Translate

Saturday, May 17, 2014

தமிழகத்தில் "மோடி அலை "



வாக்காளர்களின்  கட்சி சார்புகளை பற்றி அறிந்துக் கொள்ளாமலே, தனிப்பட்ட முறையில்  சிலரிடம் பேசிய போது இப்பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் "மோடி அலை வீசவில்லையா?" என்ற எமது கேள்விக்கு, கிடைத்த பதில்கள். இதோ....

1) கூட்டணி கட்சிகளின் இட ஒதுக்கீடு சண்டைகள்.

2) பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் வீண் கௌரவங்களை விட்டுக் கொடுத்து கூட்டணியாக செயல் பட்டிருந்தால்...

3) இதுதான் வாய்ப்புஎன  நினைத்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை நிறுத்தாமல் கட்சியின் வேறு நபர்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தால்... வெற்றிக் கிடைத்திருக்கும். உ-ம்: தே.தி.மு.க.,  சதீஸ் (குடும்ப உறுப்பினர்), ரசிகர்களையும், கட்சி ஆரம்பித்தபோது கிடைத்த ஓட்டுகளை, தற்போதைய ஓட்டுகளாக கருதியது.  

4) ப.ம.க., அன்புமணி ... வன்னியர் ஓட்டுகளுடன், வேறு சில வெளியிட கூடாத சமாசாரங்கள். அதனால் வெற்றி.

5) முக்கியமான சூழ்நிலைகள் தவிர, தமிழக எல்லையை தாண்டாத தமிழக வாக்காளர்களின் மனநிலை. பாரதிய ஜனதா கூட்டணி முடிவு செய்வதில் ஏற்பட்ட வீண்குழப்பங்கள்  தமிழக வாக்காளர்களின் மனநிலையில் நம்பிக்கையின்மையை தோற்றுவித்து விட்டது.

6) குறைந்தபட்சம் மேலும் சில இடங்கள் கண்டிப்பாக கூடுதலாக கிடைத்திருக்கும்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Nagoorkani Kader Mohideen Basha




Nagoorkani Kader Mohideen Basha

புரிதலில் உள்ள
வாழ்வின் இனிமை,
எதிலும் இல்லை
என்பது நிசமே.

ஆண்டவரின் அருளோ
அளவின்றி இருக்க,
வாழ்நாள் முழுதும்
வண்ணமுடன் திகழ,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
இனிய நண்பரே....
உங்கள் இருவரையும் தாம்.


இனிய திருமணநாள்  நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Photo: MANY MANY HAPPY RETURNS OF THE DAY !! 
May the Almighty Bless you and family with all that is choicest in the Universe ..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Prasanna Kumar





Prasanna Kumar



மாற்றங்கள் என்றும்
வாழ்விலே தொடர,
சிந்தனைகள் என்றும்
சிறந்ததை அடைய,
நினைவுகள் என்றும்
மகிழ்விலே திளைக்க,
போக்குகள் என்றும்
உயரத்தை நோக்க,
வாழ்த்துவோம் என்றும்
நலமுடன் வாழ.




இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகனே.

சிறுநீரக அறுவை சிகிச்சை (Kidney Surgery ) - தேவை அவசர உதவி........


தேவை அவசர உதவி........

அன்புடைய நெஞ்சங்களே!

வணக்கம். மிக சாதாரண வசதி உடைய எங்கள் உறவினர் சாம்ராஜ் அவர்களின் மகன் முரளி, சுமார் 45 வயது. அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர். முரளி, சிறுநீரக கோளாறினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை (Kidney Surgery ) மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுத்தி உள்ளார்கள். அதற்கு சுமார் 19 இலட்ச ரூபாய்களுக்கு மேலாகுமென்றும் தெரிவித்துள்ளார்களாம்.

உதவக்கூடிய பெருமனம் படைத்தவர்கள், கீழ்காணும் அலைப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு விரைவில் தங்களால் முடிந்தவரை தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


திரு.சாம்ராஜ் - 099654 81550
திரு.முரளி. -    094429 21218















Sunday, May 11, 2014

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் - 2014





உலகிலுள்ள தாய்மார்கள் அனைவருக்கும், ''இனிய அன்னையர் தின '' வாழ்த்துக்கள்.

உங்கள் உயர்வுகள்
அனைவருக்கும் புரியட்டும்.
தாழ்வு நிலை மறைந்து
சமநிலை ஆகட்டும்.
பாசத்தின் சக்தி
பளிச்சென தெரியட்டும்.

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அருமை தாய்மார்களே.



Friday, May 9, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shobana Murali


 
 
 
 
My daughter Shobana's Birthday.

குடும்ப வாழ்வின்
பகுதியில் இன்று,
முதலாய் வருகின்ற
பிறந்தநாள் இதுவே.

காலம் முழுதும்
இணையுடன் இருந்து,
இறைவனின் அருளால்
நலனும் மகிழ்வும்
குறைவின்றி நிலைத்து,
வாழ்வாங்கு வாழ
பாசமுடன் பகிர்ந்தோம்
ஆசிகள் உமக்கு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.

இந்திய தொடர் வண்டி பயண சலுகை



செவிப்புலன், செவி மற்றும் வாய் செயலற்றவர்களுக்கு, இந்திய தொடர் வண்டி பயண சலுகையின் அரசு உத்தரவு.   



