Translate

Tuesday, December 30, 2008

இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!


அன்புள்ள வாசக இதயங்களே!
உங்களுக்கும், உங்கள் சுற்றமும் நட்பும் எல்லா நலன்களும் பெற்று நலமாக வாழ எமது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



அன்புடன்,
தவப்புதல்வன்.

Friday, December 26, 2008

பண்பாடு

நம் கூட்டுக்குடும்ப உயர்வதனை
உணர்ந்தாரே மேல்நாட்டவர்.
போற்றி வணங்கி
ஏற்கின்றார் இந்நாளிலே.

கலாச்சார கழிவென்று
அவர் நாட்டிலே,
ஒதுக்கியதை நாடுகிறார்
நம் நாட்டிலே.

சொல்லித்தான் தெரிவதில்லை
மன்மத கலையே.
முன்னோரவர் வரையறுத்தார்
நம் நாட்டிலே.

பட்டப்படிப்பு பாடங்களை
சோதித்து அறியலாம்.
சோதித்தறிந்த பாடங்களை
ஏற்றும் கொள்ளலாம்.

சோதனைகள் பல செய்து
அறிந்துக் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்வு சோகமென்று
புரிந்துக் கொண்டார்கள்.

வாலருந்த நரியாக
மாற வேண்டாமே.
பட்டறிந்தவர் பாடங்களை
ஏற்றுக் கொள்ளுவோமே.

வாழ்வு தரும் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள்
கழிவான வாழ்வுதனை
ஒதுக்கித் தள்ளுங்கள்.

மிருகத்துக்கும் மனிதனுக்கும்
வேற்றுமை உண்டு.
புரிந்து கொண்டு வாழ்வோமே
மனத்திலே கொண்டு.

கழிவுகளைப் பூசிக்கொண்டு
கதற வேண்டாம்.
வாலறுந்த நரியாக
அலைய வேண்டாம்.

கூட்டுக்குடும்ப வசதியினை
உணர்ந்துக் கொள்ளுவோமே.
கூடி வாழ்ந்து பெருமைதனை
நாட்டிக் கொள்ளுவோமே.

இளமையிலே புதுமையென்று
ஆட்டம் போடாதே.
முன்னோர் கொடுத்த புதையலையே
நாசம் செய்யாதே.

மூத்தவனாய் நானுமிருந்து
சொல்லிக் கொடுக்கின்றேன்.
விளைநிலத்தை அழித்து நீயும்
வீனாய் போகாதே.

சீராக வைத்திருந்தால்
கணனி என்றுமே,
சிறப்பாக இருக்குமென்று
நீ அறிந்தது தானே.

சீராக அமைத்துக் கொண்டால்
வாழ்வுதனையே,
நலமாக வாழ்ந்திடலாம்
நீயுமே அறியாயோ!

சாதனைகள் பல புரிய
நம் நாட்டிலே,
நல்லவைகள் பலயிருக்கு
வாழும் வாழ்விலே.

கேடுகெட்ட நினைவுகள்
வேண்டாம் மனத்திலே.
உயர்வான எண்ணம்
வேண்டும் உன் செயலிலே.

இருக்கின்ற நல்லதை
தேடிப்பெறுவாயே.
திட்டங்களை செய்ததை
மேன்மை அடைவாயே.

பஞ்சமில்லா......


மோசடி ஆண்களுக்கும்,
மோசமான பெண்களுக்கும்
கிடைத்ததே வாய்ப்பு
பொன்னான வாய்ப்பு.

நீதியாய் கிடைத்ததே
சட்டங்களில்லாமலே.
மேலைநாட்டு நாகரீகம்
பாதுகாப்பாய் நுழைந்தே.

'' லிவ் இன் ரிலேசன்ஷிப்''
என்ற உறவு வந்ததே.
பாரத்தின் பண்பாட்டை
ஒழிக்கத் தான் வந்ததே.

மோதிரமும் தேவையில்லை,
தாலிக்கும் வேலையில்லை,
''தலாக்''குக்கும் வழியில்லை,
உறவுக்கும் முறைக்கும்
இனி தான் சோதனையே. 

இருவரிடை மட்டுமே
விருப்பம் இருந்தால் போதுமே.
காத்திருக்க தேவையில்லை
தாளிட்டுக் கொள்ளலாம்.

தேவையின்றி போனாலே
திறந்து விட்டு போகலாம்.
மற்றொன்று கிடைத்தாலே
தள்ளி விட்டும் மூடலாம்.

சேர்ந்திருந்த காலத்துக்கு
அத்தாட்சி தேவையாம்.
இது மட்டும் சட்டமாம்
காக்கவென்று வந்ததாம்.
பெண்களுக்கு பாதுகாப்பாம் 
ஆண்களுக்கு இரும்பு காப்பாம்.

கழிசலான நிலையை வைத்து
பணம் நிறைய பார்க்கலாம்.
மிரட்டி, சுருட்டி வாழ்பவரோ
வளமையாக வாழலாம்.


பின் குறிப்பு; இன்றைய 23\ 12\ 2008 சென்னை தினமலர் 
   நாளிதழில், '' லிவ் இன் ரிலேசன்ஷிப்'' பற்றி செய்தி வந்திருந்தது.
 திருமண சடங்கு முறையின்றி சேர்ந்து வாழ சட்டமியற்றவோ, 
  அனுமதி வழங்கவோ இயலாது. ஆனால் அப்படி வாழ்கின்ற 
  பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பார்லிமெண்டில் ஒரு எம்.பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மேற்படி பதிலை அளித்துள்ளார். அந்த செய்தி படித்ததின் தாக்கமிது.

