Translate

Monday, November 10, 2008

உம்மை யாம் தொடர்கையிலே

எமது தாயின் கடைசி சகோதரியும் எமது சித்தியுமான கோயமுத்தூர்.திருமதி.விட்டோபாய் ரங்கநாதம் அவர்கள் இறைவனடி அடைந்ததை ஒட்டி 03\11\2008 அன்று அவர் ஆத்மா சாந்தியடைய அவர் கமலபாதங்களை நினைவில் நிறுத்தி சமர்பித்த கவிதாஞ்சலி.
************************************************************************************

உதயம் 13\09\1938. மறைவு 03\11\2008.
$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$

அணையிலே
தேங்கியிருக்கும்
நீர் போல,
உம் மனத்திலிருந்த
பாசமதை யாமறிவோம்.

மடை திறந்த
வெள்ளம் போல்
ஆர்பரிப்பு ஏதுமின்றி,
பொங்கி வழியும்
பாசந்தனை
உம் செயல்களே!
மென்மையாய்
வெளிகாட்டும்.


ஏக்கங்களும் தாக்கங்களும்
உம்மையும் தாக்கிருக்கும்!
பக்குவமாய் ஏற்றுக் கொண்டு
பக்கங்களைப் புரட்டி விட்டீர்.

வாழ்ந்துத் தான்
முடித்து விட்டீர்,
வழ்க்கையெனும்
நெடுங்கதையை.

பாசத்திற்கு கைமாறாய்
நினைவுகளில் வைத்திருப்போம்.
உங்களை நாங்கள் இழந்தாலும்
உணர்வுகளில் கலந்திருப்பீர்.
உணர்வுகளும்
நாள் ஒன்றில் அற்று விடும்,
உம்மை யாம் தொடர்கையிலே.


பின் குறிப்பு: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையிலிருந்து கோவை சென்று எமது சித்தி அவர்களின் ஈமச்சடங்கிலே கலந்துக் கொள்ள இயலவில்லை. எமது சித்தி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், அவர் பிரிவினால் சொல்லொன்னா துயரிலிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்ககும் எங்கள் ஆழ்ந்த இரங்களையும் வருத்தங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.


No comments: