மகபேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எங்கள் இளைய மகள் சௌ.சோபனாவுக்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் அன்புடன் எதிர்நோக்கி.
எண்ணங்களின் மனவோட்டம்
உடலெங்கும் குறுகுறுக்க,
உணர்வுகளின் துடித்துடிப்பு
நிலவிலே எதிரொலிக்க,
அடுத்ததொரு புது வரவை
வாரியணைக்க நான் துடிக்க,
கனிந்து வரும் காலத்தை
மனத்திலே கணக்கிட்டு,
இறையருள் துணை வேண்டி
பரம்பொருள் தாள் பணிந்தேன்.
No comments:
Post a Comment