Translate

Showing posts with label தலை நிமிர்ந்து நில்லடா!. Show all posts
Showing posts with label தலை நிமிர்ந்து நில்லடா!. Show all posts

Friday, December 5, 2014

தலை நிமிர்ந்து நில்லடா!




தமிழின் எழுத்தாலே
இழிவுக்கு வழியில்லை.
இழிவாக இருந்தால் - அது
தமிழால் வந்ததில்லை.

மாடங்கள் பல கட்டி
கோட்டையாய் செய்திடுவோம்.
மாக்களாய் வருவோரை,
மக்களாய் திருத்திடுவோம்.

ஒன்றாய் நாம் இணைந்து
வளம் மேலும் சேர்த்திடுவோம்.
வறுமை என்று வருவோரை,
குறைப்போக்கி அனுப்பிடுவோம்.

வந்தாரை வாழ வைக்கும்
எங்கள் தமிழ்நாடு.
வாழ்ந்தாரை நினைக்குமே
எங்கள் திருநாடு.


இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.