Friday, December 19, 2008

தூணும் துரும்பும்


நினைப்பு

தூணாகக் கருதி
துணையாய் வரிந்தாள்.
துரும்பாகிப் போனான்
துணையவன் அவனே.



மாற்றம்

தூணென நினைத்து
துணையைப் பார்த்தான்.
துரும்பென நினைத்தாள்
துணையவள் அவனை.


கிண்டல்

தூணாக அவனும்
துரும்பாக அவளும்.
மாறித்தான போனாரே,
தூணாக அவளும்
துரும்பாக அவனும்.


காலம்

துரும்பாக இருந்தாள்
பல் குத்த தோதாக,
தூணாகி போனாளே
பாழான வயதாலே.


கோலம்

தூணாக இருந்தானே
இளமைக் காலத்தில்.
துரும்பாகி போனானே
முதுமைக் கோலத்தில்.


கேலி

செய்தார் அன்று
தூணுடன் துரும்பென்று.
செய்கிறார் இன்று
துரும்புடன் தூணென்று.

வளமை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.

நிலமை

தூணென்ற நிலையும்
மறைந்து விட,
துரும்பென்ற நிலையில்
வாழ்வதுவே.


ஏமாற்றம்

தாணுக்கு நிகராய்
நினைத்திருந்தார்.
துரும்புக்கு சமமாய்
மாறி விட்டார்.


ஏக்கம்

தூணுக்கு நிகராய் இருந்தாலும்,
துரும்புக்கு சமமாய் நினைத்திருந்தார்.
துரும்புபென்ற நிலையில் இருக்கையிலே,
தூணாய் மாற முடியவில்லை.


நம்பிக்கை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.


அவநம்பிக்கை

தூணாக இருப்பது
துரும்பாக மாறுமோ.


துக்கம்

தூணாக உள்ளார்
துணையைக் கொண்டு.
துரும்பாகி போவாரோ
துணையை இழந்து.

ஓரு இளமையின் சோகம், பூத்த பூ காய்க்க வில்லை



கூட்டமாக இருந்த போது
குறிப்பாக கவர்ந்தானே.

துள்ளிக் குதிக்கிற வயதாலே
குதுகுலத்தை உணர்ந்தேனே.

ஒன்றாக சேர்ந்து தான்
சுற்றித் திரிந்தோமே.

கட்டவிழ்த்த கன்று போல
கடலையில் புரண்டோமே.

ஒன்றாக இருப்பது போல்
ஒரே பொருளை ருசித்தோமே.

எச்சிலெல்லாம் இனிப்பதாய்
மயக்கத்தில் சொன்னேனே.

தனியாக சென்ற போது
தவறிழைக்க செய்தானே.

கட்டு காவல் அத்தனையும்
கத்தரித்து சென்றேனே.

ஒன்று சேர நினைத்தபோது
ஒதுங்கித்தான் போனானே.

விட்டுவிட மனமின்றி
வீம்பாக இருந்தேனே.

நானவனை வளைத்ததாய்
சொல்லித்தான் திரிந்தானே.

அறைகூவல் விடுத்தபோது
அடங்கித்தான் போனானே.

சேர்த்து வைத்த பின்னாலும்
சேராமல் உள்ளோமே.

காலுக்கிட்ட விலங்காக
கோபமாக உள்ளானே.

இணைந்திருக்க நினைக்கின்றேன்
முடியாமல் போகிறதே.

சொல்லம்புகள் பட்டுத்தான்
கூசித்தான் போகிறதே.

மலிவான காதலாய்
மாறியது போனதே.

வலியச் சென்று, விஷப்பாம்பை
சுற்றித்தான் கொண்டேனே.

குடும்பத்துக்கு பாரமாய்
மாறித்தான் போனேனே.

கழுத்திலிட்ட தூக்காக
துடித்துத்தான் போகிறேனே.

பூவாய் பூத்திருந்தேனே,
உரியதான காலத்தில்.

காய்க்காமல் இருக்கின்றேனே,
காய்க்க வேண்டிய நேரத்தில்.








Thursday, December 11, 2008

ஏனோ ?

கூடிக் கழித்தேன்
கனவுகளில்.

விடிந்த பிறகும்
உன் நினைவு.

ஏனோ மறுக்கிறது
இதயம்.

நீ இல்லை என்பதை
அறிந்தும்.

Saturday, December 6, 2008

சாப விமோசனம்

மேலும் கீழும்
பட்டாடை மூடியிருக்க,
காலிலும் கையிலும்
வளையல்கள் பூட்டியிருக்க,

மூக்கிலும் காதிலும்
குத்திகள் பளபளக்க,
கழுத்திலிருந்த சரங்கள்
மார்புடன் உறவாட,

வண்ணப்பூச்சிகளாய்
இமைகளோ சிறகடிக்க,
கோளங்களாய்
விழிகள் ஒளி வீச,

நிறமிட்ட உதடுகளில்
நீர்ப்பூச்சு துளிர்த்திருக்க,
உடுக்கையாய்
இடை சிறுத்திருக்க,

நறுமணம் உமிழ்ந்தாள்
நாசிகள் உறுஞ்சிக் கொள்ள,
நின்ற நிலையாலே
சொரிய வைத்தாள் பெருமூச்சை.

