Translate

Showing posts with label திருஷ்டி. Show all posts
Showing posts with label திருஷ்டி. Show all posts

Monday, November 7, 2011

திருஷ்டி


ஆடிக்காற்றே,
அம்மாவாசை இருட்டே,
காட்டுக் கருப்பே,
கருங்குயிலாய் குரல் ஒலிக்க,
கானமயிலாய் நடை அமைய,
கருவிழியில் மை தீட்டி,
கார்கூந்தலில் பூ வைத்து,
கருஞ்சிவப்பு சாந்திட்டு,
கன்னத்தில் திருஷ்டி பொட்டிட்டு,
கலக்குகிறாய் அனைவரையும்.
கலக்கமடைந்து
கதறியே ஓடுகிறார்,
கற்பனையில் தேவதையாய்,
கனவுகளில் உனைக் கண்டு,
கவர்ந்து செல்லவே
கணைத் தொடுத்து வந்த
கருங்குரங்கு பட்டாளங்கள்.



பின்குறிப்பு:- யாருடைய மனத்தையும் புண் படுத்தும் எண்ணமில்லை. இருக்கின்ற அழகை, அலங்கோலப் படுத்திக் கொள்ளும் பெண்களுக்கும், தன் நிலை உணராமல் நிலையில்லா அழகை தேடும் ஆண்களுக்காகவும், அவர்களின் மனநிலையை அறிய எழுதப்பட்டது.