Translate

Friday, November 21, 2008

மாணிக்கப் பாட்டி!

அழைத்து விட்டாள்
உறவு வழி
பேரன் பேத்திகளை.
காணிகளை
பகிர்ந்தளித்தாள்
பேரன்களுக்கு.
நகைகளையோ
வழங்கி விட்டாள்
பேத்திகளுக்கு.
காசு பணம்
அத்தனையும்
அளித்து விட்டாள்.
கையிலிருந்த
ஜோடி வளை
இரண்டைத் தவிர.
விழி மூடும்
தருணம் வரை,
விழி நீரை
சிந்தா நிலை
வைத்திருந்த,
கரம் பிடித்த
மாணிக்கத்தின்
முதல் நினைவான
வளைதனை
தடவி விட்டாள்,
வரிந்தவனையே
தழுவுவதாய் .
வரிந்து கொண்டவளை
வலுவாக கைப்பற்றி,
வருத்தங்கள் அவளடைய
வழிகளைக் கொடாமல்
வளைத்தணைத்தே
வாழ்க்கை தனை
நடத்தி விட்டு,
வின்னுலகம் சென்றவனை
வழித் தொடர்ந்தே,
விரைந்துச் செல்ல
விழிப் பதித்த
நிலையிலிருந்தாள்
வாரிசுகளற்ற
மாணிக்கப் பாட்டியவள்.

No comments: