Translate

Saturday, July 12, 2008

மணமகளை பார்த்த படலம்

உடலோ இங்கிருக்க,

மனமோ அங்கிருக்க

நடக்கின்ற நிகழ்வுகளை,

கைப்பேசி உதவியுடன்

கேட்டுணர்ந்த செய்திகளை

வண்ணமிகு காட்சிகளாய்

ஓடிடும் திரைபடமாய்

கற்பனையில் உருவாக்கி

களித்திடும் நிலையினிலே

காட்சிகளாய் விவரிப்போம்

நீங்களும் செவிமடுத்து

கேட்டுத்தான் இன்புறுங்களேன்.

காட்சி - 1.

நாட்கள் பல கழிந்த பின்னே,

ஒன்று கூடிய உறவினமோ

நடந்த பல நிகழ்வுகளை

நினைத்து, அதை அசைப்போட்டு

ஆனந்தமாய் உறவாடி

கலகலக்க செய்து கொண்டு,

இரவு பயணத்தையும்,

பகலாக ஆக்கிக்கொண்டு,

நெடுநேரம் கழிக்க,

உடலோ ஓய்வு கேட்டு

கண்களையே கிறங்க வைக்க

ஓடும் வண்டியிலே அமர்ந்தபடி

சிற்றுறக்கம் செய்தனரே.

காட்சி - 2

பயணித்த வாகனமோ,

மணமகளை நாடியே

மணமகனையும்

சுமந்துக் கொண்டு

மேடுப்பள்ள சாலையிலும்

சளைக்காமல் ஓடிச் சென்று

அதிகாலைப் பொழுதினிலே

நகரத்தை அடைந்ததுவே.

கண் விழித்த உறவினமோ,

சுறுசுறுப்பை அடைந்திடவே

சுவைக் குழம்பி வேண்டியே,

குழம்பியகம் தேடியே - கண்களை

அலைப் பாய விட்டனரே.

குளம்பியகம் கண்ட

மகிழ்ச்சியதில்,

கூப்பாடு போட்டதில்,

அதிர்ந்துத்தான் போனதே,

வண்டியும்

குலுங்கித்தான் நின்றதே.

காட்சி - 3.

அவரவர் விருப்பந்தனில்

குழம்பிகளை தேர்ந்தெடுத்தும்!

செல்ல வேண்டிய இடங்குறித்து

உடன் கேட்ட அறிவிப்பால்,

வாய் பொருக்கா சூடிருந்தும்

மனம் விரும்பிய ஆவலினால்

ஊதி ஊதிக் குடித்தனரே.

வேகமாய் -

உறுஞ்சித்தான் குடித்தனரே.

குழம்பிகளை குடித்த பின்னே,

உற்சாகம் வந்த நிலையில்

உடலையும் கைகளையும்

முறுக்கியே உதறி விட்டு,

செல்ல வேண்டிய இடங்குறித்தும்,

செய்ய வேண்டிய செயல் குறித்தும்

திட்டங்கள் தீட்டியபடி

பயணத்தைத் தொடர்ந்து,

இடமதை அடைந்தனரே.

காட்சி -4

சந்துபொந்து பல திரும்பி,

மண்டபத்தின் முன்னதுவே

மணமகனை இறக்கி விட்டு,

ஓயாமல் ஓடி வந்த

வண்டியும்-

களைப்பதனை நீக்கிக் கொள்ள

மகிழ்ச்சியாய் பெருமூச்சை

பலதடவை வெளியிட்டு

இடம் பார்த்து ஒதுங்கியது.

தங்குமிடம் அடைந்ததுமே,

காலைக்கடன் முடித்து கொண்டு,

உடலும் வாயும் கழுவி விட்டு,

ஒப்பனைகள் செய்து கொண்டு,

விரைந்தனரே-

சிற்றுண்டி அருந்திடவே.

காட்சி-5.

சிற்றுண்டி முடிந்த பின்னே,

சிறுபொழுது கழிந்த பின்னே,

மணமகளும் தனைக்காட்ட,

மணமகனை நாடி வந்தாள்,

இருந்த இடம் தேடிவந்தாள்.

இருவீட்டு உற்றாரும் உறவினரும்

புடை சூழ்ந்து பார்த்திருக்க,

அண்ணநடை பயின்ற மகள்-

அரங்கிற்கு, உள் நுழைந்தாள்.

