Translate

Friday, August 30, 2013

நட்புக்காக.

மனமோ காத்திருந்தது
மனம் பரப்பும் நட்புக்காக.
கண்களோ விரிந்தது - நட்புக்
கரம் நீண்ட நேரத்தில்.

இனிய வாழ்த்துகளுடன்,
உறவுகள் தொடரட்டும் மெருகூட்டும் நட்புடன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - பிரிய சினேகன்


 
பிரிய சினேகன்


மூச்சுக்கு முன்னூறு
முனகல்கள் வந்தாலும்,
முட்டியே பார்த்து விட
முடிவெடுத்தோம் உமக்காக.

தாலாட்டாய் உமையே,
தனித்தமிழில் வாழ்த்திடவே,
தமிழிடம் தண்டனிட்டோம்
தவழவே, எம்மிடமும்.

நலன்கள் நசுங்காமல்
மகிழ்வுகள் மழுங்காமல்
படிகளெல்லாம் வெற்றிகளாய்
பசுமையான வாழ்வமைய,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.  


 




https://www.facebook.com/photo.php?fbid=635330209839958&set=p.635330209839958&type=1&theater

Tuesday, August 27, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Banuh Shree



Banuh Shree
இறைப்படைப்பிலே "சித்திரபானு"
விழிகளில் "ஆயிரம் சோதி",
புன்னகையோ "வெண்சுடர்".
சிரித்தாலோ "நபோமணி"
முகநூல் வழியே "அகில சாட்சி"
நட்புக்கோர் "எல்லை". - எல்லாம்
நீயே சகோ பானுஸ்ரீ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பியே.



 பின்குறிப்பு : - இவ்வாழ்த்தில் மேற்குறிக்குள் உள்ள சொற்களுக்கெல்லாம் பொருள் அறியாதவர்களுக்கு, ஒரு விளக்கம். ''பானுஸ்ரீ'' என்றால் சூரியன். அவையாவும் சூரியனின் மறுபெயர்களே 
https://www.facebook.com/photo.php?fbid=634147499958229&set=p.634147499958229&type=1&theater&notif_t=like

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ramanathan Abirami




Ramanathan Abirami


அபிராமியின் அருளோ
ஆனந்தத்தைத் தந்தருள

பெரியோர்களின் ஆசிகளோ- உம்
நலனையே நாடியிருக்க.

வாழும் நாட்கள் யாவும்
வசந்தமே உமை சூழ

நட்புகளின் வாழ்த்துகளோ
இன்பத்தை உமக்களிக்க.

யாமும் பகிர்ந்தோமே
வாழ்த்துக்களை நண்பராய் உமக்கு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Happy Birthday Quotes




https://www.facebook.com/photo.php?fbid=634120216627624&set=p.634120216627624&type=1&theater

Monday, August 26, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Puthurajan Sritharan

 


Puthurajan Sritharan 

பூத்த நாளின்றில் ,
புன்னகையால் புமுகம் மலர,
புதிய சொற்களால் உமையே வாழ்த்த,
புதுபுது வார்த்தைகளை தேடியலைந்தேன்,

புதுமையான வாழ்வாய்
புத்துணர்வு நடையுடன்,
புவிப் போற்றும் புகழுடன்
பூரிப்பாய் இருக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

A Sweet Wish!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - LakshmiNarasimhan Venkatapathy




LakshmiNarasimhan Venkatapathy 18/08/2013

தாமதமாய் ஆனாலும்
தங்கியிருந்தது எம் மனத்தில்
தளதளத்த நினைவுகளோ
தாங்கி வந்தது உமக்காக.

தரணி சான்றோனென பெயரெடுத்து
தங்கமாய் வாழ்வொளிர
தகதகக்கும் அவனருளோ
தாலாட்டாய் உமக்கமைய.

தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Saturday, August 24, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Mrs.Selvarani Gopinath


 

Selvarani Gopinath
காலத்தின் நிகழ்வுகளோ 
கனவுகளின் நிகழ்வுகளாய்.
சுற்றி வருமே காலமெல்லாம்
சுகந்த நினைவுகள் ஆடியபடி.

