சந்திரோதயம்
காதல் கவிவனம் 27/07/2019
தலைப்பு: தேடுகிறேன் உன்னை
கனவிலே வந்த உன்னை,
கவிதையிலே வடித்து விட்டேன்.
அவையில் தேடுகின்றேன்.
பசலையில் வாடுகின்றேன். 10
அன்றலர்ந்த மலரே.... நீ... என்
அருகில் இருக்கிறாயோ?
அல்லது தொலைவில் இருந்து
ஆட்டி என்னை வைக்கிறாயோ? 22
காணாத போதே உருகுகிறேன். நேரில்
கண்டால் கரைந்து போவேனோ!
கண்மணியே, என் மணியே,
காண்பது எப்போது, சொல் மணியே? 36
பித்தனாக அலைகின்றேன். உன்னை காணும் பொழுதில்
சித்தம் கலங்கி திரிவேனோ?
என்னருமை காதலியே
இன்றே எனக்கு சொல்லி விடு.
தேடுகிறேன் எங்கும் உன்னை.
ஓடி வந்து காட்சி கொடு. 57
✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
No comments:
Post a Comment