Translate

Showing posts with label உலக சாதனைக் கவியரங்கத்தில். Show all posts
Showing posts with label உலக சாதனைக் கவியரங்கத்தில். Show all posts

Sunday, June 8, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 2 - அன்னைக்கு சமர்ப்பணம்.




எமது தாயார் எமக்கு கூறிய வார்த்தைகளில் ஒன்று:-
  
   அறிந்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுவதை விட, நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றி பேசுவதும், பாராட்டுவதுமே பெருமை மிக்கதும், நாம் பிறப்பெடுத்ததற்கு ஒரு அடையாளமுமாகும் என்பார். அவ்வகையில் யான் உலக சாதனை கவியரங்கத்தில் கலந்துக் கொண்டு, கவி வாசிக்க கிடைத்த இந்த பேற்றை அவர் நினைவுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.



இவன் தான் கவிஞன்

ஆற்றலையும் ஆற்றாதுழல்வதையும்


அழகாக வெளிப்படுத்த,

இன்பங்களையும் துன்பங்களையும்

தனியாளாய் துடைக்க செய்து,

உள்ளிலிருக்கும் திறமையை

ஊக்குவித்து செயல்படுத்த,

கருத்தாழம் கொண்டு, அவன்

கவிதைகளாய் படைத்திடுவான்.


வண்ணங்களை கலந்தே, அவர்

கண் பறிக்கும் ஓவியமாய்

காட்டிடும் ஓவியரைப்போல் ,

வாயசைக்கும் வார்த்தைகளை

மனம் இலயக்கும் கவிதைகளாய்

வரிசைப்படுத்தும் கவிஞனிவன்.



சிற்பியவன் செதுக்கி வைப்பான்,

சிற்றுளி கைக்கொண்டே.

கவியிவன் பாட்டிசைப்பான்

மொழியினைத் துணைக்கொண்டே.


வீணையின் தந்திகளோ

ஒலியெழுப்ப இசையாகும்.

இக்கவியின் வார்த்தைகளோ

கவியாகி உமையிழுக்கும்.


பேசுகின்ற மொழிகளுக்கு அழகு செய்வான்.

மொழியின் பொருளுக்கோ வளம் சேர்ப்பான்.


செல்லுமிடமெல்லாம் நல்ல -

கவிதைகளை இறைத்திடுவான்,

மொழியறிந்த மாந்தரெல்லாம்,

சுவையறிய செய்திடுவான்.


கற்பனை கனவுகளில் தவழுகின்ற
எம் கவிஞர் திருகூட்டம்,
நிசமான நிகழ்வுகளில் நீந்துகின்ற
கூட்டமுமாகுமிது.

Saturday, June 7, 2014

உலக சாதனைக் கவியரங்கத்தில்- 1



எமையும் தாங்கி,
வாரிசுகளையும் தாங்கி,
பொறுப்பையும் தாங்கி,
உலக சாதனைக் கவியரங்கத்தில்,
யாம் கவி வாசிக்க,
ஒலி வாங்கியையும் (மைக்கையும்)
தாங்கிக் கொண்டிருக்கிறார்
எமது மனைவி திருமதி.ராஜராஜேஸ்வரி.


அதில் யாம் வாசித்த முதல் கவிதை.

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால், உதித்தது ஒன்று.

உறவற்று போனாலும், உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்,

உறுதியென நினைத்து.

உயர்த்தும் உறுதியில் பள்ளியில் சேர்த்தாய்.

உதித்திருந்த மலரும்,

உயர்வளிக்குமிடத்திலே,

உதிரும் நிலையானதே.

உதித்தவன் உயிருடன் உன்னுயிரும் துடிக்க,

ஈன்றதை பறிகொடுக்கும் நிலையிலே,

உன்னுடைய சோகமோ உயர்வாயிருக்க,

உள்ளத்தின் நினைவுகளோ பறந்தே அலைய,

உணர்ச்சிகளுக்கிடையே உறுதியை பூண்டாய்.

உன்னுடைய உள்ளமோ விரிந்தே கிடக்க,

ஊனமுற்றோரின், ஊனத்தைக் களைய,

உடல்தானம் செய்து உதவிட எண்ணி,

முடிவதை செய்தாய், விரைந்தே எடுத்தாய்.

மகனென்ற உறவு இல்லாமல் போகலாம்.

உன்னுடைய *செயல்கள்

தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய எண்ணங்களுக்கு....

தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.

ஆறுதல் சொல்ல முடியவில்லை.

தலை வணங்குகிறோம்

உனது முடிவுக்கும் உறுதிக்கும்.