Translate

Saturday, October 31, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tvn Tvnarayanan 30/10/2015


கடந்த காலம் நடந்ததை சொல்ல,
நிகழும் நேரம் நினைவுகளில் நீந்த,
வரும் காலம் சிந்தனையில் இருக்க,
இன்றைய நேரம் மகிழ்வான தருணம்
உறவும், நட்பும் கொண்டாடி வாழ்த்த,
யான் பணிந்தேன் பாற்கடல் பகவனை,
நீங்காத மகிழ்வுடன்
நிறைவான நலனுடன் வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.

Monday, October 26, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - ராஜராஜேஸ்வரி. 2015


புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு ராஜிம்மா

எத்தனையோ எண்ணங்கள் ஈடேற வழியின்றி,
மனமெனும் ஆழ்குழியில் அமிழ்ந்திருக்க.
புதிதாய் தோன்றும் எண்ணங்கள் யாவும்
மகிழ்வைத் தந்து நிறைவுடன் வசமாக,
பிரார்த்திப்பேன் எந்நாளும் நலமுடன் நீ வாழ
எனக்காகயின்றி, உனக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி.

உனக்கான நான்,
ஏமே.... / மிம்மிலினிதா...

(என்னங்க, உங்களைத்தான்)

ஸ்ரீ சரஸ்வதி பூஜா நல்வாழ்த்துக்கள் 2015



சுவைக்கூட்டும் மணம் கூட்டும்
நினைவு செய்திகளை
நீ தந்த மொழியாலே
முடைக்கிறேன் தொகுப்பாக வழங்கிடவே.

சாரமோ தோரணமோ
தடிக்கிடும் கிடைக்கயிறோ
முடிச்சிட்டு பார்கின்றேன்
முனைகளை இழுத்து வைத்து.

அடுக்களையில் அஞ்சறைப்பெட்டியென
பலப்பொருளுடன் ஒன்றிருக்க - அதை வைத்து  
விருப்பமுடன் முனைகின்றேன்
விருந்தாக படைத்திடவே.


தாமதமான ஸ்ரீ சரஸ்வதி பூஜா நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

அழையுங்கள் - குறுங்கவிதை



குடியினால் இறந்தவனை
புதைத்தப் பிறகும்
அழுவதற்கு மிச்சமிருந்தால்.
''அழையுங்கள்''



பொருள்: குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணமின்றி குடியினால் தன்னை அழித்துக் கொண்டு, இறந்தவனுக்கான அழுகையில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன்.
ஐயோ! குடும்பத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு சண்டாளன் போய்விட்டானே, இனி குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேனென அழக்கூடிய நிலையிருந்தால், உதவிக்கு நானங்கு வருவேன்.

-    ஆண்டவன்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Mr.Suresh & Mrs.Hemalatha 2015


பென்ட்லி ரோஜுலு ஆசிர்வாதமு கொடுகு சுரேஷ், கோடலு ஹேமலதா.

நாட்கள் ஒவ்வொன்றாய், நகர்ந்தது வேகமாய்.
வாரிசுகள் இரண்டோடு, வருடங்கள் பத்தாய்.
திரும்பிப் பார்க்க தேவையின்றி, தித்திக்கும் நாளின்று.
,இறையருள் உமையுயர்த்த, நலமோடு நாள்தோறும்
மகிழ்வான நிலையோடு, கழியட்டும் நாட்களினியும்
இணையோடு இணைந்து என்றும், இனிக்கட்டும் குடும்ப வாழ்க்கை. 


இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சுரேஷ், மருமகள் ஹேமலதா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Murali Kasipathi 2015


புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு முரளி அல்லுடுகாரு.

சேர்ந்திருக்கும் நினைவுகளுடன் மேலுமொரு புது நினைவு.
கூடட்டும் இனிதாக. பதியட்டும் நிலையாக.
தந்தையாகும் நிலையிலின்று காத்திருக்கும் மனமுமின்று.
சுமந்திருக்கும் மனையாளுடன் கொண்டாடும் மூன்றாக.
நிலையோ உயர்வடைந்து, வாழ்வோ செழிப்படைய,
மனத்தின் நினைவுகளால் சொல்லனைத்தும் உமக்காக.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிறிய மருமகனாரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Dhamodharan 2015

தாமோதரடுகு புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு.

ஏதேதோ தேடுகிறது, நினைவுகள் ஓரிரண்டாய்.
பளபளப்பாய் மின்னுகிறது, பழுதின்றி அத்தனையும்.
பார்க்கத் தோன்றுகிறது, மீண்டுமதை நிசமாக்கி.
பின்னுக்கு இழுக்கிறது, உறவாடி மகிழ்ந்திடவே.

ஆண்டவனின் அருளோடு,
வாழ்வனைத்தும் நலமோடு,
மகிழ்வாக வாழ்ந்திருக்க
பாசமுடன் வாழ்த்தினோம் இந்நாளில்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி.    

Monday, October 19, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Pranav

புதிதான வாழ்க்கையில் 
இனிதான நாளிது.
புதிரான கேள்விகள் 
தினந்தோறும் தோன்றினாலும் 
புதுமையான விடைகளும் 
தொடர்ந்தது கிடைக்குமே.
புடம் போட்ட தங்கமாய் 
மிளிர வேண்டுமென்றும் நீ.
புன்னகையோடு வாழ்த்தினோம் 
சிறப்பாக வளரவே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆசிகளுடன் பேரனே. 

Saturday, October 10, 2015

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sankar Mani Iyer 09/10/2015
       
தாத்தாவின் வழி நடந்து,
செயல்படுத்தி நீ காட்டு.
குறிக்கோள்களை ஒன்றிணைத்து
எண்ணங்களாய் உருமாற்று.
நலமாக வளர்ந்திடவே
வாழ்த்துக்கள் பலநூறு.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மணி ஐயர் பேரனே.


Anu Balamurugan 10/10/2015        

பாசமான பெற்றோருடன்
அன்பான உறவுகள்.
செம்மையான உன் செயலால்
சிறப்பெய்து நீ வளர்க! வாழ்க!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அ.பா.ஸ்ருதிகா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rafeeq Friend




Rafeeq Friend
 ( புது சுரபி )         

ஆண்டவர் தன் கருணையினால்
அளப்பறிய நலன்கள் வழங்க,
அனுபவங்கள் பலப்பெற்று
ஆற்றலுடன் நீர் திகழ
வாழ்த்தினோம் தாமதமாய் இன்று.



தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

உள்பெட்டி பதிப்பு 10/10/2015 பிறந்தநாள் 05/10 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - புல்லாங்குழலில் துயிலும் பிசாசு யாழினிஸ்ரீ

புல்லாங்குழலில் துயிலும் பிசாசு யாழினிஸ்ரீ
 பிறந்தநாள் 08/10/2015 posted 10/10/2015

பாட்டுக்கொரு புலவன் என்று,
பகடிக்கு உனையென்று,
நட்பினால் நா நவில,
அன்புடன் கைக்குலுக்கி
ஆனந்தமாய் பட்டமதை
அள்ளித்தான் கொடுத்தாரோ?

நகரும் நாட்களில்
வலிகள் பலவிருந்தாலும்,
வழிகள் பலவற்றில் 
பாங்குடன் நீ நுழைந்து
சிறக்கவே வாழ்த்தினோம்
மகிழ்வான இந்நாளில்.


தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழி.