Translate

Showing posts with label ஜோதிமணிக்கு திருமண வாழ்த்து. Show all posts
Showing posts with label ஜோதிமணிக்கு திருமண வாழ்த்து. Show all posts

Thursday, June 3, 2010

ஜோதிமணிக்கு திருமண வாழ்த்து.


நண்பி ஜோதிமணிக்கு இன்று காலையில் திருமணம் நடைபெற்றது. அவருக்கான திருமண வாழ்த்து.

மங்கள நான் பூட்ட,
மணவாழ்க்கை புவி சிறக்க,
மாசில்லா மனங்களெல்லாம்,
மலர் தூவி வாழ்த்தட்டும்.

இல்வாழ்க்கைத் துணைவியாய்
மாறுகின்ற உன் வாழ்க்கை,
மறக்கவியலா மகிழ்வுக
ளாய்
வாழ்விலே நிலைக்கட்டும்.

அன்பினால் நவின்ற வார்த்தை
ஆனந்தத்தை நல்கட்டும்.
தேவர்களின் ஆசியால்
ஜோதியாய் ஒளிரட்டும்.
மணியாய் ஒலிக்கட்டும்.

இணையும் மனங்கள் இரண்டுமே
ஒரு மனமாய் இயங்கட்டும்.
இன்று போல் என்றுமே
இனிய வாழ்வாய் இருக்கட்டும்.

பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூறாண்டு
பேறுகள் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்று,
அன்புடன் வாழ்த்தும்.

Uncle,

A.M.பத்ரி நாராயணன்.


பின் குறிப்பு:
மேலே உள்ள புகைப்படம் அவர்களுடையது அல்ல.