காற்றின் விசையாலே
உடைகளோ பட்டமாக,
மனமோ பறந்தது
அப்பட்டமாக.

என் இதயத்தின்
துடிப்போசை,
அவளை எட்டியதோ
நாதமாக.

பரிதவித்த எனை நோக்கி
இளநகைக் காட்டினாள்,
விழிதனை
கணநேரம் ஓட விட்டு.





Thursday, December 4, 2008

மிக்கி எலி குடும்பம்

அன்பான குடும்பம்




களங்கமில்லா நட்பு !

வழியிலே கண்டோம்.
முறுவலித்துக் கொண்டோம்.
நாள்தோரும் தொடர
நட்பிலே முடிய,
உள்ளளவும் நிலைக்க,
உறவுகள் செழிக்க...
காலங்கள் சென்றது.
களங்கமின்றி இருந்தது.
குடும்பங்கள் ஆனது,
பேதமின்றி கலந்தது.
ஆலமரமாய் விரிந்தது
அருகாய் நிலைத்தது..
தலைமுறைகள் மாறினாலும்
தழைத்து ஓங்கட்டும்.
நட்பின் ஆதிக்கம்
என்றுமே தொடரட்டும்

Monday, November 24, 2008

ஐயோ.. அப்பாவுக்கு பசிக்குமே..!

அப்பா என்றே,மெதுவாக அழைத்தேன்.
பதிலோ இன்றி, மவுனமே ஒலிக்க,
மீண்டும் அழைக்க தயங்கி நின்றேன்.
தேவையென்ற நிலையில், குரலை உயர்த்த,
'உம்..' என்ற பதிலோ உறுமலாய் கேட்க,
உடம்பிலோ உதறல், நாவிலோ வறட்சி.

அழைக்க வந்தது, மறந்து போக,
இந்த நிலையில் உடனே வந்தது,
அணைத்து கொஞ்சும் அம்மாவின் நினைவு.

அம்மாவின் மறைவு மனத்திலே முட்ட,
காரணம் நானென, அப்பா நினைக்க.

சூழ்நிலை எல்லாம் ஒத்துப் போக,
குற்றவாளியாய் நானும் கூண்டிலே நிற்க,
எண் சாண் உடம்பும் ஒரு சாணாய் குறுக,
விடுதலைப் பெறவோ மனமோ துடிக்க.

வழியோ இன்றி, இதயமோ தவிக்க,
நடந்தவை எல்லாம் நினைவிலே ஓட,
விளக்கங்கள் அனைத்தும், கண்ணீரில் கரைய,

வந்தெனைத் தாக்கிய வார்த்தைகள் யாவும்
உள்ளிலும் வெளியிலும் ஊசிகளாய் குத்த,
ஆறுதல் மருந்திட ஆட்களோ யாருமின்றி,
ரணப்பட்ட மனமோ ரத்தத்தை சிந்த,

என்னைத் தவிர உறவுகளில்லாஅப்பாவை விட்டு
விலகிச் செல்ல ஒப்புதலில்லா மனத்துடன் நானே,

என்றேனும் உணர்வார், நிலைதனை அறிவார்.
என்றென எனக்கு ஆறுதல் கொண்டு,
பாசத்தைக் கூட்டி, மீண்டும் அழைத்தேன்,
உணவையிட்டு பசியைப் போக்க.

இற்று போகா நினைவுகள்!

பார்வை மட்டும்
உனையேத் தொடர,
உயிர் மட்டும்
உடலில் இருக்க,
நினைவுகள் மட்டும்
நீக்கம் அடைந்தால்!
துன்பம் என்ற
உணர்வுகள் இன்றி,
நடக்கின்ற பிணமாய்
நானும் வாழ்வேன்.
ஆனால்,
ஏக்கம் கொண்டு
மனமும் அலைய,
துன்பம் என்ற
உணர்வுகள் தொடர,
மனத்தின் வலிகளை
உணரும் இதயம்
நிலையின்றி துடிக்க,
வழியின்றி திகைத்தேன்
வலிகளை மறக்க.

Friday, November 21, 2008

மாணிக்கப் பாட்டி!

அழைத்து விட்டாள்
உறவு வழி
பேரன் பேத்திகளை.
காணிகளை
பகிர்ந்தளித்தாள்
பேரன்களுக்கு.
நகைகளையோ
வழங்கி விட்டாள்
பேத்திகளுக்கு.
காசு பணம்
அத்தனையும்
அளித்து விட்டாள்.
கையிலிருந்த
ஜோடி வளை
இரண்டைத் தவிர.
விழி மூடும்
தருணம் வரை,
விழி நீரை
சிந்தா நிலை
வைத்திருந்த,
கரம் பிடித்த
மாணிக்கத்தின்
முதல் நினைவான
வளைதனை
தடவி விட்டாள்,
வரிந்தவனையே
தழுவுவதாய் .
வரிந்து கொண்டவளை
வலுவாக கைப்பற்றி,
வருத்தங்கள் அவளடைய
வழிகளைக் கொடாமல்
வளைத்தணைத்தே
வாழ்க்கை தனை
நடத்தி விட்டு,
வின்னுலகம் சென்றவனை
வழித் தொடர்ந்தே,
விரைந்துச் செல்ல
விழிப் பதித்த
நிலையிலிருந்தாள்
வாரிசுகளற்ற
மாணிக்கப் பாட்டியவள்.

