Translate

Sunday, May 31, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து - சேலம் ஊர்வசி மேட்சிங் சென்டர் தேதி: 12/2/2013



தனியாத தாகமாய்,
தகதகக்கும் நிலைக் கொண்டு,
தரணியெல்லாம்
தன் கிளைப் பரப்பி,
தங்கமயிலாய் வலம் வர,
உற்சாக துள்ளலாய்
ஊர்வலத்தில் மிதந்து வரும்
"ஊர்வசி"க்கு யாம்
இனிதான பிறந்த நாளுக்கு
தாமதமாய் இருப்பினும்
இன்முகத்துடன் வாழ்த்தினோம்
வளர்க சிறப்புடன், நல்மதிப்புடன்.

#மிக தாமதமாக இதில் பதிவிடப்பட்டுள்ளது 

வாக்கு மூலம்

வாக்கு மூலம்

பிரம்மா தேவனின் படைப்பினிலே
அழிக்கவியலா இனமெமது.
எமகிங்கர்களாய் செயல்படுகிறோம்
எமதர்மராஜ உத்தரவுபடி. 
வாழ்விலே பங்காளிகளாய்
ஒருவரை ஒருவர் ஒழிப்பதில்

இப்படிக்கு,
கொசு 

இல்லையெனினும்

செயலுக்கு குறைவில்லை
ரசிக்கின்ற மனமில்லை
உறவுக்கு இடமில்லை
உணர்வுக்கு தடையில்லை
காட்சிக்கு பஞ்சமில்லை
கனவுக்கு ஏது எல்லை
ஆற்றலுக்கு எல்லையில்லை
வஞ்சிக்கும் நினைவில்லை
வாழ்வோ நிலையில்லை
வாழ்விலும் சுகமில்லை.
இல்லையெனினும்
நினைவை தடை செய்ய -
-வழியில்லை.

Saturday, May 30, 2015

யானும் இயம்புகின்றேன்

எட்டா உயரத்திலே
ஏணி தொடா நிலையினிலே
ஏராளக் கனிகள்
எழுநூறாய் இருந்தாலும்,
பஞ்சாய் பழுத்து
பதமாய் இருந்தாலும்,
பாழும் மனம் ஏங்கையிலே
பந்தி வைக்க முடிவதில்லை.

ஏனோ சொல்லி வைத்தான்
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டால்
கொடுப்பினையில்லை முடவனுக்கென்று.
ஆம்...
யானும் இயம்புகின்றேன்
மதி மயங்கும் நிலையினிலே
நாவரண்டு நடப்போன் முன்
நற்கனிகள் ஆடினாலும்
எட்டா நிலையாயின் - அவன்
தாகம் தீரப்போவதில்லை     

போய்விடும்

அச்சில்லா நிலையினிலும்
நிலையாக சுழன்று வரும்
இப்புவி,
ஒரு நொடியில் சிறு துளி
அசைந்தாலும்,
அசைந்து விடும்
நிலையில்லா இவ்வாழ்க்கை
நிலையாய் நிலையற்று-
போய்விடும் 

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் - கிருத்திகா & அசோக் Dt: 01/02/2013


ஏட்டுப் படிப்பினிலே
வெண்ணிலா போன்று
ஏற்றம் கண்டவளே,
கூடும் குடும்பத்திலே
கூடட்டும் என்றும் மகிழ்வலை.

ஓராயிரம் கனவுகள்
ஒவ்வொன்றாய் நிறைவேற.
ஓயாமல் செயல்பட்டு
ஒப்பற்ற நிலையுடன் நீ....

வீறுநடை போடும்
அஸ்வின் குமாரின் கரம் பிடித்து
விண்ணிலே வலம் வரும்
விளக்கொளியாய் ஒளிரட்டும்
குடும்பமுடன் உன் வாழ்வும்

ஆதியும் அவளே
அந்தமும் அவளே
அவளே உன் அன்னை - அந்த 
'ஆதிலக்ஷ்மி' யின் உயிரே

உடனிருந்த தோழனாய்
உயர்வுக்கு காட்டியாய்
உடமைக்கு உரியவராம்
அசோக்  புதல்வியே.

