ஒரு பக்கம்
வாசித்தனர் கதைநூலை
மறுப் பக்கத்தை
மறந்து விட்டு.
+++++++++++++++
விழிகள்
வானத்தைப் பார்க்க,
தலைத்தூக்கி நடந்தால்,
கால்களுக்கு
கண்கள் கிடையாது
மேடுப்பள்ளங்களை பார்க்க.
=================
அரிக்கின்ற...
ஏனென்று அறியவில்லை
எழுத்திலிட தெரியவில்லை
சோகத்தின் அலைகளையும்,
அரிக்கின்ற
இதயத்தின் சுவர்களையும்
தடுத்திட முடியவில்லை.
No comments:
Post a Comment