Translate

Friday, April 22, 2011

நட்பு குழாமுக்கு

புரண்டு வந்த கடலலையில்

சிதறி விழுந்த சிப்பிக்கள்.

சிப்பிகளில் அத்தனையும்

பளபளக்கும் முத்துக்கள்.

ஆழ்கடலுக்குள் செல்லாமல்,

மூச்சு அடக்க தேவையின்றி,

கையை நிறைத்த பொன்மணிகள்.

அடக்கத்தான் திரணியின்றி

மகிழ்வுடனே பறைகின்றேன்

நட்பு குழாமுக்கு வாழ்த்துகளை.

~தவப்புதல்வன்.~

Thursday, April 21, 2011

பஞ்சம் வருமோ வாழ்த்துக்கும்?



நிறைந்திருக்கும் கடல்நீரில்

புரண்டு வரும் கடலலையாய்

நித்தமொரு வாழ்த்தையே

நண்பர்கட்கு வடித்திருப்பேன்.


ஊற்றுக்கண் அடைத்ததுப் போல்,

அறிவுக்கண் அடைத்துக் கொண்டால்

வாழ்த்தும் மனம் எமக்கிருந்தும்

வாழ்த்துக்கு என்ன செய்வேன்?


முகமறியா நண்பருக்கு

நீண்டதொரு வாழ்த்திட்டு,

நலம் நாடும் நட்புக்கு

ஒரு சொல்லாய் அமைந்திட்டால்,


நட்பு மனம் அறிந்திடுமோ,

எம் நிலை உணர்ந்திடுமோ,

ஆனந்தம் அடைந்திடுமோ,

ஒரு சொல்லாய் இருந்தாலும்.

~தவப்புதல்வன்~