கரம் பிடிக்கும் இந்நாள்
புனிதமான நன்னாள்.
இன்றுபோல் எந்நாளும்
இனிதான நினைவுகளுடன்
மகிழ்வும் நலனும்
நிலையாய் நிலைக்க

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் கிருத்திகா.

அன்புடன் நல்லாசிகள்,
B.சத்யநாராயணன்
சுபாஷிணி  நாராயணன்

ஆக்கம்: தவப்புதல்வன் 

என் சொல்வேன்?

உயிரையும் கொடுத்து
மெய்யையும் கொடுத்து
உயிர் மெய்யாய் உலவ விட்டு,
ஆட்டுவிக்கிற
அருவமாய் நீ இரு(க்க) ந்து
அன்றாட பணிகளை
யான் முடிக்க,
நிகழ்வுகளை நிகழ்த்துகின்ற
நின் செயல்களை
அறியா அறிவிலியாரை
என் சொல்வேன்?

புதிதாய்

புதுப்புது எண்ணங்கள்
புதுப்புது ஆசைகள்
புதுப்புது தேவைகள்
புதுப்புது நிகழ்வுகள்
புதுப்புதிதாய் எல்லாம்
புரிந்தது சிலவும்
புரியாதது பலவும்
புதிராய் தொடர்ந்து
புழங்குகின்ற வாழ்வில்
புதுமைக்கும் பழமைக்கும்
புரிதல்களின்றி
புழுதியாய் ஆகாமல்
புகட்டும் அனுபவங்கள்
புதிதாய் அத்தனையும்



















Friday, May 29, 2015

அருகிலின்றி



அழகான பூக்களாய்
அத்தனையும் பூத்திருக்க
அவளேனோ
அருகிலின்றி வெறுமையாய்.

அடுக்கடுக்காய் செய்திகள்
ஆகாயத்தில் பறந்து செல்ல
அல்லாடுது மனம்
அடைந்ததாவென அறிய

அன்பான நாள், நட்புக்கு
ஆனந்தமாகட்டும் என்றென்றும்
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே

வாழ்க்கை ஏக்கங்கள்



வாழ்க்கைப் பாடத்தில்
ஏமாற்றப் பள்ளங்கள்
அவள் மனத்தில் ஏராளம்.
 வாய் சுட்ட சொற்களால்
வடுக்களுடன் புண்களும்
அவன் மனத்திலும் ஏராளம்.

முடிச்சிட்ட அவனோ
முடிச்சவிழ்க்க தெரியாமல்
கலங்கியவனாய் துடிக்கிறான்
காலக் கூற்றினை எதிர்நோக்கி.

அறிய செய்யுமோ - அவள்
மனம் நிறைய, வழி காட்டி.
கரைந்து விட்ட காலத்தால்
பயனது இருக்குமோ?

ஏக்கத்தின் பிடிக்குள் - இரு 
உள்ளம் அல்லாட
புத்தூற்றாய் மகிழ்வு பொங்க
புது வழி பிறக்குமோ

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Arthi Rajesh



Arthi Rajesh

ஆர்த்தி உனது வாழ்க்கை
அருமையாய் அமையட்டும்,
ஆண்டவன் அருளால்
ஆனந்தமாகட்டும் என்றென்றும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே!

Thursday, May 28, 2015

இலட்சியம்



தவழ்ந்த புவியை பார்க்கவில்லை
வழி பார்க்க விழிகளில்லை
ஊன்றுகோல் துணையிருக்க
ஊர் சுற்றும் இரயிலேறி
ஓயாமல் உழைகிறாரே - வாழ்வு
பிழையின்றி சுழன்றோட.

நன்மக்களாய்  வாரிசுகளும்
நிலையுணர்ந்து கற்றனரே,
தந்தையின் சுமை நீக்கி
தங்கள் வாழ்வை உயர்த்திடவே.
நிலைதனையும் அடைந்தனரே
பணிகளில் காலூன்றி.