நாட்களோ நகர்ந்தபடி
வருடங்களாய் ஓடி மறைய,
உள்ளுக்குள் நகைக்க வைக்கும்
உன்னத உணர்வுகளை தூண்டியபடி.

வாழ்வெனும் பயணத்தில்  
இனித்திடும் பல நாட்கள்.
அதிலொன்றாய் இருந்திடுமே
இனிதான நாளிதுவாய்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணி.




Wednesday, August 21, 2013

இனிய திருமண வாழ்த்து - தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா With பாலசுபாஷ் குப்தா - 2011


  • மணமகள்: B.தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா
    மணமகன்: K.பாலசுபாஷ் குப்தா
    மணநாள் : 30-01-2011
    இடம்: கோயமுத்தூர்.

    அழகான கனவுகளுடன்
    ஆனந்த நினைவுகளுடன்
    அன்பாகக் கைப்பிடித்து
    அத்தானென அழைத்திடவே
    ஆவலுடன் காத்திருந்தாய்.

    அந்த நினைவு இனிதாக
    ஆர்பரிக்கும் நட்பு சூழ,
    ஆசி வழங்கும் உறவுக்கிடையே
    அவருடன் இணைந்தாய் இன்றே நீ.

    அளவாக அழகூட்டி,
    அள்ளித்தான் முடித்திருப்பாய்,
    அந்தி மயங்கும் வேளையிலே
    அவர் வரவை எதிர்நோக்கி.

    அவசரக் கோலமின்றி
    அறிவான வாரிசுகளை
    ஆர்வமாய் ஈன்றெடுத்து
    ஆற்றலில் சிறந்திருக்க
    அவணியை கைக்கொள்ள
    அர்பணிப்பாய் உலகிற்கே.

    அனுபவிக்கும் காலமெல்லாம்
    அசைபோடும் நேரமாக
    அன்னையவள் அருள் புரிய
    அன்னை உம் குலம் செழிக்க
    அகண்ட மனமுடனே
    ஆசிகள் பல யாம் செய்தோம்
    அர்ச்சனா உம் இருவருக்கும் தானே.

    மாப்பிள்ளை பெயரெடுக்க
    மகிழ்வுடனே மாலையிட்டு
    மங்கலயோசை
    விண்ணதிர,
    மனமுவந்து இணையாக
    மங்கையிவளை சிறைப் பிடித்தாய்.

    மயக்கிய மன்னனாய் நீ..
    மாசற்ற அன்புடனே
    மனையாளை சேர்த்தணைத்து
    மங்கையிவளே பாக்கியமென
    மற்றோர்க்கு எடுத்துக் காட்டாய்
    மாசற்றத் தங்கம் போல்
    மகவுகளை வளர்த்தெடுத்து,
    மனைவி மக்கள் நலமொன்றே
    மங்காத புகழென
    மனைமங்கள ஆட்சி செய்து
    மாமன்றமதில் செழிப்பாக
    மகிழ்வுடனே வாழ்ந்திடவே
    மனந்திறந்து வாழ்த்தினோம்

    பல்லாண்டு! பல்லாண்டு!!
    பலகோடி நூறாண்டு 

    நலமுடனும்வளமுடனும் 
    வாழ்கவென.

    அன்போடு,
    சித்தப்பா. A.M.பத்ரி நாராயணன்
    மற்றும்
    குடும்பம்.

Monday, August 19, 2013

இனிய ரக்ஷா பந்தன் தின வாழ்த்து



அன்பும் பாசமும் 
இணைந்து பெருகி 
வாழ்வு வசந்தமாய், இனிமையாய் கழிய 
இனிய ரக்ஷா பந்தன் தினத்தில் 
அனைத்து சகோதர சகோதரிகளையும் 
அன்புடன் வாழ்த்துகிறோம் .

Friday, August 16, 2013

செயற்கை உபகரணங்கள் அளவெடுக்கும் முகாம்

நண்பர்களே! வணக்கம்.