ஏனிந்த துன்பம்!

ஒவ்வொரு முறையும் சகோதரர்களும்,அவர்தம் குடும்பமும்,
சகோதரியின் மகனும் வெளி நாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு
வந்து விட்டு, விடுமுறை முடிந்து திரும்பும்போது வீட்டில்
உள்ளவர்கள் வெவ்வேறு காரணங்களால் கலங்குவது கண்டும்,
சென்ற 16\11\2008 அன்று
எமது சகோதரி மகன் சுபகர் தம்பதியினர்
மலேசியாவுக்கு திரும்பி புறப்பட்டபோது நடைப்பெற்ற நிகழ்வினை
தொடர்ந்து பிறந்தது
இந்த கிறுக்கல்.


ஏனோ துன்பம்
ஒவ்வொரு முறையும்
எங்களை விட்டு
பயணம் கொள்ள,
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்
கண்களில் நிறையும்.
தொண்டைக் குழியில்
அடைத்தது போன்று (கொண்டு)
மூச்சை முட்டும்.
புறப்பட்ட பின்போ
கானும் நாளை
கணக்கிட துவங்கும்.
மனத்திலும் கணக்கு,
நாட்காட்டி பார்த்து
கண்களில் கணக்கு.
வாயும் முனுமுனுக்க
விரலிலும் கணக்கு.
தவறின்றி இருக்க
தினமும் கணக்கு.
கானும் வரையும்
தொடர்ந்த கணக்கு,
கண்ட பின்னும்
தொடரும் கணக்கு.
எத்தனை நாள்
எம்முடன் இருப்பாய்?
எந்த நாளில்
எமை விட்டு பிரிவாய்?
என்றன போடும்
கணக்குகள் தொடரும்.
மீண்டும்
புறப்படும் நேரம்
துடிக்கும் நெஞ்சம்......

Monday, November 10, 2008

உம்மை யாம் தொடர்கையிலே

எமது தாயின் கடைசி சகோதரியும் எமது சித்தியுமான கோயமுத்தூர்.திருமதி.விட்டோபாய் ரங்கநாதம் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி 03\11\2008 அன்று அவர் ஆத்மா சாந்தியடைய அவர் கமலபாதங்களை நினைவில் நிறுத்தி சமர்பித்த கவிதாஞ்சலி.
************************************************************************************

உதயம் 13\09\1938. மறைவு 03\11\2008.
$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$

அணையிலே
தேங்கியிருக்கும்
நீர் போல,
உம் மனத்திலிருந்த
பாசமதை யாமறிவோம்.

மடை திறந்த
வெள்ளம் போல்
ஆர்பரிப்பு ஏதுமின்றி,
பொங்கி வழியும்
பாசந்தனை
உம் செயல்களே!
மென்மையாய்
வெளிகாட்டும்.


ஏக்கங்களும் தாக்கங்களும்
உம்மையும் தாக்கிருக்கும்!
பக்குவமாய் ஏற்றுக் கொண்டு
பக்கங்களைப் புரட்டி விட்டீர்.

வாழ்ந்துத் தான்
முடித்து விட்டீர்,
வழ்க்கையெனும்
நெடுங்கதையை.

பாசத்திற்கு கைமாறாய்
நினைவுகளில் வைத்திருப்போம்.
உங்களை நாங்கள் இழந்தாலும்
உணர்வுகளில் கலந்திருப்பீர்.
உணர்வுகளும்
நாள் ஒன்றில் அற்று விடும்,
உம்மை யாம் தொடர்கையிலே.


பின் குறிப்பு: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையிலிருந்து கோவை சென்று எமது சித்தி அவர்களின் ஈமச்சடங்கிலே கலந்துக் கொள்ள இயலவில்லை. எமது சித்தி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், அவர் பிரிவினால் சொல்லொன்னா துயரிலிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்ககும் எங்கள் ஆழ்ந்த இரங்களையும் வருத்தங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.


Monday, September 15, 2008

அனுப்பாத கடிதம்

நோக்காமல் நோக்கிருந்தேன்.
உம் மணவிழா காணவே நோக்கிருந்தேன்.
இடையிலா இறுமாப்பு
இடையினிலே தோன்றியதால்
கற்பனையில் காணிடவே
கருத்தறிந்து நீ(ங்)க்கி விட்டான்.


மண்ணோடு மண்ணாக
கரையும் உடல் இங்கிருக்க,
ஆவி மட்டும் அலைந்ததுவே
சடங்கிலே கலந்துக் கொள்ள.
கூறு போட்ட மனங்களினால்
குறி வைத்து தாக்கப்பட்(டு) ட,
துடிக்கின்ற உள்ளமோ,
சிந்துகின்ற துளிகள் ஒவ்வொன்றும்
சிதறித்தான் போகிறது. 

கறைகளாய் காய்கிறது.

எது எப்படி இருந்தாலும்
நீங்கா நினைவுகளில்
நிலைத்திருப்பாய்,
நித்தமும் துதித்திருப்போம்
உன் வாழ்வு
துளிர்கட்டுமென்று.
திகட்டாத தேனாய்
வாழ்வே இனிக்கட்டுமென்று
ஆசிகளை அனுப்பி வைத்தோம்
ஆனந்தமே நிலைக்கட்டுமென்று.


அன்புடன்,
மாமா
ஏ.எம்.பத்ரி நாராயணன்
@ தவப்புதல்வன்.

