Translate

Monday, February 29, 2016

மாணவர்களுக்கு அரியதோர் வாய்ப்பு.





10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும், 

அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்வான தகவல். நமது பிரதமர் 

நரேந்திர மோடி அவர்கள் ‘’அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் 

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப் ) திட்டம் 

அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, 10ம் வகுப்பு தேர்வில் 75%  சதவீதத்திற்கு அதிகமான 

மதிப்பெண்கள் பெறுகின்றவர்களுக்கு ரூபாய்
10,000/மும்,

+2 தேர்வில் 85%  சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் 

பெறுகின்றவர்களுக்கு ரூபாய் 25000/மும் வழங்கப்படுமென 

தெரிவித்துள்ளார்.

அதற்குரிய விண்ணப்பப்படிவங்கள் நகராட்சி அலுவலகங்களில் 

கிடைக்கும். விண்ணப்பப்படிவத்தை கணினியில் பதிவிறக்கம் செய்ய, 

இணைய முகவரி: http://www.desw.gov.in/scholarship

#இவ்வாய்ப்பை தவற விடாதீர்கள்.மற்றவர்களுக்கும் கூறுங்கள். 

வாழ்த்துக்கள் மாணவர்களே.
      
 Dear all,
Just to inform all parents of 10th passed children.
There is a scholarship scheme by our PM Narendra modi in the name of Abdul Kalam and vajapeyee. for students scoring more than 75% Who will get ₹10,000/
These forms r available in the muncipal corporation .
Pls do not ignore .
For 12th std ,above 85% its 25000
Frwd in all grps.
Someone somewhere needs it...so..plzz  website link to download application http://www.desw.gov.in/scholarship


Sunday, February 28, 2016

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.


காதலால் இனிதாக,
கல்யாணம் புதிதாக,
ஆனதான நினைவோடு,
குதூகல உணர்வோடு,
ஆண்டுகள் பல கடக்க,
ஆண்டவன் அருள் புரிய,
அமர்களமாய் வாழ வாழ்த்தினோம்
இனிய இத்திருமண நன்நாளில்.


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். 

Wednesday, February 24, 2016

இனிய திருமணநாள் நல்லாசிகள்

ஆண்டவரின் அருளெல்லாம்
உறுதுணையாய் உமக்கிருந்து,
உம் செல்லங்களின் வாழ்வை
செம்மையாய் நீரமைத்து,
மகிழ்வுடன் நாட்களை
நலமுடன் நீங்கள் கழிக்க,
நாமங்களில் ஒரு நாமம்
ஸ்ரீமத் நாராயணின் திருநாமம்
கொண்டவனைப் பிரார்த்தித்தேன்,
தம்பதியாய் குடும்பமுடன்
சுகமாய் நெடுநாள் வாழ்ந்திருக்க.

உங்களுக்கு
எங்கள் 
இனிய திருமணநாள் நல்லாசிகள்

Thursday, February 18, 2016

பிறந்தநாள் வாழ்த்து - Subahar Pattabiraman - JP வாழ்த்துக்கள்





Wish you many more happy returns of the day Subahar.

செல்வக்குமாரா, சிங்காரக்குமாரா,
இனிய பொங்கலாகட்டும் இப்பிறந்தநாள்.
ஏறுமுகமாகட்டும் எல்லா பிறந்தநாளும்.
ஏந்தினேன் கைகளை இறைவனை வேண்டி,
சந்ததிகள் செழிக்க, சல்லாபம் கூட,
சாற்றினேன் வாழ்த்தினை சந்தோசமாக.
பெற்றவர் மற்றவர் மறைகளைக் கூற,
ஆற்றுவாய் செயல்களை பொற்பாதம் பணிந்து.
பத்தின் மூன்றரை வென்றாய்.
பத்தின் சதத்தையடைய வாழ்த்துக்கள்.

பாசமுடன் பெரியம்மா,

J.பிரபாவதி.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Subahar Pattabiraman






WISH YOU HAPPY BIRTHDAY DEAR SUBALAAY.

சீரான நடைக்கொண்டு
சிகரத்தைத் தொட்டுவிட,
சிந்தனையில் நிலை நிறுத்தி
செல்லுகின்ற செல்ல மருமானே,
நேற்றைய பிறந்தநாள்
கழிந்தது மேலும் ஒரு நாள்.

பீடுநடை போடு 
உடனினையும் நலனுடன்,
செயலனைத்தும் அம்புகளாய்
குறி நோக்கி விரைய,
அகிலம் காக்கும் தாயவள்
கொஞ்சி உனை அரவணைக்க,
நாங்களும் வாழ்த்துகிறோம்
சிறிது தாமதமாய் உனை.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுபலாய்.

அன்புடன்,
மாமா. பத்ரி நாராயணன்.
அத்தை. ராஜராஜேஸ்வரி

மற்றும் குடும்பம்.

பிறந்த பேத்திக்கு வாழ்த்து.





கொஞ்சும் கிளி கண்டேன்.
கொவ்வைப் பழம் கண்டேன்.
சிப்பிக்குள் இருந்த முத்து
வெளிப்பட்டு மிளிர கண்டேன்.
தலைமுறை உதயமாக
பூக்களெல்லாம் மகிழக் கண்டேன்.
சிந்தனையிலிருந்த மனமது  
சிறகடிக்க நான் கண்டேன்.
பாசத்திற்கொரு புது வரவால்
புதிதொரு எல்லை கண்டேன்.
வாழ்வெல்லாம் இனித்திருக்க
உறவெல்லாம் செழித்தோங்க,
நிறைந்திருக்கும் இறையருள்
நித்தமும் உடனிருக்க,
மலையளவு பாசமு(த்து)டன்
மகிழ்வுகள் பெருக்கெடுக்க,
ஆசிகளை மலர் போல
தூவி யாம் வாழ்த்துகிறோம்.