வயது முதிர்ந்த காரணத்தால்
காலாட காற்று வாங்கி
காலமதை வீணாக
போக்கிட விரும்பாமல்,

தேவையில்லா நிலையினிலும்
தோளிலினியும் சுமை தூக்கி
தெரிந்த வழி ரயிலேறி
முடிந்தவரை உழைத்திடவே
பயணமதை தொடர்கிறாரே.

 விழி வேண்டி 
வருடங்கள் முப்பதோட
காத்திருக்கும் விழிகளுக்கு
விடையென்று கிடைத்திடுமோ?
கண் குளிர கண்டிடுமோ -  குடும்பத்தை
களிப்புடன் கொஞ்சுகின்ற
காலமது வந்திடுமோ?

#மண்ணுக்கும், தீயிக்கும் இரையாக்காமல்
இரக்கமுடன் செயல்படுங்கள் கண்தானம் கொடுக்க.    

மகிழ்விக்க


நானொரு கவிஞனில்லை
அருவியாய் கவி பொழிய.
மழைச்சாரலால்
மலைச்சாரலில்
ஓடையது நூலிழையாய்
ஓடிவரும் சிறுபொழுதில்
நனைந்து நான் குதுகளிப்பேன்
நாடிவரும் உமை மகிழ்விக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Anandaradje Auguste




Anandaradje Auguste

ஆண்டவரின் அருள் ஒளியோ
அகலாமல் நிலைத்திருந்து,
அன்றாடம் கழியட்டும்
குதுகலமாய் உம் வாழ்க்கை.

நாடாத நலனும்
தேடிவந்து உமை சூழ,
சாட்சிகளாய் திகழட்டும்
கருணையாளன் அவன் வடிவில்.
ஆசீர் வழங்கினோம்
உயர்வுடனும் சிறப்புடனும் வாழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அல்லுடுகாரு.

Friday, May 22, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - சுபஹர், நித்யா - JP's கவிதைகள்



அனைவரின் அன்புடன்
ஆனைமுகனின் ஆசியால் 
இன்ப வாழ்வு நிலைக்க
ஈசனின் இறையருளால் 
உடலும் உள்ளமும் நலமுடன் திகழ
உலகளந்த பெருமானின் உந்துதலால்
ஊக்கமும் ஆக்கமும் பெற
என்றுமே எந்நாளும் ஏற்றமே  அடைய
ஐயமின்றி அருள்வான்.
ஒப்பில்லாப்பன் ஓங்காரநாதன்
ஔதடமாய் எஃகினைப் போல் உறுதியளிக்க
ஆசிகள் எங்கள் நல்லாசிகள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

By: JP's கவிதைகள் 

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - ரகுராம் சுரேகா - JP's கவிதைகள்



நல்வாழ்வும், செல்வ செழிப்பும்
கடவுளின் கருணாவிழி கடாஷமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு
நீவீர் இணைந்து இல்லறம்
நல்லறமாக நடத்த
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

#எமது படைப்புகளுடன், ''JP's கவிதைகள்'' என்ற தலைப்பில் எமது சகோதரி எழுதிய, எழுதும் வாழ்த்துக்கள் இந்த ஆம்பல்மலர் வலைதளத்தில்  தொடரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள்,
தவப்புதல்வன்.

Tuesday, May 19, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் - ஶ்ரீ.சரஸ்வதி, ஶ்ரீ.பட்டாபிராமன்

இருவரும் ஒருவராய்
எண்ணத்தில் சிறந்தவராய்
வாழ்க்கையின் குறிக்கோளை
வண்ணங்கள் பல கொடுத்து
வரைகிறீர் ஓவியமாய்
துவங்கிய இந்நாளில்.

ஆனந்தமாய் வாழ்ந்திட,
நலமாய் திகழ்ந்திட,
இறையருள் தொடர்ந்திட,
என்றுமையவன் சீராட்ட,
பரம்பொருளவன் பாதந்தனில் பணிந்தோம்.