முன்னதாகவே எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட் சென்னையில் ஆகஸ்ட் 10ந் தேதி நடத்தவிருக்கும் இலவச செயற்கை கை, கால்கள் மற்றும் காலிஃபர் முகாம் பற்றி ஆகஸ்ட் 2ம் பதிவு வெளியிட்டிருந்தோம்.
ஸ்ரீ அகர்வால் சபா சங்கமும், எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்டும் இனைந்து நடத்திய அம்முகாமில் யாமும் கலந்துக் கொண்டோம்.

முகாம் நடத்திய இரு சங்கத்தினரும் எமைப் பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டு, அன்பாக கலந்துரையாடினார்கள்.
எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர், தலைவர் ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் [Shri.S.C.AGARWAL, Founder Chairman, S.C.Agarwal Charitable Trust ]
மற்றும் ஸ்ரீ அகர்வால் சபா சங்கத்தின் [Shree Agarwal Sabha Association] விழா பொறுப்பாளர் ஸ்ரீ.ரவீந்திரகுப்தா [Shri.RAVINDRA GUPTHA, E.C. Meeting ], தலைவர் ஸ்ரீ.இந்தர ராஜ் பன்சால்[ Shri.INDRA RAJ BANSAL, President ] துணைத்தலைவர் ஸ்ரீ. ராம் அவதார் ரங்கடா [Shri.RAM AVTAR RUNGATA, Vice President ],
பொது செயலாளர் ஸ்ரீ.பிரவின் கார்க் [Shri.PRAVIN GARG, G.Secretary ] செயலாளர் ஸ்ரீ. அசோக் கேடியா [Shri.ASHOK KEDIA, Secretary]. புகைப்படங்களில் விழா மேடையிலும் எம்முடனும் .
குறிப்பாக எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர் தலைவர் ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் அவர்கள், படிக்க வசதியில்லா குழந்தைகள், செயற்கை உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கும் எப்போதும் உதவ தயார். எனவே தேவைப்படும் சமயங்களில் தயங்காமல் தொடர்புக்கொள்ளுங்கள் என கூறி எமை நெகிழ செய்தார்.

அவர்கள் சேவை தொடரவும், விரிவடையவும் வாழ்த்துவோம் நண்பர்களே.

தொடர்புக்கு:

ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் - 80561 91030
எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர் தலைவர், சென்னை.

ஸ்ரீ.ரவீந்திரகுப்தா - 80561 91252
ஸ்ரீ அகர்வால் சபா, சென்னை.

# நேரடியாக தாங்களே தொடர்புக் கொள்ள நேரிகையில் எம்மை நினைவுருத்தவும். பயனடைய வாழ்த்துகளுடன், A.M .பத்ரி நாராயணன், சேலம் [A.M.BADRI NARAYANAN, SALEM]





ஒரே நாளில்

ஒரே நாளில் இடிந்த சேஃப்டிக் டேங் !

தமிழ்நாடு சேலம் மல்லூர் அருகே காந்தி நகர் என்ற இடத்தில் பொதுகழிப்பிடத்திற்கு அருகில் கழிப்பிடக் கழிவுத் தொட்டி ( சேஃப்டிக் டேங்) கட்டிய ஒரே நாளில் இடிந்து விழுந்தது.

# நல்ல வேளை கட்டி முடித்து கழிவு நிரம்பியபின் இடிந்து விழுந்திருந்தாலோ, கழிப்பிடக் கழிவுத் தொட்டி சுத்தம் செய்யும் போது இடிந்திருந்தாலோ சுகாதார கேட்டுடன் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும்.

# இதற்கு காரணமான ஆட்களுக்கு தண்டனையாக, உபயோகத்தில் உள்ள பழைய கழிப்பிடக் கழிவுத் தொட்டியில் ( சேஃப்டிக் டேங்கில் ) தங்க வைக்க வேண்டும்.

Thursday, August 15, 2013

இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 2013




ஏட்டிலும் இருக்கு,
எழுத்திலும் இருக்கு,
சொல்லிலே இருக்கு,
ஆனால்,
புரியவில்லையே,
சுதந்திரம் என்னவென்று.