#எங்கள் இளையமகள் சௌ.சொபனாவுக்கு நேற்று ( 17/02/2016 ) மகவு பிறந்துள்ளது. வாழ்த்திய, பிரார்த்தித்த, ஆசிர்வதித்த அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




Tuesday, February 16, 2016

மகவை நலமுடன் ஈன்றெடுக்க - 2


மகபேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  எங்கள் இளைய மகள் சௌ.சோபனாவுக்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளின்  வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் அன்புடன் எதிர்நோக்கி.


சௌ.சோபனா மகவை நலமுடன் ஈன்றெடுக்க.



புற்றெரும்பு குவியலாய்
நினைவுகள் அலைந்தாலும்,
சரம் கோர்த்து ஓர் நினைவு
கொடிபிடித்து நிற்கிறது

பவளமல்லி வண்ணத்திலே
இலவம்பஞ்சு மென்மையில்
பொன்குஞ்சை வரவேற்க
காத்திருக்கிறது அந்நினைவு.

காலம் கரைகிறது
வினாடிகளும் மெதுவாக.
காத்திருப்பில் ஓர் படப்படப்பு.
உணர்வுகளில் ஒரு துடித்துடிப்பு.

நிறைமகவாய்
சுமந்தவள் ஈன்றெடுக்க,
கணக்கிட்ட காலமது
முழுமைடைய நெருங்கியிருக்க,

ஆதியன்னை உடனிருந்து
மடிசுமை இலகுவாக்கி
பிறவிதனை சிரமமின்றி
தந்தருள தாள் பணிந்தோம்.


மகவை நலமுடன் ஈன்றெடுக்க - 1



மகபேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எங்கள் இளைய மகள் சௌ.சோபனாவுக்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் அன்புடன் எதிர்நோக்கி.


எண்ணங்களின் மனவோட்டம்
உடலெங்கும் குறுகுறுக்க,
உணர்வுகளின் துடித்துடிப்பு
நிலவிலே எதிரொலிக்க,
அடுத்ததொரு புது வரவை
வாரியணைக்க நான் துடிக்க,
கனிந்து வரும் காலத்தை
மனத்திலே கணக்கிட்டு,
இறையருள் துணை வேண்டி
பரம்பொருள் தாள் பணிந்தேன்.

Wednesday, February 10, 2016

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்

  .2015

ராஜேஷ் & வாசவிப்பிரியா WISH YOU HAPPY   ANNIVARSARRY

மங்கையின் மனம் கவர்ந்த மணாளா,
மணாளனின் குணமான மங்கயே,
மல்லிகையின் மணம், நிறம் போல,
ஆன்றோர் ஆசி கூற,
அனைவரும் வாழ்த்துப்பாட,
மாலை சூடிய மணநாளாம் இந்நன்னாளில்
மனைமாட்சி மாண்புற,
மங்கலமே(ம்) மனம் நிறைய,
ஆயுளோ ஆரோக்கியமாக,
ஆண்டவனின் அருளோ நிலையாக,
மயிலையின் மைந்தனாம்
மயிலாலனை போற்றி,

சாற்றினேன் வாழ்த்துக்களை. 

நினைவுநாள் - JP வாழ்த்துக்கள்

.2015
தந்தையாரின் நினைவுநாள் இந்நாள்.
நினைவுகள் மறக்குமோ தன்னால்.
மறக்காது எந்நாளும் மனமே.

மங்கள ஆசிகள் மலரும் தினமே.

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - JP வாழ்த்துக்கள்


.2015
தாமோதரன் & சாந்தி தாமோதரனுக்கு மகிழ்வான திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


மங்கள மணநாளின் துவக்கம்.
மல்லிகையின் பூ வாசம் வசந்தம்.
கண்ணனின் ஒரு நாமம் நீயே.
அவனின் குண நாமம் துணைவியே.
இனியவை நாற்பது, இன்பமும் ஏற்பது.
மகள்களின் மாண்பது மகிழ்ச்சியைக் கொடுப்பது.
அறுபதைக் காண ஆரோக்கியம் பேணு.
அஷ்டமாசித்தியும் அடைந்தே வாழ
ஆண்டவனின் அனுக்கிரஹம் அனுதினமும் உண்டு.
கைக்கூப்பி வணங்கினேன் கந்தனை,

கனவுகள் நனவாக வாழ்த்தினேன் உம்மை.

Monday, February 8, 2016

இரங்கற்செய்தி - 2 - R.பிரகாசம்


Ramanathan Manoharan
07/02/2016

My elder brother Mr.Pragasan expired at Tiruchi at 12 noon today.We are all sad.



இரங்கற்பா:


தகவலை அறிந்து
தடுமாறியது உள்ளம்.
துடிக்கிறது இதயம்
விழிநீர் சிந்த,
வருத்தங்கள் அளவு
வானினைத் தாண்ட,
பிரிந்தோம் அண்ணனை.
இழந்தோம் அன்பினை.
நினைவுகள் நிலைக்க,
பணிந்தோம்
நம் குடும்பத்து இறையை.
அடையட்டும் சாந்தியென

-தவப்புதல்வன்.

இரங்கற்செய்தி - R.பிரகாசம்


எங்களின் மூத்த சகோதர்ர் பிரகாசம் அண்ணார், 
இன்று 07/02/2016 ஞாயிற்று கிழமை மதியம் 12 மணி அளவில் 
இறைவனடி சேர்ந்தார் என்பதை பெருத்த வருத்தத்துடன் 
தெரிவித்து கொள்கிறேன். 
அன்னார் பிரிவால் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் 
குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் 
ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன். 


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள் நண்பர்களே. 





😭