Translate

Showing posts with label வாய் பேசாதோர் காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம். Show all posts
Showing posts with label வாய் பேசாதோர் காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம். Show all posts

Wednesday, April 3, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம்



தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள், மூன்று சதவீதம் [3%] பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர் கல்விக் கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.   

[* அப்படியா? அவ்வளவு தூரம் வாய்ப்புகளும், வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா!!!!!!! ]   
வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாமல் இருந்தனர். எனவே இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 – 3அ மற்றும் 38 – 3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012 நவம்பர் 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மானிய கோரிக்கையில் அரசு தெரிவித்து உள்ளது.

·         அப்பாடா...! இப்போது சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுது நடைமுறைக்கு வருமோ?

செய்தி:- காலைக்கதிர் நாளிதழ் ( 02/04/2013)
·          
·         வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம்  செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.