Translate

Showing posts with label என்னவள். Show all posts
Showing posts with label என்னவள். Show all posts

Thursday, July 18, 2019

என்னவள்

பாலாக ஒளிவெள்ளம்
எங்கெங்கும் நிறைந்திருக்க,
பார்வையை நாற்புறமும்
ஓட்டிப் பார்க்க,
அவளை எங்கும் காணவில்லை.
விழிகளோடு மனமும்
சோர்ந்து தலை குனிய,
மின்னலாய் ஒளிக்கீற்று
என்னைத் தழுவிச் செல்ல,
புவியதிர்வாய் இடம் நோக்கி
விழி உயர்த்த,
நாணத்துடன்
கண் சிமிட்டி முறுவளித்தாள்
முகில்களுக்கு இடையே-
முகம் காட்டி....
என்னவள் நிலா.

இனிய மாலை வணக்கம் கவிஞர்களே.

✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