வாழ்த்துக்களை பகிர்ந்து
மகிழ்வான நிலையில்
கரங்களைக் குவித்தோம்
உம்மாசிகளை பெறவே.


Monday, May 18, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Rishab Adharsh

புட்டின ரோஜு ஆசிர்வாதமு ரிஷப் ஆதர்ஷ்

கனவுகளின் குறிக்கோளை
நினைவுகளில் நிசமாக்க,
முன்னேற்ற படிகளில்
அடி வைக்கும் நேரமிது.

கல்வியின் உயரங்கள்
முன்னோக்கி உயர் உயர,
வீறு கொண்டு விரைவாக
எட்டி விட தொடர்ந்திடுவாய்.

நலன்களெல்லாம் இறை தந்து
சிறப்பாக உனை சீராட்ட,
ஆனந்தமாய் நீ வாழ
வாழ்ததினோம் மகிழ்வாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரிஷப் ஆதர்ஷ் பேரனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Surekha Raguram

சுரேகா புட்டின ரோஜு ஆசிர்வாதமு.

அழகான பட்டமாய் வாழ்க்கையிது.
உயரத்தில் பறக்கட்டும் வாழ்விலது.

அசைந்தாடி மகிழ்விக்கும் வாழ்க்கையிது.
பறக்கட்டும் நிலையாக வாழ்விலது.

அனுபவிக்கும் நிலையிந்த வாழ்க்கையிது.
ஆனந்தம் நிலைக்கட்டும் வாழ்விலது.

ஆசைகள் நிலைக்கொண்ட வாழ்க்கையிது.
அவையாவும் நிறைவேறட்டும் வாழ்விலது.

பூசுகின்ற வண்ணமாய் வாழ்க்கையிது.
பளப்பளப்பாய் மிளிரட்டும் வாழ்விலது.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் - ஶ்ரீயா & பிரனவ்

விரல்கள் விளையாட
பியானோ பிள்ளையாக
இசையை ரசித்தோம்
கட்டுண்ட நாகமாக.
இசையுலகில் உயரமாக
உயர வேண்டும் சிறப்பாக.

ஆசீர்வாதங்கள் ஶ்ரீயா & பிரனவ்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - அனிகா

அத்தையம்மா உனை வாழ்த்த
அருகிலிருந்து கேட்டிருந்தேன்.

ஆண்டவனின் அருளுடனே
எங்களாசிகளும் கலந்திருக்க,

சாதனையாய் சாதிப்பாய்
சாதனையை முறியடித்து.

உவ்வகையுடன் நீ வாழ
உளமாற வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அனிகா

Saturday, May 16, 2015

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - பிரசன்னகுமார்

தந்தையின் செயலுணர்ததும்
தாயின் தலைமகனே!
அனுபவத்தில் பல கற்றாய்
ஆர்வமுடன் செயலாற்றி.
செயலணைத்தும் செம்மையாக
செயல்படுத்தி வளமையாக,
புடம் போட்ட தங்கமாக
தன்னிகரின்றி நீ திகழ்ந்து,
அறிந்தோர் போற்றும் உயர்மகனாய்,
அவதரிப்பாய் விரைவாக.
அகிலம் போற்றும் அம்மையவள்
அருளுரைத்து உமைக்காக்க,
நலம் நாடும் நாங்களும் 
வாழ்த்துரைத்தோம் உனக்காக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிரசன்னகுமார் மருமகனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - ஜான்சன்

" சாதிக்கப்பிறந்தவர்கள்""
குழுவில் உள்ள நண்பர் ஜான்சன் அவர்களை பிறந்தநாளுக்காக வாழ்த்துங்கள் நண்பர்களே!

நோக்கங்கள் தெளிவாகட்டும்,
முயற்சிகள் வெற்றியடையட்டும்,
தன்னம்பிக்கை உறுதியடையட்டும்,
உம் வாழ்வு உயர்வடையட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Johnson.

