விடுதலைப் பெற்ற
நினைவிலா?
விடுப் பட்ட
உணர்விலா?
சஞ்சலங்கள் நிறைந்த
மனத்திலா?
சாதனை புரிந்த
மகிழ்விலா?
விரைந்து செல்கிறதா?
காலம்
விக்கித்து நிற்கிறதா?
நேரம்
ஆழ்கடலாய் இருக்கிறதா?
மனம்
புயற்காற்றாய் வீசுகிறதா?
எண்ணம்
பார்த்து பரிகசிப்பாயா
என் எண்ணங்களை
பரவசத்தில் படரவிடுவாயா
உன் கண்களை
கேட்க உள்ளனரா
உன்னிடம்
சொல்ல நினைப்பாயா
என்னிடம்