Thursday, September 4, 2008

விலையோ... விலை!!!!

வியாதியைப் பெற்று

வீனாய் உடலும்

விழுந்தது தரையில்

விரும்பா நிலையில்

விலைப்போகா மகளாய்

விதித்தது இதுவென


விதியை நோகும்

விலைமகள் இவளோ!


வின்னை முட்ட

விற்பனை செய்து

விரைவில் ஈட்ட

விரைவாய் பலருக்கு

விரித்தப் பாயாய்

விருந்தெனப் படைத்து

விலையைப் பெற்றாள்

விளைவைக் கருதா

விலைமகளும் இவளே.

உளவாளியாய்....

செயல்பட
வைத்து விட்டாய்,
உள்ளொன்று வைத்து
புறமொன்றைப் பேசி.

Sunday, August 10, 2008

எப்போதும்.......

எண்ணங்கள்
வெவ்வேறாய் இருந்தாலும்,
தாக்கங்கள்
ஒன்றாய் இருப்பதாலே.

உன் நினைவுடனே
நானிருக்க!
என் நினைவின்றி
இருப்பாயோ நீ?

எப்போதும் ஒரு நினைவாய்
ஒருபோதும் மறையாமல்,
நினைவுகளை அலைக்கழிக்கும்.
இந்நிலையே இருவருக்கும்
போதுவாய் இருக்குமன்றோ.

Thursday, August 7, 2008

இது ஒரு பக்கம்



பேச்சுக்கு துணை இல்லையென

அழுது தீர்ப்போம்.


ஆறுதல் சொல்ல

அருகினில் வந்தால்,

அவரைப் பிடித்து

கசக்கிப் பிழிவோம்.




ஒப்புக் கென்றே

ஒப்பாறி வைக்க

ஆயிரம் பேர்கள்

அவணியில் உண்டு.




கூட்டு சேர்ந்து

கும்மாளம் அடிக்க

துட்டு- உன்னிடம்

இருந்தால் உண்டு.




காய்ந்த குளமோ

இரையின்றி இருக்க,

பறவைக் கூட்டமோ

பறந்து செல்லும்.




இருக்கும் போது

எல்லாம் தெரியும்.

இல்லாத போதோ

வானம் மட்டும் தெரியும்.




மனம் என்பது

கரைந்து போக,

மானமும் அதிலே

தீய்ந்து போகும்.




மனத்தில் விழுந்த

சூடுகள் எல்லாம்,

கண்களில் தெரியும்

வடுக்களாய் எல்லாம்.




ஏக்கத்தின் பிடியில்

சிக்கித் தவிப்போம்,

ஏனென்று கேட்க

ஆட்களின்றி.




செல்லும் பாதையோ

தவறிச் சென்றால்,

வாழ்வும் விரைவில்

சீரழிந்து போகும்.




ஆக்க பூர்வமாய்

அனுபவத்தில் கண்டவர்,

சொன்ன சொல்லை

செவிமடுத்து கொள்வீர்.

பிமரத சாந்தி- 70 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து

எமது மதிப்பிற்குறிய தந்தை திரு.P.A. மாணிக்கம் செட்டியார் அவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 1991-92 ல் நடைப்பெற்ற போது, எமது தந்தைக்கும், தாயார். திருமதி. பாக்யலக்ஷ்மி அவர்களுக்கும் எமது சகோதரிகளால் வாசித்து அளிக்கப்பட்ட வாழ்த்து மடல் இது.
**********************

அன்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஆற்றலைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

இனிமையால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஈகையைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

உழைப்பால் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஊக்கத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

எழுபதைக் கண்டு உயர்ந்தது உங்கள் பருவம்.

ஏற்றத்தைக் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஐயம்பல தீர்த்து உயர்ந்தது உங்கள் பருவம்.

ஐயமின்றி உயர்ந்தது எங்கள் புருவம் .

ஒளிமயமாய் உயர்ந்தது உங்கள் பருவம்.

ஓங்குபுகழ் கண்டு உயர்ந்தது எங்கள் புருவம்.

ஔவை நெறியில் உயர்ந்தது உங்கள் பருவம்.

அஃதை பார்த்து உயர்ந்தது எங்கள் புருவம் .

Wednesday, August 6, 2008

சொல்லி விட....!!!

மனமோ நினைக்குது
சொல்லி விட.

உணர்வோ தடுக்குது
சொல்லி விட.

நீங்கா நினைவுகளை
சொல்லி விட.

நினைவுகளோ பலயிருக்கு
சொல்லி விட.

கற்பனைகள் பலவே
சொல்லி விட.

கவிதையாய் பிறக்குமோ
சொல்லி விட.

கருவிலே சிதைந்ததையும்
சொல்லி விட.

கருத்திலே கொண்டேனே
சொல்லி விட.

பார்த்ததை மட்டுமா
சொல்லி விட.

படித்ததை மட்டுமா
சொல்லி விட.

கேட்டதை மட்டுமா
சொல்லி விட.

அறிந்ததை மட்டுமா
சொல்லி விட.

இல்லை,
உணர்ந்ததை மட்டுமா
சொல்லி விட.

என்னுடைய ஆசைகளைச்
சொல்லி விட.

அலையாடும் எண்ணங்களை
சொல்லி விட.

ஆக்கமாய் இருந்தால்
சொல்லி விட.

அழகாய் இருக்கும்
சொல்லி விட.

