Translate

Thursday, November 29, 2007

என்று புரியுமோ !

காலமோ கடக்கிறது
எனை விட்டு பிரிந்து।

பேசுகிறாய் சில வார்த்தைகள்
அவசியத் தேவையினால்।


உயிரற்ற பார்வைகளாய் மோதுமே
நொடி சில மட்டுமே।

ரசிக்கிறேன் உன் உருவத்தை
மனத்தில் நிறைத்துக் கொள்ள।

வாயிருந்தும் பேச முடியவில்லை
போட்ட தடையினால்।

சேர வாய்ப்பில்லையோ
நினைத்தாலே பதறுகிறதே
உடலும் உள்ளமும்।

வினாக்களால்
மண்டையோ குடைகிறது
புரிய வைக்க தெரியாமல்।

உன் வாய் வார்த்தைகள்
எனக்கு
உற்சாகம் கொடுக்கும்।

உன் நெருக்கம்
வாழ்வில்
நம்பிக்கையைக் கொடுக்கும்।

நீ கைக்கொடுத்து என்னை
கோபுரத்துக்கு
கொண்டு செல்।

வெறுப்புக் கொண்டு
குப்பை மேட்டில்
போட்டு விடாதே।

பிராத்திக்கிறேன்
நாள் தோறும்
இறைவனிடம்,
உன் அன்பு கிடைக்க.

நீ பிரிந்தாய்
எனை அறிந்துக் கொள்ளாமல்।

என் உயிரும் பிரியட்டும்
நீ அறியாமல்।

உயிர் பிரியும்
நேரத்தில் தான்
கிடைக்குமா
உன் அருள் பார்வை।

உயிர் போக்கவோ
எனக்கு விருப்பமில்லை।

மனச்சுமையால் தினறுகிறது
என் உயிர் மூச்சு.

Wednesday, November 28, 2007

தேவையா தலைப்புகள்। [ ஹைக்கூ...]

நாயாய் குலைக்கிறான்,
நரியாய் ஊளையிடுகிறான்,
கழுதையாய் கத்துகிறான்,
மனிதனாய் பேசாமல்।
"""""""""""" 1 """"""""""""""""

பன்றியாய் உழல்கிறார்,
புலியாய் கொல்கிறார்,
மிருகமாய் இருந்து
மனிதத்தை உணராமல்।
"""""""""""" 2 """''''''''''''''

மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும்
மனம் உண்டென்று,

பெண்டாள நினைக்கிறான்
அடுத்தவன்
மனைவியையும்।
""""""" ३ """"""""""'

மூக்கை நுழைத்தேன்
உரிமையென நினைத்து।
அறுப்பட்டு விழுந்தேன்
எனை ஒதுக்கி
புறந்தள்ளி சென்றதால்।
""""""""""" ४ """""""""''''

சுவாசித்தான்
அவள் சகவாசத்தாள்।
கொடுத்தாள் தனை
இழந்தான் மனம்।

சென்றாள்
அவள்
மனத்தை
பறித்துக் கொண்டு।
"""""""" ५ """""''''''




அம்மாவுக்கு என்றுமே !!

பாப்பா பிறந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சின்னஞ்சிறு குழந்தையானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

சிறுமியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குமரியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

குடும்பத்தின் தலைவியுமானாள்
அம்மா மடியில் குழந்தையாக।

கருவும் சுமந்தாள்
அம்மா மடியில் குழந்தையாக।

பாப்பாப் பெற்றெடுத்தாள் ( ஈன்றெடுத்தாள் )
அம்மா மடியில் குழந்தையாக।

என்றுமிருப்பாள் அவளும்
அம்மா மடியில் குழந்தையாக।

அம்மா உள்ளவரை
அம்மா மடியில் குழந்தையாக.

Monday, November 26, 2007

ஹைக்கூ..... கவிதைகள்

உன் இளமைக்கோலம்।
*************************

மாறலாம் உன் உருவம்
புற உலகில்।

மாறவே மாறாது
என் மனவுலகில்।
#####1##########

திரும்புவதால்
***************

தேவியின்
தரிசனம்
இன்று
மட்டும்।
###2###

புகைப் படத்தில்
**************

எடுத்துக் கொண்டேன்
புகைப்படம்
சென்ற இடமெல்லாம்।

உன் இடமோ வெறுமை
ஏனெனில்
என் மனத்தில் நீ।
@@@3@@@@@

பார்கிறான்।
**********
வகை வகையாய்
விருந்து
வகையற்றவன்
வாய் திறந்து।
@@@4 @@@

ஏக்கம்
******
சென்றேன் கேரளம்
கண்டேன் யானையை
காணவில்லை குளிப்பதை
ஏக்கம் எனக்குள்ளே।
$$$$$$$$5$$$$$$$$$$$

நீ
^
கண்களில் படாமல்
மறைந்துக் கொண்டாலும்,
மறைய முடியுமா!
என் நினைவுகளிலிருந்து।
$$$$$$$$6 $$$$$$$$$

