உலகைக் காக்க
முடிவை செய்தார்।
கிரிதனை எடுத்தார்
மத்தாக வைத்தார்।
சேஷனை நினைத்தார்
கயிறாக பிடித்தார்।
அமிர்தத்தைப் பெறவே
கடலைக் கடைந்தார்।
வேதனையில் பாம்போ,
விசத்தை சிந்த ( கக்க)
அமிர்தத்தை மீட்க
விசமதை உண்டார்।
விருப்பமுடன் ஏற்றார்
விருந்தெனெக் கொண்டார்।
கழுத்திலே வைத்தார்
நீலகண்டன் ஆனார்।
அமிர்தத்தை உண்டவர்
தேவரவர் ஆனார்।
சரணம் அடைவோம்
நலமுடன் வாழ।
கிருத்திகை நாளில்
மீண்டும் பணிவோம்.
Translate
Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts
Saturday, November 24, 2007
Sunday, May 27, 2007
இறைவணக்கம்
முதல்முதலில் கடவுள் வாழ்த்துடன் துவங்குவது, நமது வழக்கமாயிற்றே !!!!!!!!!!!.......... அதனால் வணங்குவோம் இறைவனை.
இறைவா............ !!!!!
=================
வெற்றியதை அடையும் போது
துள்ளி நான் குதித்தேன்.
தோல்விதனை உணரும் போது
துவண்டு நான் விழுந்தேன்.
வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே !
பகுத்தறிந்து பாடுபட
உள்ளத்திற்கு திறனளித்து
உயர்வடைய
செய்வாயே !!
நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !!!
பனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!
இறைவா............ !!!!!
=================
வெற்றியதை அடையும் போது
துள்ளி நான் குதித்தேன்.
தோல்விதனை உணரும் போது
துவண்டு நான் விழுந்தேன்.
வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே !
பகுத்தறிந்து பாடுபட
உள்ளத்திற்கு திறனளித்து
உயர்வடைய
செய்வாயே !!
நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !!!
பனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!
- வாழ்த்துரை வழங்கிய முகநூல் நண்பர்கள்:-
- Poovalur Sriji நன்றாக இருக்கிறது!
ஆனாலும் "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!February 9 at 7:59pm · · 3 people - வீரபாண்டியன் Veeraபனி போல
துன்பந்தனை
நீக்கி எனை
காப்பாயே !!!!!!!
அருமையான இறைவணக்கம் சார், வாழ்த்துக்கள்.February 9 at 8:10pm · · 1 person - Dhavappudhalvan Badrinarayanan A M @Poovalur Sriji :- " "பகுத்தறிந்து" என்றாலே கடவுளை திட்டுவது என்று இருக்கும்போது, "பகுத்தறிந்து பாடுபட" என்பது "பக்குவம்தெரிந்து" என்று இருக்கலாமோ? !!!" உண்மையிலேயே தற்போதைய சூழ்நிலையில் பல தமிழ்சொற்களின் பொருள் மாற்றி உணர, உணர்த்தபட்டுவிட்டது. பக்குவம் தெரிந்து - இடம், பொருள் தெரிந்து. அருமையான விளக்கம் சகோதரரே. மிக்க மகிழ்ச்சி.February 9 at 8:21pm · · 2 people
- Nadarajah Kandaih அற்புதம் .நல்ல நிலத்தில் சரியான நேரத்தில் பெய்த மழை போல உள்ளதுFebruary 9 at 9:24pm · · 3 people
- Dhavappudhalvan Badrinarayanan A M @Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கருத்தறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம்.February 9 at 9:35pm · · 2 people
- ரவி சாரங்கன்ஜெய் ஸ்ரீமன் நாராயணா
//நித்தம் நித்தம்
துதி செய்து
உன் பாதந்தனில்
பணிந்திருப்பேன் !// மாம் ஏகம் சரணம் வ்ரஜா கண்ணன் சொல்கிறான் என் ஒருவணையே சரணடை உன் துண்பங்களை போக்குகிறேன் என்று.
இறைவனை துதித்தால் பக்குவம் ஆறிந்து + பகுத்தறிந்து பாடுபட உள்ளத்திற்கு திறன் வந்திடும்.
அருமை அருமை மிக அருமை தவப்புதல்வன்February 10 at 6:09am · · 1 person - Dhavappudhalvan Badrinarayanan A M @ரவி சாரங்கன்:- வணக்கம் சகோதரரே. ஸ்ரீ ராம்பிரானின் கருணையும், தங்கள் ஆசிகளும் என்றுமே தேவை.February 10 at 6:10pm · · 1 person
- Nadarajah Kandaih சரியானதும் யதார்தமான கருத்த்க்களை காணும் போதூஉங்கள்மீதான உறவு பலமடைகின்றது.சரியான்நேரத்த
ில் பெய்த மழையால் பயிர்தழைத்தோங்குவதுபோல் ப்க்குவமாக கூறி அறிவுறித்தியுள்ளீர். நன்றி February 11 at 8:24pm · · 1 person - Dhavappudhalvan Badrinarayanan A M @Nadarajah Kandaih :- வணக்கம் சகோதரரே. மீண்டும் எமை பாராட்டியமைக்கு மகிழ்வுடன் மீண்டும் நன்றி.February 11 at 8:31pm ·
- ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா "வெற்றியிலே மகிழ்வுமில்லை
தோல்வியிலே வருத்தமில்லை
என்ற நிலை நான்னடைய
பக்குவமான மனத்தினை
தந்து நீ அருள்வாயே!"5 hours ago · · 2 people - Dhavappudhalvan Badrinarayanan A M @ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா :- வணக்கம். மகிழ்ச்சி நண்பரே, தங்களின் கருத்தியம்பியதற்கு.3 minutes ago ·விருப்பக்குறியிட்ட முகநூல் நண்பர்கள்:-
Subscribe to:
Posts (Atom)