பெற்றதை எல்லாம்
சொல்லி விட.

பெருமையாய் இருக்குமோ
சொல்லி விட.

இன்பமாய் இருப்பதை
சொல்லி விட.

இனிப்பாய் இருக்குமே
சொல்லி விட.

வேதனையாய் இருப்பதை
சொல்லி விட.

வேம்பாய் கசக்குமே
சொல்லி விட.

இருப்பினும் இருப்பினும்
சொல்லி விட.

இல்லாததை இருப்பதாய்
சொல்லி விட.

மனமோ தயங்குது
சொல்லி விட.

உறுதியினை எடுத்தேன்
சொல்லி விட.

உற்றவரை தேடினேன்
சொல்லி விட.

இழந்ததை எல்லாம்
சொல்லி விட.

இயலாமல் தவிக்கிறேன்
சொல்லி விட.

தடைகளும் இருக்கு
சொல்லி விட.

தாண்டி வருவேன்
சொல்லி விட.

எண்ணங்களோ ஆயிரம்
சொல்லி விட.

எழுத்திலிட முயல்கிறேன்
சொல்லி விட.

Sunday, August 3, 2008

அனுப்பிய வாழ்த்து

எமது சகோதரியின் மகள் நீத்துவின் திருமணத்துக்கு அனுப்பிய வாழ்த்து கவிதை.


விழித்த விழிகளோ புது மலராய்
இனித்த நினைவுகளாய்

இன்று முதல் தொடரட்டும்.

வண்ணமிகு தோட்டத்தில்


வாசனை மலர்களாய்
வாசமது எங்கும் பரவட்டும்.


உம் குடும்பமெனும்
தோட்டத்தில்
பசுமை என்றும் நிலைக்கட்டும்.

வாழ்க்கையெனும் படகு


மகிழ்ச்சிக் கடலில்
நிலைத்திருந்து மிதக்கட்டும்.


கண்ட கனவுகளோ
நிற்கும் நினைவுகளாய்

நித்தமும் நிகழட்டும்.


பார்த்த பார்வைகள்
பகிர்ந்து கொள்ளட்டும்.


பாசமெனும் வலையாய்
பின்னிக் கொள்ளட்டும்.


ஆனந்த வெள்ளமோ
அருவியாய் பொழியட்டும்

இன்ப வாழ்வோ
ஆல் போல் செழிக்கட்டும்.


விழுதுகளாய் விரிந்து
நிலையாய் திகழட்டும்.


இனிமையாய் இல்லறம்
நயமாய் நல்லறம்

இணைந்தே இருக்கட்டும்.


இன்றிணையும் நீவீர்,
பல்கி பெருக வேண்டும்.

குடும்பமாய் விரிய வேண்டும்.


குறைவிலா வாழ்வு
அமைய வேண்டும்.


குணவதியே! அவர் குணமறிந்து
உன் வசப்படுத்த வேண்டும்


குள விளக்கே, உன்னொளி
அவர் இதயமதில் ஒளிரவேண்டும்.


உம் இதயங்களை
மாற்றியே குடியேற வேண்டும்.


வேண்டும் வேண்டும்
எத்தனையோ வேண்டும்.

அத்தனைக்கும், இறைவனின்
அருள் வேண்டும்.


எடுத்து வைக்கும் அடிகளெல்லாம்
நிலையாய் செல்ல,

உறுதியாய் இருக்க,
உற்றதுணையுடன் இணைந்தே நடக்க,

இருபக்க நினைவுகளும்
இணைந்தே இருக்க,

செல்லும் வழியோ
சேர்ந்தே இருக்க,

இன்று போல் என்றுமே
இன்பமாய் வாழ்ந்திடவே,


வாழ்க! வாழ்க!! நலமாக!!!
பல்லாண்டு வாழ்க! சுகமாக!!!

என்றே ஆசிகள் பலநல்கி,
வாழ்த்தினோம் மனந்திறந்தே.






மாமா,
ஏ.எம். பத்ரி நாராயணன்.@

தவப்புதல்வன்

Saturday, August 2, 2008

மணமகளைப் பார்த்த படலம்- ஒரு திருத்தம்

யாம் கேட்டுணர்ந்த செய்தியில், கவிதையாக வடிக்கும்போது கீழ்கானும் ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.



''என் நினைவு அகலாது
என்றுமே இணைந்திருக்க
அவன் விரலில்- அவளும்
கணையாழி ஒன்றினையே
அணிந்துத்தான் விட்டாளே.''




மேலே கண்ட செய்தி நடைப்பபெறா நிகழ்ச்சியாகும். நடைப்பெற்ற நிகழ்ச்சசியை கீழ்கானும் வகையிலே கவிதையாக வடித்துள்ளேன்.பொருத்துக் கொண்டு வாசியுங்களேன்.

கண்டதும் காதலால்
கவர்ந்து விட்ட கள்வனுக்கு,
கனிந்து வரும் காலத்தை
கண்டுணரும் நோக்கமதில்,
காலம் காட்டி ஒன்றினையே
களிப்புடனே பூட்டி விட்டாள்.

தனக்கென்றே உரிமையென
தயங்காமல் வரிந்துக் கொண்ட
தலைவனுக்கு, தானும் தான்
தளும்புகின்ற மகிழ்வுடனே
தங்கச்சங்கிலி ஒன்றினையும்
தவள விட்டாள்- அவன் மார்பினிலே.