கொள்கை கொள்கையென்று
எட்டு திக்கும் முழக்கம்.
கொள்ளைப் போவதோ
எண்ணிலா பக்கம்.

அடிமையென்றே
சுதந்திரம் பெற்றோம்.
அடிபணிந்தே கிடக்கின்றார்
ஆள்பவரோ ஆட்டுவிக்க.

தடியெடுத்தவன் தண்டல்காரனாய்
கோலெடுத்தவன் கொண்டல்காரனாய்
கோரமாய் போகிறதே - அழகான
கோலமாய் திகழ வேண்டியது.

கொள்ளையடிப்பது சுதந்திரமோ,
கொலை செய்வதும் சுதந்திரமோ,
கற்பழிப்பதும் சுதந்திரமோ,
எதிலும் ஏமாற்றுவது சுதந்திரமோ,

உரசி உரசி பார்த்ததினால்
உணர்வற்றதுவோ இந்தியனுக்கு.
முனையிலே முக்கியெடுக்கிறான்
மீனவரையும் ஒருவன்.

உச்சியிலே இடிக்கின்றார் மத்தளமாய்
உள்ளுக்குள் குடைசலோ ஆயிரமாய்.
மதிப்பிழந்து போகிறதே
திருநாட்டின் பெருமையெல்லாம்.

குளிரிலும் விரைக்காமல்
விறைப்பாய் நிற்கின்றான்
சடலமாய் திரும்புகிறானே
சக்தியற்ற ஆட்சியினால்.

கொந்தளிக்குமோ கோபம் எம் மீதும்
சுட்டிக் காட்டி சொன்னதினால் !
உறைக்காதோ இருக்கின்ற நிலை
உள்ளமும் பொங்கி எழுகாதோ ?

குழித்தோண்டி புதைத்தாலும்
குமறுவதில்லை எரிமலையாக.
பாதைத்தேடி அலைகிறான்
பாவம் அப்பாவி இந்தியன்

ஓடுகிறது நெருப்பாறு இணையாக
ஒரு பக்கமோ தொடர்கிறது பள்ளத்தாக்கு
ஒரு வழிப்பாதையாய் மலை மீது
ஒடுங்கியே செல்கிறான் கவலையோடு.

ஒப்பற்ற புகழ் பெற்று
ஓங்க வேண்டும் அவன் நிலையும்.
ஒளி பொழியும் சூரியனாய்
ஒளிர வேண்டும் அவன் வாழ்வும்.

சுதந்திரத்தைப் புரிந்துக் கொள்வோம்
கூட்டுறவாய் இணைந்துக் கொள்வோம்.
கோபுரமாய் உயர்ந்து நிற்க, எடுப்போமே
இந்நாளில் மீண்டும் உறுதியினை.


இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


உங்களில் ஒருவனாய்,
தவப்புதல்வன்.

Wednesday, August 7, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Vaas Cool





Vaas Cool

வருடத்தில் ஒரு நாள்
வாழ்த்துக்கு இந்நாள்
வந்ததே உமக்காய்
வந்தோமே மகிழ்விக்க.

நலமுடனும் மகிழ்வுடனும்
வாழ்ந்திடவே, நண்பரே....
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம் .
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



https://www.facebook.com/photo.php?fbid=607850775921235&set=p.607850775921235&type=1&theater 


Tuesday, August 6, 2013

துடுப்பு. - இனிய நல்நாள் வாழ்த்துக்கள்



பரிசலாய் நானிருக்க,
பரிசலோட்டியாய் நீயிருக்க,
வாழ்க்கையெனும் கரையேற - உதவுமது
குடும்பமெனும் துடுப்புத்தான்.

இனிய நன்னாள் வாழ்த்துக்கள் நட்புகளே!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Thangam Krishnamurthy


 






Thangam Krishnamurthy 08/08/2013


எழுத்துகளை கூட்டுங்கள் 
இனிதான தமிழ் வடிவில்.
வாழ்வும் அமையட்டும்
இனிமையான தமிழ் போலே.

பயணத்தினால்  வாழ்த்துக்களை முன்கூட்டியே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.