மணமகளைக் கண்டிடவே

காத்திருந்த மணமகனும்,

கண்கொத்தி பாம்பாக

விழிகளையே அசைக்காமல்,

வைத்த விழி மாறாமல்

அவளழகை பார்த்திருந்தான்.

மணமகனின் நிலையறிய

குனிந்த தலையை சிறிதுயர்த்தி

மீன்விழியை ஓட விட்டாள்,

மின்சாரம் பாய விட்டாள்.

விழி நான்கும் ஒரு நொடியே

சந்தித்து பிரிந்தாலும்

உற்றதுணை நமக்கிதுவே

என்றநிலை எடுத்துக் கொண்ட

அவன் முகத்தில்

ஒளிவெள்ளம் பாய்வதையே

கண்டு கொண்டவளோ,

மணமகனை பார்த்தபடி,

ஆனந்த வெள்ளமதில், முகமோ

செவ்வொளி படர்ந்தபடி,

விண்மீன் நிலைப்போல

கண்களையே சிமிட்டி- அவள்

புன்முறுவள் பூத்தாளே.

காட்சி-6

நாமிருவர் இணையும் வரை,

உற்றதுணை இதுவென

கைப்பேசி ஒன்றதனை

ஆவலுடன் பரிசளித்தான்.

என் நினைவு அகலாது

என்றுமே இணைந்திருக்க

அவன் விரலில்- அவளும்

கணையாழி ஒன்றினையே

அணிந்துத்தான் விட்டாளே.

விடைப்பெற்ற நேரத்திலே

கையசைத்த மணமகனை

கண்டு அவள்,

கையசைக்க தயங்கி நின்றாள்.

பிரியவே மனமின்றி,

சில நொடி கடந்த பின்னே,

சிறிதாக கையசைத்தாள்,

விழிகளில் ஏக்கம் காட்டி.

Wednesday, July 9, 2008

குழந்தை பாட்டு- கடலும் நாமும்

கடலும் நாமும்
************************
அடுக்கடுக்காய் கடல் அலைகள்
ஆர்பரிக்கும் நிலையிலே
அச்சமென்பது உயிரியிலே
ஆசையென்பது மனதிலே
அளவற்று இருக்கையில்
அத்துடனே விளையாடி
ஆனந்தமாய் நனைந்துக் கொண்டு
அலைகளையே கலைத்து விட
அதனருகில் சென்று நாம்
ஆர்பரிப்போம் இணையாக.
அலைகள் வரும் வேகம் கண்டு,
புறமுதுகிடுவோம் விரைவாக.
காலை பிடித்து இழுத்து விடும்,
நொடி பொழுதில் கரைந்து விடும். (இமைக்கும் நேரத்தில் மறைந்து விடும்.)
கண்ணை திறந்து பார்க்கையிலே,
அடுத்து வரும் அலைகளைக் காண்போம்.
அலையை அணைத்து ஆனந்தம் அடைவோம்,
எண்ணிக்கையின்றி அணைத்துக் கொள்வோம்.
ஓடிய கால்கள் களைப்பில் கெஞ்சும்,
மனத்தின் மகிழ்ச்சியில் அத்தனையும் மறையும்.
விலகி செல்ல மனமோ இல்லை,
மனத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையோ இல்லை.
விண்ணை மறைத்து கருமை பூச,
நிலவை காண கண்கள் அலையும்.
நிலவை கண்டு கடலும் பொங்கும்,
அத்துடன் நமது மகிழ்வும் பொங்கும்.
இரவு பொழுதில் மனமே இன்றி,
பிரியா விடையை கடலுக்குச் சொல்லி
திரும்பி செல்வோம் வீட்டுக்கு நாமும்.

Tuesday, July 8, 2008

அன்று நீ - இன்று நான்.

நயவஞ்சகமாய்- எனை
வலையிலே வீழ்த்தி,
என் கனியிதழை உறுஞ்சி,
காவியமென கிறுக்கி,
கற்புதனை கவர
நல்லவனாய் நடித்தாய்.

நட்பென தொடங்கி,
நாயகனாய் நினைத்து,
நயமாய் பேசிய - உன்னிடம்
இதழுடன் மனத்தையும் இழந்தேன்.

