Translate

Tuesday, November 15, 2016

காதற்புலம்பல்

காத்திருப்பதைக் கண்டு
ஆவலுடன் வந்தேன்.
மாற்றிக் கொண்டாள்
கரண்ஸிகளை மட்டும்.

*ஒரு வங்கி ஊழியரின் காதற்புலம்பல்

 -தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.
15/11/2016

Thursday, November 3, 2016

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


அனுபவங்கள் பலகோடி

அத்தனையும் மனத்தின மூலையில்

அடுக்குகள பலவற்றில்

அடுக்கியிருப்பீர் திறமையாக.


அனைத்தையும் படிப்பினையாய்

அடுத்த தலைமுறை கற்றிருக்கும்.

அண்டி நீர் தொழுது வரும்

ஆண்டவன் அருளளித்து சிறப்பிக்க,


ஆண்டுகள் நாட்களாய்

குறைவில்லா நலனுடன்

மகிழ்வுகள் நடனமிட

இறையிடம் நாடினோம்


காலமினி அருமையாக

கடக்க வேண்டும் என்றென

கரம் குவித்து வேண்டினோம்

காத்தருள உமக்காக பாவா


Wish you happy birthday and many more happy returns of the day to

Bava, Anna SMR.


நமஸ்கரிக்கும்,

பத்ரி நாராயணன்

ராஜராஜேஸ்வரி.

30/10/2016


 



இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

உள்ளத்தில் இறைவனவன்

உருவின்றி குடியிருக்க,

இல்லத்தில் அவனாலே

இன்பம் நிலைத்திருக்க,

அன்றாடப் பணிகளிலும்

அவனுனை ஆட்டுவிக்க,

அனைத்தும் மகிழ்வாக

அவனுனக்கு வாரித்தர,

உயர்வான நிலையினை

உறுதியுடன் நீயடைய,

நலனென்றும் நிலையாக

நற்தொந்தியான் அள்ளித்தர,

உரைத்தோம் வாழ்த்துகளை

பாசமுடைய நெஞ்சத்திற்கு.


இனிய பிறந்தநாள் நல்லாசிகள் தம்பி


பாசமுடன்,

அண்ணன் ஆ.மா.பத்ரி நாராயணன்






குளிரே...


உறங்கும் நேரத்திலும்

உறங்க விடாமல் எனை தடுத்தாய்.

உச்சி முதல் பாதம் வரை

ஊடுறுவி சிலிர்க்க வைத்தாய்.


உள்ளத்தில் சங்கிலியாய்

உன் நினைவு நிலைத்திருக்க,

உறுதுணையாய் நீ மட்டும்

உடனிருந்து பார்த்திருக்க,


உவ்வகை யானடைய, உனை

உதறி எப்படித் தள்ளுவேனோ?

உன்னிடம் யாசித்தால்

உதவியெனக்கு புரிவாயோ?


உள்ளங்கை கனி போல

உன் நிலை தெரிந்தாலும் - கம்பிளி

உடுப்பில்லா நிலையினிலே

உதறலுடன் சரணடைந்தேன்


"குளிரே"