய் ஒலித்தது

வாழ்த்துக்களை கூறிடவே.

நட்பு என்ற நிலையாலே

நாடு கடந்த வாழ்த்திது.

ஆர்பரிக்கும் கடல் போல

ஆவலாலே அதிர்ந்தது.

மடைதிறந்த வெள்ளம் போல

மகிழ்ச்சியாய் பாய்ந்தது.

அருவியில் நனைவது போல்

ஆனந்தமாய் இருந்தது.

உணர்வுகளை வெளிக்காட்ட

வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.

உன்னத நட்பொன்றை

அறிந்துக் கொண்டேன்

உம் குரலின் ஒலியாலே.

நன்றி பகர வார்த்தையின்றி

மகிழ்வுகளைப் பகிர்ந்துக் கொண்டேன்

தோழி உமக்கு யான்.

-தவப்புதல்வன்.



  • கிழ்வுடன் கருத்திட்ட முகநூல் நண்பர்கள்:-
    • Vasanthakumar Graphicdesigner நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????
      May 10 at 1:25pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ‎@ Vasanthakumar Graphicdesigner:- ///நன்றிகள் பலவிதம் ...உங்கள் விதம் ஒரு தனி சுகம்....அதெல்லாம் சரி பத்ரி அண்ணா நம்பர் குடுத்த எனக்கு ஒரு கவிதை எழுத மாட்டிங்களா?????///
      1) என்ன நம்பர் எனக்கு கொடுத்திங்க? 2) " பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி நன்றி..." என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதையில் உங்கள் பெயருடன் புகைப்படமும் பதித்து, அதற்கு கீழ் உமக்கு வாழ்த்துடன்நன்றி தெரிவித்துள்ளேனே. அக்கவிதையை கவனிக்கவில்லை என நினைக்கிறேன். வாசித்து பதில் எழுதுங்கள். 3) நான் சாதாரணமானவன். உணர்வுகளின் உந்துதலால் எழுதுபவன். நேற்று எம் மகளின் பிறந்த நாளுக்கே எம் விருப்பப்படி கவி வழி வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. 4) சமயம் வாய்க்கும்போது தங்களுக்கும் வாழ்த்துபா இசைக்கமுடியுமென நம்புகிறேன். தனியாக முயற்சிப்பதில்லை. இனிய நாளாக கழியட்டும்.
      May 10 at 1:40pm · · 2 people
    • Vasanthakumar Graphicdesigner அண்ணா சும்மா கேட்டேன்..உங்கள் நட்பே போதும் அண்ணா..சத்தியபாமாவுக்கு உங்கள் நம்பரை கொடுத்ததே நான் தான் அண்ணா..
      May 10 at 1:41pm · · 3 people
    • Dhavappudhalvan Badrinarayanan A M அது எனக்கு தெரியும். சகோதரி நான் கேட்காமலே தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி.
      May 10 at 1:44pm · · 2 people
    • Sathiabama Sandaran Satia நட்பென்னும் முத்தெடுக்க கடல் தாண்டினால் என்ன மலை தாண்டினால் என்ன..உங்களை போன்ற கவிப்பெருங்கடலின் நட்பை பாராட்ட நான் பகர்ந்த வாழ்த்துக்கள் மிக சாதாரணமே..அதற்க்கு தாங்கள் எனக்கு வாழ்த்து பொழிந்திருக்கும் இந்த உன்னத கவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் கவிப்பெருன்கடலே...வாழ்க உன் கவி வளர்க நமது நட்பு....நன்றிகள் பத்ரி சார்.....
      May 10 at 1:46pm · · 3 people
    • Sathiabama Sandaran Satia அருவியில் நனைவது போல் ஆனந்தமாய் இருந்தது.
      உணர்வுகளை வெளிக்காட்ட வார்த்தைகளுக்கும் சக்தியில்லை.////// நித்தமும் உன்மது கவிக்கடலில் மூழ்கும் எங்களுக்கு தாங்கள் செய்திருக்கும் நன்றி பகர்தல் நன்றிக்கே இலக்கணமாய் அமைந்ததே நன்றிகள் சொல்லி கொண்டே இருந்தாலும் தீராது எண்கள்