பார்வை மட்டும்
உனையேத் தொடர,
உயிர் மட்டும்
உடலில் இருக்க,
நினைவுகள் மட்டும்
நீக்கம் அடைந்தால்!
துன்பம் என்ற
உணர்வுகள் இன்றி,
நடக்கின்ற பிணமாய்
நானும் வாழ்வேன்.
ஆனால்,
ஏக்கம் கொண்டு
மனமும் அலைய,
துன்பம் என்ற
உணர்வுகள் தொடர,
மனத்தின் வலிகளை
உணரும் இதயம்
நிலையின்றி துடிக்க,
வழியின்றி திகைத்தேன்
வலிகளை மறக்க.
Translate
Showing posts with label நினைவு. Show all posts
Showing posts with label நினைவு. Show all posts
Monday, November 24, 2008
Friday, November 21, 2008
மாணிக்கப் பாட்டி!
அழைத்து விட்டாள்
உறவு வழி
பேரன் பேத்திகளை.
காணிகளை
பகிர்ந்தளித்தாள்
பேரன்களுக்கு.
நகைகளையோ
வழங்கி விட்டாள்
பேத்திகளுக்கு.
காசு பணம்
அத்தனையும்
அளித்து விட்டாள்.
கையிலிருந்த
ஜோடி வளை
இரண்டைத் தவிர.
விழி மூடும்
தருணம் வரை,
விழி நீரை
சிந்தா நிலை
வைத்திருந்த,
கரம் பிடித்த
மாணிக்கத்தின்
முதல் நினைவான
வளைதனை
தடவி விட்டாள்,
வரிந்தவனையே
தழுவுவதாய் .
வரிந்து கொண்டவளை
வலுவாக கைப்பற்றி,
வருத்தங்கள் அவளடைய
வழிகளைக் கொடாமல்
வளைத்தணைத்தே
வாழ்க்கை தனை
நடத்தி விட்டு,
வின்னுலகம் சென்றவனை
வழித் தொடர்ந்தே,
விரைந்துச் செல்ல
விழிப் பதித்த
நிலையிலிருந்தாள்
வாரிசுகளற்ற
மாணிக்கப் பாட்டியவள்.
Subscribe to:
Posts (Atom)