Translate

Tuesday, March 27, 2018

இருவரும் ஒருவராய்



குவிந்தந்த மேகமும்
அவர்கள்
எண்ணத்தைப் பிரதிபலிக்க.
இடைக்கோர்த்து தலை சாய்த்தாள்,
கேசம்
அவன் தோள் மீது அலைப்பாய.

காதலால் தேகங்கள்
தழுவிக் கொண்டது இதமாக.
நான் கானா அவர் கண்களும்
இமை மூடி கனவு கண்டது சுகமாக.

காட்சிகளோ விரிகிறது எனக்குள்ளே.
நுழைந்து பார்க்க விழைகிறேன்
அவர்கள் மனசுக்குள்ளே.

ஆயிரம் திட்டங்களோ நெஞ்சுக்குள்ளே
ஆட்டிப் படைக்குது இருவருக்குள்ளே
ஆனந்தமாய் இருக்குது உணர்வுகளுக்குள்ளே
ஆசை சொல்லுது இப்படியே இருக்க.

ஒதுங்கி வந்தேன் நானும் வெளியே
கவிதையாய் அதையே உங்களுக்கு சொல்ல.
கேட்டு நீங்களும் மகிழ்ந்து செல்ல,
வாழ்த்துகளில் வாழ்த்துவோம் சிறந்து வாழ. 🌹🌹

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