வரவேற்கும் நண்பனாய்

Kvs Ram
July 9

புலரும் வேளைகளில்
புத்துணர்ச்சி பொங்கட்டும்.
அமர்ந்த நிலையிலும்
அத்தனையும் நிலைக்கட்டும்.

நட்பிணைப்பு கேட்டமைக்கு
மிக்க மகிழ்ச்சி.
நலமாய் தொடரும் எனும்
நம்பிக்கையுடன்,

வரவேற்கும் நண்பனாய்,
தவப்புதல்வன்.


 https://www.facebook.com/photo.php?fbid=609626225743690&set=p.609626225743690&type=1&theater&notif_t=like

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - வித்யாசாகர் குவைத் 2012

 

வித்யாசாகர் குவைத்
November 25, 2012

புடம் போடும் சொற்களை நீ படைத்தாய்.
புண் பட்ட மனதுக்கு மருந்திட்டாய்.
புன்னகை பிறந்திட முனைந்திட்டாய்.
புழுவாய் நடத்திடும் நிலை களைய,
புவியினில் நீயும் பிறந்திட்டாய்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.




https://www.facebook.com/photo.php?fbid=502977999741847&set=p.502977999741847&type=1&theater

Monday, August 5, 2013

எந்த நேரமும்...



கருக் கொண்ட மேகங்கள்
உருக் கொள்ளும் வேளையிலே,
நினைவுகளின் திவலைகள்
பொழிந்ததே நமை நனைக்க.
காற்றிடை வெளிகளில்
கமழ்கிறது உன் வாசம்.
சுகமளித்த நேரங்கள்
சொக்க வக்கிறது நினைவுகளை.
நீ உச்சரித்த வார்த்தைகள்
நீள்கிறது நதி போல.
உற்சாக குவியல்களாய்
நட்புகளோ குவிந்திருக்க,
நாதங்களாய் நமை மீட்டி,
இசைவெள்ளம்  பரவ செய்து,
இனிதான வாழ்த்துக்களை,
இன்றும் நாம் பகிர்ந்தளிப்போம்.

இனிய நல்நாள் வாழ்த்துக்கள் நட்புகளே !!!

நட்புகளுக்கோர் வாழ்த்து.



மனங்களை என்றுமே இணைத்திருப்போம்,
மலரும் எண்ணங்களை பதித்திடுவோம்,
நட்பிற்கோர் இதயமென நமைக் கூற,
சாதனையாய் காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்.
உறவுக்கு நட்பே முதலிருக்க
எந்நாளும் கலப்பின்றி கலந்திருப்போம்.

முப்பிறவியில் யாராய் நாமிருந்தோம்
இப்பிறவியில் நண்பராய் திகழ்வதற்கு.
எப்பிறவியாயினும் ஏழேழாயிருப்பினும்
இனிதான உறவுடனே இணைந்திருக்க,
சிறப்பான நாளிதிலே பகிர்ந்திடுவோம்
இனிய நண்பர்தின வாழ்த்துக்களை நமக்குள்ளே.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நட்பூக்களே!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Govind Bala




Govind Bala

அறுபத்தி ஒன்றைத் தாண்டி
இன்று வைத்த அடி,
அறுபத்தி இரண்டாக ஒளி வீச,
இது
அன்ன நடையோ,
ஆனந்த நடையோ,
அற்புதமாய் அது ஒளிர
நலமாக நூறையது
திடமாக கடந்திடவே,
அருள் புரியும் ஆண்டவனை
வேண்டி நின்றோம் உமக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Photo: அறுபத்தி ஒன்றைத் தாண்டி
இன்று வைத்த அடி,
அறுபத்தி இரண்டாக ஒளி வீச,
இது
அன்ன நடையோ,
ஆனந்த நடையோ,
அற்புதமாய் அது ஒளிர
நலமாக நூறையது
திடமாக கடந்திடவே,
அருள் புரியும் ஆண்டவனை
வேண்டி நின்றோம் உமக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
https://www.facebook.com/photo.php?fbid=623426054363707&set=p.623426054363707&type=1&theater