அச்சாரமென
அதரத்தில் பதித்து ,
அவசரமாய்- என்னுடலை
அடையப் பார்த்தாய் .

உடலோடு உறவாட,
ஊரறிய உறவுதனை
உருவாக்கிய பின்னே,
உனக்கு நான் உரிமையென,
உறுதியாய் நானிருக்க
உதறி விட்டு சென்றாய்,
ஊருறங்கும் நேரமதில்.

உன் வாயிதழோ,
விசக்கொடுக்கு.
இன்று நான்
அறிகின்றேன்.

அன்று ஆசையில்
அலைந்த என் அதரங்களோ,
அமிலத்தில் வீழ்ந்தது போல்,
அரிக்கின்ற அவதியினை
அனுதினமும் உணர்கின்றேன்.


பின் குறிப்பு :::

அன்று எனைப் பற்றி எழுதியதை, காவியமென நினைத்தேன் கயவனே. இன்று உனைப் பற்றி கிழித்திருக்கிறேன், எனக்கு தெரிந்த கிறுக்கல்களால்.

உதடுகளின் ஸ்பரிசம்

கனியிதழ் என்றால்
கனிரசம் சுரக்கும்.

பூவிதழ் என்றால்
தேனினை சுரக்கும்.

செவ்விதழ் என்றால்
மதுரமாய் இனிக்கும்.

பனித்துளி பூத்த இதழோ
பருக துடிக்கும்.

மென்பஞ்சு இதழோ
தடவிக் கொடுக்கும்.

காதலால் உன் இதழோ,
காந்தமாய் கவரும்.

உன் இதழினை உரசினால்
மதியும் மயங்கும்.

கள்ளுண்ட மந்தியாய்
கண்களும் கிறங்கும்.

மயக்கத்தில் கைகளும்
காவியம் படைக்கும்.

பாவை - நீ,
என்னிடமிருந்தால்
பரவசமாகும்.

இதழோடிதழ்
இன்றிணைந்த பொழுதே,
இன்பமாயிருக்க,

உடலோடு உடலும்
உறவாடிக் கொண்டால்,
உயிருள்ள வரையும்
உற்சாகமாய் இருப்போம்.

உரியவரென்றே
உரிமையில் நாமும்
உடலை பகிர்வோம்.
உற்ற நாளின்றே என்றென நினைத்து.

அவனையும் தீண்டும் !

உணர்வுகளோ விழித்துக் கொள்ள,
இதயமோ துடித்துக் கொள்ள,
உணர்வுகளோ ஏங்கி நிற்கும்.
அவன் நினைவாலே
மனமோ மருகி நிற்கும்.

தனிக்கையர் இன்றி
ஒட்டுதல் வெட்டுதல் இல்லா
சிறு சிறு காட்சிகளாய்
விரிந்தோடும் திரைப்படமாய்.

வெண்திரை இல்லை,
படமோட்டும் கருவியுமில்லை,
காணவோ கண்கள்
தேவையில்லை.

மனமோ காட்டும் படமாய்
உணர்வுகளே பார்க்கும் கண்களாய்
விரிந்தவையெல்லாம் இனிக்குமா?
மகிழ்வை மட்டுமே
விரிக்கத் தான் முடியுமா ?

அத்தனை காட்சிகளும்
கலந்துதான் இருந்தாலும்,
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு
பிரிந்து தான் நிற்குமே.

உள்ளொன்று வைத்து
புறமொன்று காட்டா,
உள்ளது உள்ளபடியாய்
உணர்வுகள் உணர்ந்ததையே
மனமோ ஏற்றதையே
கண்கட்டு வித்தையின்றி
கண்களை கட்டியே விட்டாலும்,
காட்சிகள் நிற்காமல்
காட்டாற்று வெள்ளம் போல,
கரை புரண்டோடும்.

கணவனாய் நினைத்து,
காதலனாய் வரிந்தேன்.
காணாமல் போய் விட்டான்,
கண்ணை விட்டு மறைந்து விட்டான்.

எனை விட்டு போனாலும்,
என்னுயிர் போகும் வரை,
அவன் நினைவு அகலாது,
அவனையும் தீண்டும்
என் நினைவு.