Translate

Showing posts with label மறக்கவியலா நினைவுகள். Show all posts
Showing posts with label மறக்கவியலா நினைவுகள். Show all posts

Sunday, April 21, 2013

பக்கங்கள் 8 மறக்கவியலா நினைவுகள்


வாழ்க்கை பந்தம் 

"எங்கிருந்தோ வந்தாள் 
உன் சாதி, பெண்சாதி நானென்றாள் .
அன்று வரை யானறியேன்,
என்ன தவம் செய்து விட்டேன்"

ஆமாம் அந்த கன்னிப்பெண், எம் பெண்சாதியாய் ஆனாரே அன்று அம்மையார். மாலையிட்ட மங்கையவர், கரம் பிடித்து கைதியானாரோ, பொன்தாலி தானணிந்து.அந்த இராஜராஜேஸ்வரியே வந்தாரோ எம் மனைவியாய் அவரும். துணைவியும் தாங்க... ( இப்படி சொன்னால் அர்த்தம் அனர்த்தமாகிடுமோ?  ஹா.. ஹா.... ஹா. ) 

எமையும் சுமந்தார்,
கருக் கொண்டு குழந்தைகளையும் சுமந்தார்.
வீட்டு பொறுப்பையும்  சுமக்கின்றார்.
வாழ்க்கையை சுமக்கின்றார்.
தன்  சுகங்களை நினைவிலே சுமந்தபடி. 

~~~~~~~~~~~~~~~~~~~
பெண் பார்த்த படலம் 
~~~~~~~~~~~~~~~~~~~~

மெதுவாய் நான்,
பின்னோக்கி ஏறினேன்.
முன்னோக்கி நுழைந்தேன்.
மாப்பிள்ளை இருக்கை,
விரைந்தனர் உதவ,
மறுத்தேன் தடுத்து,
வந்தாள் பூங்கொடியாய் 
வணங்கினாள் பொதுவாக,
அமர்ந்தாள் காட்சியாக,
தலைக் குனிந்தவளாய் அவள் 
ஓட விட்டேன் பார்வையை,
அவள் விழி மீளவில்லை 
தரையிலிருந்து மேல் நோக்கி.
நினைத்துக் கொண்டேன் அன்று 
பலி ஆடு, நானா? அவளா?


தீரவில்லை இன்றும் அது.
தீராது என்றும் அது.


முடிச்சிட்ட நேரமுடன் 
முடிந்து போன கதையிதுனு,  
முத்தாப்பாய் சொன்னீரோ  
முடிவுக்கு யான் விரைய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுவையாய் உணவிட்டார் சுகமாய் யாமிருக்க.
தாயாய் ஆனாரே நோய்வாய் படுகையிலே.
சீராட்டி விடை புரிந்தார் சிசுவாய் எமக்கூட்டி.
தொட்டிலாய் எமை சுமந்தார் தாயுள்ளம் கொண்டவராய்.
கைமாறாய் எதை செய்தேன் கையறு நிலையினிலே.

பிறவியொன்று தானிருப்பின்,
அவரை சுமக்கும் தாயாக யானிருந்து,
சீராட்டி வளர்த்திடவே, சிற்றுள்ளம் குளிர்ந்திடவே,
பொட்டிட்டு, பூ வைத்து, பொன் மாட்டி அழகு காண வேண்டும்.
ஆவி பொருள் அத்தனையும், அவருக்கே அர்பணிக்க, 
அருள வேண்டி பிரார்த்திப்பேன் இறைவரிடம்.
பட்ட கடனை அடைக்க அல்ல,
பட்ட வேதனையை யானறிய,
சிறைக் கொண்ட நாளதுவும் கரைந்தது வருடங்களாக.
ஆண்டுகளோ முப்பத்தி இரண்டிலிருந்து அடுத்ததற்கு அது விரைய,
யாம் நகர, அவரோ எம்முடன் அடி வைக்க,
தொடரும் பயணமது இலக்கை நோக்கி அதன் வழியே.


முடிக்கும் முன்னே:--

 மாலை சூடிய நாளில் மணாளனாய் .



மாலையிட்ட மங்கை எங்கே? கேள்விக்கணைகள் உங்களிடமிருந்து தொடருமுன்னே,  பதிலுரைத்து விடுகிறேனே.

கருப்பு கருப்பு தான்... புடிச்ச கலரு கருப்புதான். புரிஞ்சிக்காம, வெள்ளையாய் வெளிச்சம் போட, வெள்ளையடித்து, அழகு பார்த்து, வெண்ணிலவாய், வெண்புறாவாய் தேவதையை வெளிக்காட்ட, எம் சகோதரிகள் முயற்சிக்க, ஐயோ வேண்டாமே இதற்குமேலே......          போட்டு விட்டேன் இடையிலே கத்திரியை (புகைப்படத்தில் தாங்க.)



அகிலாண்ட நாயகன் குடிக்கொண்ட 108 தளங்களில் திருபதி திருமலைக்கு அடுத்ததாய் தமிழ்நாடு சேலம் சின்ன திருபதி கோவிலில் குடிகொண்டு அருள் புரியும் ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாளை, உகாதித் திருநாளில் தரிசிக்க சென்ற போது