Translate

Friday, February 25, 2011

கேள்விகள் எதற்கு?

நாடி வந்தாய் எனை
நடத்தி விட்டு போ.
உடலுக்கென வந்தவன் நீ
உணர்வுகளை அறிவாயா?
வெளியேறி வந்தாலும்
வேற்றுமைப் பார்ப்பாய்.

வருமானமே குறி
வயிற்றை நிரப்ப.
கவலையில்லை எனக்கு
கற்பைப் பற்றி.

கதறி அழுத
காலமும் போச்சி.
மானம் காக்க
மார்க்கம் இல்லை.
காரி உமிழ்கிறேன்
காரிருளில் தள்ளியவனை.

விருப்பமின்றியே
விளைமகளாய் நானும்.
ஆணவக்காரனையும்
அடக்கி ஆள்வேன்.

எனக்கும் தெரியும்
என்னைப் போல
எரியப் போகிறாய்
எயிட்ஸில் நீயும்.

Sunday, February 20, 2011

ஓ நட்சத்திரங்களே!



உங்களைத்தான்....
எள்ளியாட நினைக்கின்றேன்.
எள்ளி நகையாடுகிறீர்களே, என்னையே
கண்களை சமிட்டி.

கணக்கும் பிணக்குமோ, உங்களை
கணக்கிடத் தொடங்கியதால்.
வான்வெளியைத் துளைத்து
சல்லடைப்புள்ளிகளாய் நீங்கள்.

புரியா வயதில் புதிராய் இருந்தீர்
கணக்கு இடுவதில் தான்.
புரிந்த வயதிலும் புதிராய் இருக்கிறீர்
உங்களை அறிந்துக் கொள்வதில் தான்.

நிலவைக் காட்டிய தாய்
ஏன் மறந்தால் உங்களைக் காட்ட.
தாரகைகளான நீங்கள்
பெண்ணென பெயரெடுத்ததாலும்
அழகாய் கண் சிமிட்டுவதாலுமோ?

பகலில் வெளிச்சப்புள்ளிகள்
என் ஓலைக்குடிசையில்.
ஓர் உணர்வு - என்றுமே
நீங்கள் என்னுடன் இருப்பதாய்.

அந்தரத்தில் தொங்குகிறீர்
எங்கோ மறைகிறீர் எரிநட்சத்திரமாய்.
நினைத்துக் கொள்வேன்
நானும் என்றாவது ஒரு நாள்.........



  • நெகிழ்ந்த உள்ளங்களின் கருத்து பகிர்வுகள்:-
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Sankara Subra Manian:- நன்றி நண்பரே. மாலை வணக்கம்.
      February 20 at 4:58pm ·
    • Sylvia Velanganni அருமை தவா சார்...நிலவைக் காட்டிய தாய்
      ஏன் மறந்தால் உங்களைக் காட்ட.
      February 20 at 7:43pm · · 1 person
    • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
      அருமை. வாழ்த்துக்கள்
      அன்புடன்
      சக்தி
      February 20 at 8:48pm · · 1 person
    • வீரபாண்டியன் Veera நல்ல கவிதை தவப்புதல்வன் சார் , கற்பனையை மீறி ,உண்மையை கவிதையாய் வடிக்க ஒரு தனிதிறமை வேண்டும் அது உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.
      February 20 at 9:46pm · · 2 people
    • Shanmuga Murthy
      நினைத்துக்கொள்வேன்
      என்றாவது ஒருநாள்....
      ஆம்.

      அந்த விண்மீன்களில்
      ஒன்றாய்.
      February 20 at 10:58pm · · 2 people
    • Keyem Dharmalingam நண்பரே தவப்புதல்வன் அவர்களே !
      அருமைநண்பரே !!
      அருமை நண்பரே!!!
      February 20 at 11:23pm · · 1 person
    • Vetha ELanga அன்பின் வாழ்த்துக்கள்
      அன்புடன்
      February 21 at 1:45am · · 1 person
    • Sathiabama Sandaran Satia arumai badri sir.. natcathirampol minnugirathu unggal kavi varigal... beautiful!!!
      February 21 at 7:11am · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sylvia Velanganni:- "நிலவைக் காட்டிய தாய்
      ஏன் மறந்தால் உங்களைக் காட்ட."

      தாயிக்கு நம்மை அறிமுகம் செய்து வைக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கும். முகநூல் தான் நம்மை அறிமுகம் செய்து வைத்து விட்டதே.
      February 22 at 8:03pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ வீரபாண்டியன் Veera:- "உங்களிடம் அளவிட முடியாமல் இருக்கிறது என்று தான் நான் சொல்வேன்."