ஸ்ரீ வாசவி ஜெயந்தி (பிறந்தநாள்)






ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன்




ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தியில் (பிறந்தநாளில்), இப்புவியில் வாழும், நம் ஆர்யா வைஸ்ய குலமக்கள் மற்றும்  அனைவரின்
குலம் செழிக்க,
அமைதி நிலவ,
ஆற்றல் பெறுக,
நலம் நிலைக்க,
மகிழ்வு பொங்க,
எல்லாம் வல்ல ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் அருள வேண்டி பிரார்த்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம். 

Wednesday, May 7, 2014

பாராட்டப்பட வேண்டியவர் - திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்







கண்டிப்பாக இரண்டு நிமிடங்கள் செலவழித்து முழுமையாக படியுங்கள்

திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை
தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ..

சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள் ... ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது ....

இதில் இருந்து ஒன்று புரிந்தது ...
மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம் ...
எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்....
இதற்க்காகவாது பாராட்டலாமே !
நாமும் கொஞ்சம் திருந்தலாமே


கதம்பம்

Tuesday, May 6, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Balagopallan Nambiar





Balagopallan Nambiar

ஒன்று இரண்டென 
அறுபதையும் தாண்டி,
மீண்டும் தொடரும்,
ஒன்று இரண்டு
பத்துப் பத்தாய்
கழியட்டும் நலமாய்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


Monday, May 5, 2014

உனக்கு நீயே. - குறுங்கவிதைகள்



கேள்வியை கேட்டாய்
விடையையும் சொன்னாய்.
மதிப்பெண் இட்டாய்.
சிறப்பான தகுதியென
பாராட்டிக் கொண்டாய்.

ஒரு பக்கம் - குறுங்கவிதைகள்



ஒரு பக்கம்

வாசித்தனர் கதைநூலை
மறுப் பக்கத்தை
மறந்து விட்டு.

 +++++++++++++++

விழிகள்


வானத்தைப் பார்க்க,
தலைத்தூக்கி நடந்தால்,
கால்களுக்கு
கண்கள் கிடையாது
மேடுப்பள்ளங்களை பார்க்க.
 =================

அரிக்கின்ற...

ஏனென்று அறியவில்லை
எழுத்திலிட தெரியவில்லை
சோகத்தின் அலைகளையும்,
அரிக்கின்ற
இதயத்தின் சுவர்களையும்
தடுத்திட முடியவில்லை.
 

Sunday, May 4, 2014

பாவமடா நீ... - குறுங்கவிதைகள்




மரம் வளர விதையிட்டாய்.
இட்ட விதை முளை விட்ட போது,
உரிமையில்லா தனியாளாய் நீ...








நட்புகளுக்கு!

தாலாட்டின் காலம்
மாறிப் போனதினால்
தாமதமான
முதல் வணக்கம்.

Saturday, May 3, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - இராஜ. தியாகராஜன் (Raja Tyagarajan)




இராஜ. தியாகராஜன்

(Raja Tyagarajan)

 



அன்னையவள் தமிழோ
அமுதமாய் ஊட்ட,
புதுபுது எண்ணங்கள்
கவிதைகளாய் ஊற்றெடுக்க,
இனிதான இந்நாளில்
அன்புடன் வாழ்த்தினோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவியே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Abhinaya Rajendran




Abhinaya Rajendran


என்று இதைப் பார்த்தாலும்
அன்று இனிதான நாளுனக்கு.
நண்பி நீ மகிழ்ந்திருக்க
வாழ்த்துக்கள் பல நூறு.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிநயா.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Kvs Ram



Kvs Ram




எழுதிய தாட்களோ
எண்ணிக்கையற்றிருக்க,
விடைகள் கிடைக்குமோ
வினாக்களுக்கு இன்று?
நாளும் பொழுதும் மகிழ்வாய் கழிய,
நலனும் நட்பும் இனிதாய் திகழ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Abhinaya Rajendran


Abhinaya Rajendran


வசந்தத்தின் வாசல்
வழி அழைத்து செல்ல
வாழ்த்தினோம் இன்று உமை
வானவரை வேண்டியே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபி.

Friday, May 2, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - சாலினி சீரடிசாய் 2011



சாலினி சீரடிசாய்



சாட்டையாய் சுழண்றடிக்கும் 
எண்ண நினைவுகளை 
அழுத்தமாய் பதிவிட்டு 
பகிர்கின்ற சகோதரி 
சாலினி சீரடிசாய் -  உம்மை 
 உமது இனிய பிறந்தநாளில் 
வாழ்விலே நலமுடன் 
புகழுமடைய அன்புடன் வாழ்த்துகிறேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - சாலினி சீரடிசாய் 2013




சாலினி சீரடிசாய்


எண்ணத்திலே வேகம், 
எழுத்திலே மிளிர. 
வாழ்விலே என்றும் 
நிலைத்தே இருக்க 
நலனும் மகிழ்வும் 
இணைந்துமை அணைக்க. 
வாழ்த்துக்கள் பகிர்ந்தோம் 
வாழ்வாங்கு வாழ. 

முன்கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - சாலினி சீரடிசாய்



சாலினி சீரடிசாய்



புரியாத வாழ்க்கையை 
புரிந்ததாய் நினைக்கிறோம்.
நினைவுகள் யாவும்
இறைவனின் அருளால்
இனிதாய் விளங்க
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பியே.