💐💐💐💐💐💐💐💐💐

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - காயத்ரி வைத்யநாதன்

விழிகளில் நுழைய
சொற்கள் போதும்.
இதயத்தில் நிலைக்க
நட்பது வேண்டும்.
நட்பு மகிழ
நாட்கள் இருக்கு.
அன்பினை பகிர
வாழ்த்துக்கள் இருக்கு.
நலனுடன் மகிழ்வாய்
காலங்கள் கழிய,
இயம்பினோம் இனிதாய்
நட்புமக்கு இன்று.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவித்தோழியே!!!

Thursday, May 14, 2015

இனிய நாள் நல்வாழ்த்துகள்

அருளுரைத்த நாட்களெல்லாம்
ஆனந்தமாய் கரைக் கடக்க,
அள்ளித் தெளித்த அன்பெல்லாம்
அலையென புரண்டு வர,
ஆவலாய் காத்திருந்தோம்
அருமை நட்பை எதிர்நோக்கி.

ஆடட்டும் நினைவுகள் மகிழ்வாக

அரிய பொழுதாம் இந்நிலையில்.

இனிய நாள் நல்வாழ்த்துகள் நண்புகளே!


இனிய நாள் நல்வாழ்த்துகள்

அடுக்கடுக்காய் இதழ் விரித்து,
அதிலே மகரந்தம் குவித்து  வைத்து,
காற்றில் அதுவாட,
மனமது சேர்ந்தாட,
இருவிதழ் திறந்து உரையாட,
கலந்தது இதயம் நட்போடு.


இனிய நாள் நல்வாழ்த்துகள் நட்பகளே!

சாரல் மழை

அல்லோகலச் செய்திகளாய்
அலசப்பட்டுக் கொண்டிருந்தது
வெள்ளக்காடென
காங்கர்ட் கட்டிட
நகரங்கள்.

மூழ்கியிருந்தான் கவலையில்
விவசாயி,
கண்ணத்தில் கை வைத்தபடி.
புவியூறா
மழைத்துளி நினைத்து.


Wednesday, May 13, 2015

ஏக்கத்திலும்



நனைந்திட ஆசை
தடுக்குது மனது.
மாலை நேரம் 
மழையுடன் காற்று,
மனத்தை மயக்கி
அழைக்குது இணைய.
ஆசையோ இருக்கு
ஆடிப்பாட,
வாயதோ முறைக்குது
வம்பெனச் சொல்லி.
வாடாநினைவுகளுடன்
வாழ்த்துக்கள் சொல்வோம்.
கோடைமழையை 

வரவேற்று நாமும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - பிரியதர்ஷினி

Priya Dharshini

சில்லென்ற காற்று
திரும்பிய பக்கமெல்லாம்.
சுவாசத்தில் கலந்தது
சுகந்த வாசமாயது.
ஆனந்தமான மனம்
துள்ளியது குழந்தையாய்.
என்றுமே இதுபோல்
உன் வாழ்வு அமைய,
வாழ்த்துக்களை வழங்கினோம்
பாசமும் நாங்கள்.

மகிழ்ச்சியில்,
பெரியப்பா, பெரியம்மா 

Wednesday, May 6, 2015

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்- N G V Sankar




N G V Sankar


ஆஹா.. அழகு
அற்புதம் 
ஆனந்தம்
அறிந்ததும் நெஞ்சம் 
ஆழ்ந்தது மகிழ்வில்.

இரண்டறக் கலந்த
இல்லற வாழ்க்கை,
இறைவனின் அருளால் 
இனிக்கட்டும் என்றும்.