மகிழ்ச்சி வெள்ளத்தில்
********************

புகைவண்டியும்
உற்ச்சாகமாய்
கூப்பாடு போடுகிறது
உங்களை கண்டதும்।
%%%%%%7%%%%%%%

சிறுவன்
********

ஓடும்
புகைவண்டி
நிழலில்
குதித்து கொண்டிருந்தான்।

பெட்டிகளின்
இணைப்பு
வெளிச்சத்தில்
தடுக்கி விழாமலிருக்க।
%%%%%%%8%%%%%%%

பெறுவேன் வெற்றி
********************

பலரும்
சொற்களை
எதிரொலித்தனர்
அட்டி மலைகளிலே।

நானும்
எதிரொலித்தேன்
என்
மனத்துள்ளே।
++++9+++++

நானே!!
*******

அடைந்தேன்
பித்தம்
உன் மீது
நான்।

ஆனேன்
பைத்தியம்
உன்னால்
நான்।
++++10++++

அன்பே! அன்பே!!

அன்பே! உன்னை,
கட்டாயப் படுத்தி
வாங்க முடியாது।

அன்பே! உன்னை,
மிரட்டி
பெற முடியாது।

அன்பே! உன்னை,
அடித்து
பிடுங்க முடியாது।

ஆனால்
விலை மதிப்பிட முடியா
அன்பே! உன்னை,

பெற முடியும்
அன்பை மட்டுமே
உனக்குக் கொடுத்து.

Sunday, November 25, 2007

வாழ்த்துப்பா !!!

தள்ளாட்டம் காட்டுது
முதுமை உடலினிலே।

ததும்பி நிற்குது
புன்னகை முகத்தினிலே।

தாயின் அன்பைக் கண்டேன்
உங்கள் வாக்கினிலே।

பழுத்த பழமாய் இருந்தாலும்
பருவமங்கையாய் செயல் புரிந்து,

செய்யும் பணி சிறந்திடவே,
செயலாற்றி முடித்தீர் விரைவாக।

தெய்வங்கள் எல்லாம் வானுறைய,
நீங்களே இதயத்தில் நிறைந்திருக்க,

இனியச்சொற்கள் பல இருக்க,
இந்த சொற்களில் பொய் இல்லை।

புகழ்ச்சிக்காக எழுதவில்லை,
மனத்தில் உள்ளதை எழுதிவிட்டேன்.




Saturday, November 24, 2007

உன் வாய் இசையில் !!

கால்களோ நடனமிட,
கைகளோ தாளமிட,
செவிகளோ விரைத்துக் கொள்ள,
கண்களோ கிறக்கம் கொள்ள,
மனத்திலுள்ள புன்னகையோ
முகத்திலே வழிந்தோட,
உன் வாய் இசையில்
மயங்கி விட்டேன்

தெளிய வைக்க
விருப்பமின்றி.

காதல் படுத்தும்பாடு...

வைத்தனர் பந்தயம்
காதலை அறிய।

பனிமலை வெளியிலே,
கடும் குளிரிலே,
விடியும் பொழுதிலே,
யார் முதலிலே,
கூவி அழைப்பவரே
வென்றவராவார் என்றே।

கைகளைக் கோர்த்தனர்,
உறுதி எடுத்தனர்,
படுக்கச் சென்றனர்,
நடக்கப் போவதை அறியாமல்।

காதலி எழுந்தாள்
விடியலை உணர்ந்தள்
வெளியே விரைந்தாள்
காதலைக் கூவ।

அங்கவனைக் கண்டள்
ஆறாமையுடன் நின்றாள்
காதலில் தோற்றல் இல்லையென
ஆனந்தம் கொண்டாள்।

அவனை அணைத்து
கொண்டாட நினைத்தாள்
மென்நடைப் பயின்றாள்
தொட்டணைத்து உருண்டாள்
மகிழ்ச்சியைக் காட்டி।

அவனும் உருண்டான்
அவளுடன் இணைந்து
உயிரற்ற உடலாய்
பனியிலே உறைந்து.

மறக்காமல்

மனத்திலே வெறுமை,
வார்த்தைகளைத் தேடுகிறேன்।

பகலென்ன, இரவென்ன
பார்வையில்லாதவனுக்கு।

இழந்து விட்டேன் முழுமையாய்,
தவற விட்டதை மீட்கமுடியாமல்।

ஆனாலும் மறக்காமல் மறுபடியும்
மனந்திறந்து இயம்பி விட்டேன்.

ஹர ஹர மஹா தேவா.......... !!!!

உலகைக் காக்க
முடிவை செய்தார்।

கிரிதனை எடுத்தார்
மத்தாக வைத்தார்।

சேஷனை நினைத்தார்
கயிறாக பிடித்தார்।

அமிர்தத்தைப் பெறவே
கடலைக் கடைந்தார்।

வேதனையில் பாம்போ,
விசத்தை சிந்த ( கக்க)

அமிர்தத்தை மீட்க
விசமதை உண்டார்।

விருப்பமுடன் ஏற்றார்
விருந்தெனெக் கொண்டார்।

கழுத்திலே வைத்தார்
நீலகண்டன் ஆனார்।

அமிர்தத்தை உண்டவர்
தேவரவர் ஆனார்।

சரணம் அடைவோம்
நலமுடன் வாழ।

கிருத்திகை நாளில்
மீண்டும் பணிவோம்.