Translate
Wednesday, June 29, 2011
ஓட்டமாய் - R.S பிறந்தநாள் வாழ்த்து 2011,
இப்படியும் ஒரு வாழ்த்து
செப்ப வேண்டும் - இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
34 வருடங்களை கழித்து 35வது வருட குடும்ப வாழ்வில் நுழைந்திருக்கிறோம். நட்புகளில் பெரியவர்களின் ஆசிகளையும், வாழ்த்துகளையும் மற்ற நட்புகளின் வாழ்த்துகளையும் அன்புடன் எதிர்ப்பார்த்து.
மஞ்சத்தில் இணையாக
மீட்டெடுக்க முடியாமல்
மிச்சமதை தவற விட்டோம்.
#இவ்வாழ்த்து 2011ம் வருடமே எழுதப்பட்டது.
ஏனோ வெளியிடாமல் விட்டு விட்டேன்.
தாமததத்தை தவிர்த்து வெளியிட்டு விட்டேன்
Tuesday, June 28, 2011
கருத்திலே கொள்ளவில்லை
இடையிலே ஏன்
ஏங்கும் கடலலைகள்.
பெருங்கடலின் கவியலைகள்
உம் கால்களைத் தொடவில்லையா?
உணர்வுக்கு எட்டவில்லையா?
கவனத்தை ஈர்க்கவில்லையா?
உம் தீண்டுதல்களின்றி
திரும்புகிறது அலைகளோ ஏங்கி.
கால்களால் அளைந்தால்
பூபாளம் பாடும்.
கைகளால் இறைத்தால்
களிப்படைந்து துள்ளும்.
அலையின் மீதே- உன்
விழி பட்டால் போதுமே,
விரைந்து (துள்ளி) வருமே
உம் கால்களை அணைக்க.
Wednesday, June 22, 2011
வேசமிட்ட நண்பன்
காற்றாய் மறைந்தான்
கண்டேன் அவனை
கலந்தது கண்கள்
கவர்ந்தது மனமே.
காதலனாய் ஆனவன்
கணவனாய் மாற,
கடிமணம் புரிந்தோம்
கலந்தோம் வாழ்விலே.
கற்பூரமாய் கரைய
கடந்தது நாட்கள்.
காண்பவர் ஏங்க
காதலில் மிதந்தோம்.
கட்டிய தாலியோ
காயும் முன்னே,
கட்டியவன் உரிமை
கருவாய் இருக்க,
காதலனாய் திகழ்ந்த
கணவனவன் உயிரை,
கவர்ந்து சென்றான்
காலனவன் வந்தே.
கதி கலங்கி போனேன்
கண்களோ இருட்ட.
கண்டவர், கண்கள் பட்டது போல,
கருகியது வாழ்க்கை
முளை விட்டப் போதே.
முழுமதியாளனை
மூப்பில்லா தலைவனை,
முன்தள்ளிய வயிற்றுடன்
முன்பொட்டை இழந்தேன்.
கொடும்பாவியாய் எனை நினைத்து
கொடுத்தானோ தண்டனையை.
கொஞ்சிக் கொஞ்சிப் பேசினோம்
துள்ளி விளையாடினோம்
கொடுப்பினை இல்லையே
கோபுரமாய் நிலைத்து வாழ.
அவணியில் புகழ் அடைந்திடவே
அவன் நினைவாய் பெற்றெடுப்பேன்.
என் உழைப்பும்
மகன் புகழும்
அவனுக்கு சமர்ப்பிப்பேன்
அவன் ஆத்மா சாந்தியடைய.