Translate

Showing posts with label எப்படி சொல்வேன். Show all posts
Showing posts with label எப்படி சொல்வேன். Show all posts

Monday, April 6, 2015

எப்படி சொல்வேன்


காலத்தின் கோலத்தையா?
நிலையற்ற வாழ்வதையா?
நீயிருக்கும் நிலையதையா?
எதுவாக இருந்தாலும்
இறைத்தந்த கொடையாக
உன்னுயிரை நான் காப்பேன்.


ஒலியில்லா சொல் கொண்டு
கருவியில்லா இசையுடனே
தாலாட்டு நான் பாட
மடி மீது தலை வைத்து
உறங்கி விட்டாய்
மகிழ்வுடன் முகம் திகழ.


தொடுவுணர்வே தாலாட்டாய்
எம் கைகள் உனக்கிருக்க,
ஒளி காணா விழியதையும்
ஒலி கேளா செவியதையும்
நீ உணரா நிலையாக
நானிருப்பேன் துணையாக.