Saturday, July 12, 2008

மணமகளை பார்த்த படலம்

உடலோ இங்கிருக்க,

மனமோ அங்கிருக்க

நடக்கின்ற நிகழ்வுகளை,

கைப்பேசி உதவியுடன்

கேட்டுணர்ந்த செய்திகளை

வண்ணமிகு காட்சிகளாய்

ஓடிடும் திரைபடமாய்

கற்பனையில் உருவாக்கி

களித்திடும் நிலையினிலே

காட்சிகளாய் விவரிப்போம்

நீங்களும் செவிமடுத்து

கேட்டுத்தான் இன்புறுங்களேன்.

காட்சி - 1.

நாட்கள் பல கழிந்த பின்னே,

ஒன்று கூடிய உறவினமோ

நடந்த பல நிகழ்வுகளை

நினைத்து, அதை அசைப்போட்டு

ஆனந்தமாய் உறவாடி

கலகலக்க செய்து கொண்டு,

இரவு பயணத்தையும்,

பகலாக ஆக்கிக்கொண்டு,

நெடுநேரம் கழிக்க,

உடலோ ஓய்வு கேட்டு

கண்களையே கிறங்க வைக்க

ஓடும் வண்டியிலே அமர்ந்தபடி

சிற்றுறக்கம் செய்தனரே.

காட்சி - 2

பயணித்த வாகனமோ,

மணமகளை நாடியே

மணமகனையும்

சுமந்துக் கொண்டு

மேடுப்பள்ள சாலையிலும்

சளைக்காமல் ஓடிச் சென்று

அதிகாலைப் பொழுதினிலே

நகரத்தை அடைந்ததுவே.

கண் விழித்த உறவினமோ,

சுறுசுறுப்பை அடைந்திடவே

சுவைக் குழம்பி வேண்டியே,

குழம்பியகம் தேடியே - கண்களை

அலைப் பாய விட்டனரே.

குளம்பியகம் கண்ட

மகிழ்ச்சியதில்,

கூப்பாடு போட்டதில்,

அதிர்ந்துத்தான் போனதே,

வண்டியும்

குலுங்கித்தான் நின்றதே.

காட்சி - 3.

அவரவர் விருப்பந்தனில்

குழம்பிகளை தேர்ந்தெடுத்தும்!

செல்ல வேண்டிய இடங்குறித்து

உடன் கேட்ட அறிவிப்பால்,

வாய் பொருக்கா சூடிருந்தும்

மனம் விரும்பிய ஆவலினால்

ஊதி ஊதிக் குடித்தனரே.

வேகமாய் -

உறுஞ்சித்தான் குடித்தனரே.

குழம்பிகளை குடித்த பின்னே,

உற்சாகம் வந்த நிலையில்

உடலையும் கைகளையும்

முறுக்கியே உதறி விட்டு,

செல்ல வேண்டிய இடங்குறித்தும்,

செய்ய வேண்டிய செயல் குறித்தும்

திட்டங்கள் தீட்டியபடி

பயணத்தைத் தொடர்ந்து,

இடமதை அடைந்தனரே.

காட்சி -4

சந்துபொந்து பல திரும்பி,

மண்டபத்தின் முன்னதுவே

மணமகனை இறக்கி விட்டு,

ஓயாமல் ஓடி வந்த

வண்டியும்-

களைப்பதனை நீக்கிக் கொள்ள

மகிழ்ச்சியாய் பெருமூச்சை

பலதடவை வெளியிட்டு

இடம் பார்த்து ஒதுங்கியது.

தங்குமிடம் அடைந்ததுமே,

காலைக்கடன் முடித்து கொண்டு,

உடலும் வாயும் கழுவி விட்டு,

ஒப்பனைகள் செய்து கொண்டு,

விரைந்தனரே-

சிற்றுண்டி அருந்திடவே.

காட்சி-5.

சிற்றுண்டி முடிந்த பின்னே,

சிறுபொழுது கழிந்த பின்னே,

மணமகளும் தனைக்காட்ட,

மணமகனை நாடி வந்தாள்,

இருந்த இடம் தேடிவந்தாள்.

இருவீட்டு உற்றாரும் உறவினரும்

புடை சூழ்ந்து பார்த்திருக்க,

அண்ணநடை பயின்ற மகள்-

அரங்கிற்கு, உள் நுழைந்தாள்.

மணமகளைக் கண்டிடவே

காத்திருந்த மணமகனும்,

கண்கொத்தி பாம்பாக

விழிகளையே அசைக்காமல்,

வைத்த விழி மாறாமல்

அவளழகை பார்த்திருந்தான்.

மணமகனின் நிலையறிய

குனிந்த தலையை சிறிதுயர்த்தி

மீன்விழியை ஓட விட்டாள்,

மின்சாரம் பாய விட்டாள்.

விழி நான்கும் ஒரு நொடியே

சந்தித்து பிரிந்தாலும்

உற்றதுணை நமக்கிதுவே

என்றநிலை எடுத்துக் கொண்ட

அவன் முகத்தில்

ஒளிவெள்ளம் பாய்வதையே

கண்டு கொண்டவளோ,

மணமகனை பார்த்தபடி,

ஆனந்த வெள்ளமதில், முகமோ

செவ்வொளி படர்ந்தபடி,

விண்மீன் நிலைப்போல

கண்களையே சிமிட்டி- அவள்

புன்முறுவள் பூத்தாளே.

