Translate

Thursday, May 28, 2009

சந்தோசமாய் எழுதுகிறேன்

ஒவ்வொரு மொழி எழுத்துக்களும், எண்களும், இலக்கணக் கவிதைகளும், புதுக் கவிதைகளும், நவின ஓவியங்களும் ( மார்டன் ஆர்ட் )Morden art எனப்படும் ஓவியங்களும் புரியாதவரை புதிர் தான். புரிந்து விட்டாலோ, தொடர்ந்து ஆவலிருந்தாலோ எண்ணங்களோ விரிவடையும், செயல்களொ விரிவடையும்.

அப்படி விடா முயற்சியுடன் எழுத்திலே தவளும் திரு. பாலு (எ) பால சுப்ரமணிய கணபதியின் " சந்தோசமாய் எழுதுகிறேன் " கிளிக்கித் தான் பாருங்களேன்.

இத்துடன் அவருக்காக ஒரு புதுக்கவிதை. அட கோவிச்சிக்காதிங்க, உங்களுக்கும் சேத்துத் தான்.


தேவை முடிந்தது

இரவோ நெருங்க,

இல்லையோ என நினைக்க,

அவளும் வழங்க,

அவனும் ஏற்க,

மனமும் மகிழ,

தேவையும் முடிய,

உண்டியும் நிறைய,

நன்றியை நவின்றான்

பிச்சைக்காரன்.