Translate

Showing posts with label இப்படியுமா.... Show all posts
Showing posts with label இப்படியுமா.... Show all posts

Wednesday, July 23, 2014

இப்படியுமா...


உறங்கும் நேரத்திலும் 
உறங்காமல் இருந்தது.
விடியும் காலத்திலே  
விழிக்க வைத்தது 
காலை முதல் மாலை வரை
கடனென கழிந்தது.
மாலை பொழுதிலும் 
மல்லுக் கட்டியது.
ஓடிய நேரத்திலும் 
ஒட்டியே வந்தது.
இப்படியிப்படி என .
இழுத்துச் சென்றது.
மயங்கா என்னை 
மயக்க வைத்தது.
உணவையும் உணர்வையும் 
உதற செய்தது.
இயங்கிய என்னை, (ஏனோ) 
இயங்காமல் செய்தது.
புரியாத புதிராய் எனை 
புதைத்து விட்டது.
புல்லு முளைக்குமோ 
புதையுண்ட இடத்தில் 
பரிதாபம் வேண்டாமே 
பாவமாய் எண்ணி.