Saturday, August 3, 2013

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்



இன்று திருமண நாளைக் கொண்டாடும்
எனது அம்மா திருமதி. சுபி நரேந்திரன்
தம்பதியருக்கு உளம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
-
மலரே உன்னவர் முதல்
மல்லிப்பூ சூடிவிட்ட நாளிதுவே
செங்காந்தாள் பூமலரே நீ
செந்திலகம் ஏற்ற நாளிதுவே
சிரிக்கின்ற செங்கிளியே
மஞ்சற் கயிர் கழுத்தேரே
கண் கலங்கி நிற்கிறியே
தாய்வீடு வீட்டு போகணுமே
கவலைகளை சீதனமாய் சுமந்தபடி
மஞ்சளிடும் மரிக்கொழுந்தே
மலர் மஞ்சமேற்ற நாளிதுவே
மல்லிக் கொடி கைப்பிடிக்க
பிள்ளைக் கிளி என்று வர
சிறு பிள்ளையென திரிந்தவளை
தாய்மையில் தவழவிட்ட நாளிதுவே
உன் மண நாள்
திருமண நாள் வாழ்த்துக்கள்
மணம் நிறைந்ததாக
அமையட்டுமென
மண நாளில் வாழ்த்துகிறேன்
மனம் நிறைய திருமண நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்த வயதில்லை..ஆசி கேட்டு வணங்கி நிற்கின்றேன்!


By:
 
https://www.facebook.com/photo.php?fbid=616224231742310&set=a.287220821309321.74669.100000642151988&type=1&theater

Friday, August 2, 2013

அலைப்பேசி - இனிய மலை வணக்கம்

அலறி ஓய்ந்தது
ஆளின்றி.

"அலைப்பேசி"

இனிய மலை வணக்கம் நட்புகளே!



* இக்கருவுக்கு, வீதிகளில், கோவில்களில், பொது இடங்களில், குப்பைத்தொட்டி மற்றும் முட்புதர்களில் வீசி அனாதையாக விடப்படும், "அனாதைக்குழந்தைகள்" என்ற தலைப்பு தான் நினைவிற்கு வந்தது. இருப்பினும், மக்களிடம் தற்போது ஒன்றியிருக்கும் "அலைப்பேசி" தற்போதைய நிகழ்வுக்கு பொருத்தமாக கருதி பதித்திருக்கிறேன். கருவோ ஹைக்கூ. கருத்தோ.........

















aborted babies_







இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Susi Thirugnanam

 

Susi Thirugnanam


பூக்கும் புன்னகையோ
பூவிதழ் விரிக்க.
மகிழ்ச்சி என்றுமே
மனத்திலே இருக்க,
பொங்கும் புனலாய்
வாழ்வோ இருக்க,
கழியட்டும் பொழுதுகள்
நலமுடன் யாவும்.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

https://www.facebook.com/photo.php?fbid=622262411146738&set=p.622262411146738&type=1&theater



Thursday, August 1, 2013

சர்வதேச தாய்பால் தினம்



படைப்பிலே பாலூட்டும் உயிரினங்கள்  அனைத்தும் தன் குட்டிகளுக்கு  / குழந்தைகளுக்கு தன் பாலையூட்டி வளர்க்கும் போது, தாய்மார்கள் ஏன் தயங்கவேண்டும் தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்கே தாய் பாலையூட்ட? உங்கள் குழந்தை நலமுடனும், அறிவுடனும் வளர தவறாமல் தாய்பால் ஊட்டுங்கள். குழந்தைகளுக்காக எதைஎதையோ இழக்கும் நீங்கள், நீங்கள் நினைக்கும், உங்கள் அழகையும் கொஞ்சம் விட்டுக் கொடுங்களேன்.

தாய்பாலூட்டும் அனைத்து தாய்மார்களுக்கும், இன்றைய  "சர்வதேச தாய்பால் தினத்தில்" எங்கள் அன்பான வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும்.  

முகம்- குறுங்கவிதை. - இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.



நிகழ்ந்த நிகழ்வுகள்
மனத்தினில் ஓட,
நொடிகளுக்கு இடையே
மாற்றம் கண்டது.

இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.