      போச்சிடா! இருப்பதாய் காட்டிக் கொள்ள தோண்ட வேண்டியது தான்.
      February 22 at 8:06pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M
      ‎@ Shanmuga Murthy:- "நினைத்துக்கொள்வேன்
      என்றாவது ஒருநாள்....
      ஆம்.

      அந்த விண்மீன்களில்
      ...See More
      February 22 at 8:10pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sathiabama Sandaran Satia:- " natcathirampol minnugirathu unggal kavi varigal.''

      என்னது நட்சத்திரம் போல என் கவி வரிகள் மின்னுகிறதா? புகைப்படத்தை பார்த்து விட்டு கவி வரிகள்னு சொல்லிட்டிங்களா?. ஆனாலும் சந்தோசம், நீங்க சொன்னதை படிச்சு.
      February 22 at 8:16pm ·
    • Shanmuganaathan Venkata Kandar Swaminathan தன் வாழ்வில் நட்சத்திரங்களை எண்ணி பார்க்காதவர் யாரேனும் இருக்கின்றனரா?.... அப்படி மல்லாக்க படுத்து எண்ணும் சமயங்களில் புதிது புதிதாய் கண்ணுக்கு தெரிந்து கணக்கை குழப்பும் சிறு நட்சத்திரங்கள். இந்த வின் ஆராய்ச்சி வாழ்வின் ஒரு மிக சிறிய நிகழ்வாக இருந்தாலும் அதை நினைத்து பார்க்க வாய்த்த கவிதை. வாழ்த்துகள் அண்ணா..!
      February 23 at 8:06pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Shanmuganaathan Venkata Kandar Swaminathan :- தம்பி, முதலிலே ஒன்றை சொல்லி விடுகிறேன். உங்கள் பெயரில் உம்மை அழைக்க எந்த பெயரை எடுத்துக் கொள்வதென்று குளம்பி விட்டேன். அடுத்து இப்பொழுதுள்ள இளையதலைமுறையினர் மிக மிக குறைந்த அளவினர் தான் நட்சத்திரங்களை எண்ணும் வாய்ப்புடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களெல்லாம் வீட்டிற்குள் சின்னத்திரைக்கு முன்தான் அடக்கம். இளமைகால நினைவுகளை அசைப்போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
      February 23 at 10:26pm ·
    • Shanmuganaathan Venkata Kandar Swaminathan ‎@ Dhavappudhalvan Badrinarayanan A M : Annaa..! You can call me shan..
      February 23 at 10:59pm ·
    • Shanmuganaathan Venkata Kandar Swaminathanஅண்ணா..பலரும் குழம்பும் விஷயம் என்னுடைய பெயர். என்னுடைய பெயர் V .S .SHANMUGANAATHAN . பாட்டனார் வேங்கட ...மற்றும் தகப்பனார் சுவாமிநாதன் முதலியோர்களுடைய பெயர்களை இனிஷியலாக கொண்டுள்ளேன். என்னுடைய ஒன்று விட்ட சகோதரர் எங்களுடைய ஊர் பெயரான நஞ்சை இடையார் என்பதையும் பெயருக்கு முன் கொண்டுள்ளார். 'தில்லு முல்லு' படத்தில் வரும் 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' போலத்தான்.
      February 23 at 11:09pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A Mஹா..ஹா....ஹா..... விளக்கத்துடன் அருமையான ஒப்புவமை. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இரவு வணக்கம் தம்பி.
      February 23 at 11:14pm · · 1 person



      நேசித்த உள்ளங்களின் விருப்பக் குறிகள்:-



Tuesday, February 15, 2011

செல்வம்



தேடி வந்த செல்வமெல்லாம்
சொல்லாமல் போனதைய்யா.
தேடித்தேடி பார்க்கிறேன்
கண்ணாமூச்சி காட்டுதைய்யா.

இன்று நாளை என்று அது
நாட்களெல்லாம் போகுதைய்யா.
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பிப் பார்க்கத் தோனுதைய்யா.

தோல்விகளால் பட்ட காயம்
தீப்பிளம்பாய் எரியுதைய்யா.
வெற்றிப்படியைத் தொடும்போது
வீரத்தழும்பாய் தெரியுமைய்யா.

இன்றேயென சொல்லியே
விரைவாய் முடிவுகள் காண்வேனே.
நினைத்ததை முடித்து நான்
வெற்றியை அடைவேனே.