காட்சி-6

நாமிருவர் இணையும் வரை,

உற்றதுணை இதுவென

கைப்பேசி ஒன்றதனை

ஆவலுடன் பரிசளித்தான்.

என் நினைவு அகலாது

என்றுமே இணைந்திருக்க

அவன் விரலில்- அவளும்

கணையாழி ஒன்றினையே

அணிந்துத்தான் விட்டாளே.

விடைப்பெற்ற நேரத்திலே

கையசைத்த மணமகனை

கண்டு அவள்,

கையசைக்க தயங்கி நின்றாள்.

பிரியவே மனமின்றி,

சில நொடி கடந்த பின்னே,

சிறிதாக கையசைத்தாள்,

விழிகளில் ஏக்கம் காட்டி.

Wednesday, July 9, 2008

குழந்தை பாட்டு- கடலும் நாமும்

கடலும் நாமும்
************************
அடுக்கடுக்காய் கடல் அலைகள்
ஆர்பரிக்கும் நிலையிலே
அச்சமென்பது உயிரியிலே
ஆசையென்பது மனதிலே
அளவற்று இருக்கையில்
அத்துடனே விளையாடி
ஆனந்தமாய் நனைந்துக் கொண்டு
அலைகளையே கலைத்து விட
அதனருகில் சென்று நாம்
ஆர்பரிப்போம் இணையாக.
அலைகள் வரும் வேகம் கண்டு,
புறமுதுகிடுவோம் விரைவாக.
காலை பிடித்து இழுத்து விடும்,
நொடி பொழுதில் கரைந்து விடும். (இமைக்கும் நேரத்தில் மறைந்து விடும்.)
கண்ணை திறந்து பார்க்கையிலே,
அடுத்து வரும் அலைகளைக் காண்போம்.
அலையை அணைத்து ஆனந்தம் அடைவோம்,
எண்ணிக்கையின்றி அணைத்துக் கொள்வோம்.
ஓடிய கால்கள் களைப்பில் கெஞ்சும்,
மனத்தின் மகிழ்ச்சியில் அத்தனையும் மறையும்.
விலகி செல்ல மனமோ இல்லை,
மனத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையோ இல்லை.
விண்ணை மறைத்து கருமை பூச,
நிலவை காண கண்கள் அலையும்.
நிலவை கண்டு கடலும் பொங்கும்,
அத்துடன் நமது மகிழ்வும் பொங்கும்.
இரவு பொழுதில் மனமே இன்றி,
பிரியா விடையை கடலுக்குச் சொல்லி
திரும்பி செல்வோம் வீட்டுக்கு நாமும்.

Tuesday, July 8, 2008

அன்று நீ - இன்று நான்.

நயவஞ்சகமாய்- எனை
வலையிலே வீழ்த்தி,
என் கனியிதழை உறுஞ்சி,
காவியமென கிறுக்கி,
கற்புதனை கவர
நல்லவனாய் நடித்தாய்.

நட்பென தொடங்கி,
நாயகனாய் நினைத்து,
நயமாய் பேசிய - உன்னிடம்
இதழுடன் மனத்தையும் இழந்தேன்.

அச்சாரமென
அதரத்தில் பதித்து ,
அவசரமாய்- என்னுடலை
அடையப் பார்த்தாய் .

உடலோடு உறவாட,
ஊரறிய உறவுதனை
உருவாக்கிய பின்னே,
உனக்கு நான் உரிமையென,
உறுதியாய் நானிருக்க
உதறி விட்டு சென்றாய்,
ஊருறங்கும் நேரமதில்.

உன் வாயிதழோ,
விசக்கொடுக்கு.
இன்று நான்
அறிகின்றேன்.

அன்று ஆசையில்
அலைந்த என் அதரங்களோ,
அமிலத்தில் வீழ்ந்தது போல்,
அரிக்கின்ற அவதியினை
அனுதினமும் உணர்கின்றேன்.


பின் குறிப்பு :::

அன்று எனைப் பற்றி எழுதியதை, காவியமென நினைத்தேன் கயவனே. இன்று உனைப் பற்றி கிழித்திருக்கிறேன், எனக்கு தெரிந்த கிறுக்கல்களால்.

உதடுகளின் ஸ்பரிசம்

கனியிதழ் என்றால்
கனிரசம் சுரக்கும்.

பூவிதழ் என்றால்
தேனினை சுரக்கும்.

செவ்விதழ் என்றால்
மதுரமாய் இனிக்கும்.

பனித்துளி பூத்த இதழோ
பருக துடிக்கும்.

மென்பஞ்சு இதழோ
தடவிக் கொடுக்கும்.

காதலால் உன் இதழோ,
காந்தமாய் கவரும்.

உன் இதழினை உரசினால்
மதியும் மயங்கும்.

கள்ளுண்ட மந்தியாய்
கண்களும் கிறங்கும்.

மயக்கத்தில் கைகளும்
காவியம் படைக்கும்.

பாவை - நீ,
என்னிடமிருந்தால்
பரவசமாகும்.

இதழோடிதழ்
இன்றிணைந்த பொழுதே,
இன்பமாயிருக்க,

உடலோடு உடலும்
உறவாடிக் கொண்டால்,
உயிருள்ள வரையும்
உற்சாகமாய் இருப்போம்.

உரியவரென்றே
உரிமையில் நாமும்
உடலை பகிர்வோம்.
உற்ற நாளின்றே என்றென நினைத்து.