இறைவனிடம் பணிந்தோம்
இன்புற்று நீவீர் வாழ,
குவித்தோம் கரங்களை
ஆசிகள் உம்மிடம் பெறவே.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Shanmuga Murthy 01/11/11


சண்முக மூர்த்தி ஐயா அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துவோம், வாருங்கள் நண்பர்களே.
I send to you warm wishes,that your happiness will be as wonderful as the happiness, wish you happy birthday sir.
ஆறுமுகனின் நாமத்தில்
நாமம் ஒன்று கொண்டவரே!
சலசலக்கும் உம் மனமோ
ச[ஷ]ண்முகன் அருளாலே
சந்தோச நிலையுடனே
சந்தையெனும் உலகினிலே
சங்கிதம் பல பாட
சாட்சிகளாய் உம் குடும்பம்
சேர்ந்தணைத்து  குதுகளிக்க
சேரும் இன்பம் அத்தனையும்
பகிர்ந்தளித்து நீர் கொண்டாட
விழாவின் நாயகனாய்
விழி பூத்த மன்னவனே
மங்களங்கள் உமை சூழ
மகிழ்ச்சி என்றும் நிலையாக
நலமுடனே பல்லாண்டு
புகழுடனே வாழ்ந்திடவே
மனமுவந்தே வாழ்த்தினோம்
உம் இனிய பிறந்த நன்னாளிலே.

அன்புடன்,
தவபபுதல்வன் @
A.M.பத்ரி நாராயணன்.

பின்குறிப்பு:-


#நண்பர் Shanmuga Murthy அவர்களின் பிறந்த நாளுக்கு 01/11/11 அன்று ஆம்பல் பதிக்க வேண்டியது.
தவற விடப்பட்டதால் இன்று பதிக்கப்பட்டது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tvn Tvnarayanan - 30/10/11


 



Tvn Tvnarayanan

எக்கனி சுவைக்  கொடுக்கும்
முக்கனி சுவைப்போல்
அக்கனி  சுவைப்போல
வருடங்கள் கழிந்தாலும் 
ஸ்ரீ வேங்கடத்தான் அருளோடு 
சுவைக்குன்றா நிலையாக 
பக்தனுமக்கு நீக்கமற நிறைந்திருக்க
அவன் பாதந்தனில் சரணடைந்தோம் 
இணையுடன் இணைந்திருந்து 
குறைவற்ற நலமுடன் 
பல்லாண்டு மகிழ்வாக 
வாழ்வாங்கு வாழ்ந்திட 
வாழ்த்தினோம் உம்மை 
இனிய பிறந்த இன்னன்னாளிலே.
 
 
#இதில் பதிக்காமல் தவற விடப்பட்ட முந்தைய வாழ்த்து. 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - வசந்தகுமார் on 27/09 /11




Vasanthakumar Graphicdesigner


வாழ்க்கையின் மாற்றங்கள்
வசந்தமாய் உம் வாழ்வில்
வாழையடி வாழையாய்
வானோக்கி உயர்ந்து
வளமாய் மகிழ்வாய் வாழ
வாழ்த்தினோம் உம்மை

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி

#இதில் பதிக்காமல் தவற விடப்பட்ட முந்தைய வாழ்த்து.

பாவி நான்



பூவிதழாய் விரிந்ததோ
விழியிரண்டும்,

குடைப் பிடித்ததோ
மையிட்ட இமையிரண்டும்

குழி விழுந்ததே என் மனத்தில்
உன் கன்னத்தால்
.

வண்ண மாற்றம் அடைகிறதே  
செழுமையான உன் முகத்தில்.

 பாவி நான் தவிக்கின்றேன்
பார்வையால் உனைத் துளைத்து.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன்



பாவலர் இராஜ. தியாகராஜன்

எழுதுகின்ற எழுத்துக்கள் உயிர் பெற வேண்டும்.
அதற்கு தமிழென்றே பெயராக வேண்டும்.
அழகுக்கு அழகாக வேண்டும்
அன்னையவள் அணி புனைந்து மகிழ வேண்டும்.
அடியவரான உம் புகழ் என்றென்றும் நிலைக்க வேண்டும்
அதற்கு பண்ணார் வண்டமிழ் அன்னை அருள் புரிய வேண்டும்.

ஆண்டவன் அருளால்
நலன்கள் கூடி
மகிழ்வாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.