வெற்றியில் குடும்பமதை
மகிழ்வடைய செய்வேனே.
குடும்பமுடன் சேர்ந்து நான்
நம்பிக்கையைத் தருவேனே.
(கலகலப்பாய் இருப்பேனே)......

Tuesday, February 8, 2011

பேரன் "சுப்ரீத்"க்கு வாழ்த்து


மறையாத நினைவுகளாய்
மகிழ்வுகள் நிறைந்திருக்க,

சொல்லுகின்ற சொற்களெல்லாம்
வேதங்களாய் பிறப்பெடுக்க,

உழைக்கின்ற உழைப்பெல்லாம்
உயர்வையே உமக்களிக்க,

உனை நாடும் உறவெல்லாம்
உன்னாலே மகிழ்வடைய,

தேடி வரும் புகழெல்லாம்
தேன் போல் இனித்திருக்க,

என்றுமே நீ
வாழ்விலே சிறந்திருக்க,

என்றென்றும் நிலையாக
வாழ்த்துக்கள் உமக்கிருக்க,

வாழ்த்தினோம் உனையே
சந்தித்த இனிய பொழுதினிலே.


பின் குறிப்பு:- எமது சகோதரி சுபாஷிணி நாராயணன் அவர்களின் மகன் வழி பேரனுக்கு, 03/02/2011 ஆம் தேதி கோயமுத்தூரில் யான் தங்கிருந்தபோது வாழ்த்தி எழுதியது.

Monday, February 7, 2011

திருமண வாழ்த்து





மணமகள்: சௌ.B.தனலக்ஷ்மி (எ) அர்ச்சனா

மணமகன்: சிர.K.பாலசுபாஷ் குப்தா

மணநாள் : 30-01-2011 ஞாயிற்றுக்கிழமை

இடம்: கோயமுத்தூர்.


அழகான கனவுகளுடன்

ஆனந்த நினைவுகளுடன்

அன்பாகக் கைப்பிடித்து

அத்தானென அழைத்திடவே

ஆவலுடன் காத்திருந்தாய்.


அந்த நினைவு இனிதாக

ஆர்பரிக்கும் நட்பு சூழ,

ஆசி வழங்கும் உறவுக்கிடையே

அவருடன் இணைந்தாய் இன்றே நீ.

அளவாக அழகூட்டி,

அள்ளித்தான் முடித்திருப்பாய்,

அந்தி மயங்கும் வேளையிலே

அவர் வரவை எதிர்நோக்கி.


அவசரக் கோலமின்றி

அறிவான வாரிசுகளை

ஆர்வமாய் ஈன்றெடுத்து

ஆற்றலில் சிறந்திருக்க

அவணியை கைக்கொள்ள

அர்பணிப்பாய் உலகிற்கே.


அனுபவிக்கும் காலமெல்லாம்

அசைப்போடும் நேரமாக

அன்னையவள் அருள் புரிய

அன்னை உம் குலம் செழிக்க

அகண்ட மனமுடனே

ஆசிகள் பல யாம் செய்தோம்

அர்ச்சனா உம் இருவருக்கும் தானே.



மாப்பிள்ளை பெயரெடுக்க

மகிழ்வுடனே மாலையிட்டு

மங்கலயோசை விண்ணதிர,

மனமுவந்து இணையாக

மங்கையிவளை சிறைப் பிடித்தாய்

மயக்கிய மன்னனாய் நீ.


மாசற்ற அன்புடனே

மனையாளை சேர்த்தணைத்து

மங்கையிவளே பாக்கியமென

மற்றோர்க்கு எடுத்துக் காட்டாய்

மாசற்றத் தங்கம் போல்

மகவுகளை வளர்த்தெடுத்து,

மனைவி மக்கள் நலமொன்றே

மங்காத புகழென

மனைமங்கள ஆட்சி செய்து

மாமன்றமதில் செழிப்பாக

மகிழ்வுடனே வாழ்ந்திடவே

மனந்திறந்து வாழ்த்தினோம்


பல்லாண்டு! பல்லாண்டு!!

பலகோடி நூறாண்டு

நலமுடனும் வளமுடனும்

வாழ்கவென.


சௌ.B.அர்ச்சனாவின் சித்தப்பா:-

தவப்புதல்வன் (எ) A.M.பத்ரிநாராயணன்.


Mail Id: dhava.ambi@gmail.com; ambadri_57@yahoo.com