Translate

Tuesday, December 30, 2008

இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!


அன்புள்ள வாசக இதயங்களே!
உங்களுக்கும், உங்கள் சுற்றமும் நட்பும் எல்லா நலன்களும் பெற்று நலமாக வாழ எமது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



அன்புடன்,
தவப்புதல்வன்.

Friday, December 26, 2008

பண்பாடு

நம் கூட்டுக்குடும்ப உயர்வதனை
உணர்ந்தாரே மேல்நாட்டவர்.
போற்றி வணங்கி
ஏற்கின்றார் இந்நாளிலே.

கலாச்சார கழிவென்று
அவர் நாட்டிலே,
ஒதுக்கியதை நாடுகிறார்
நம் நாட்டிலே.

சொல்லித்தான் தெரிவதில்லை
மன்மத கலையே.
முன்னோரவர் வரையறுத்தார்
நம் நாட்டிலே.

பட்டப்படிப்பு பாடங்களை
சோதித்து அறியலாம்.
சோதித்தறிந்த பாடங்களை
ஏற்றும் கொள்ளலாம்.

சோதனைகள் பல செய்து
அறிந்துக் கொண்டார்கள்.
அவர்கள் வாழ்வு சோகமென்று
புரிந்துக் கொண்டார்கள்.

வாலருந்த நரியாக
மாற வேண்டாமே.
பட்டறிந்தவர் பாடங்களை
ஏற்றுக் கொள்ளுவோமே.

வாழ்வு தரும் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள்
கழிவான வாழ்வுதனை
ஒதுக்கித் தள்ளுங்கள்.

மிருகத்துக்கும் மனிதனுக்கும்
வேற்றுமை உண்டு.
புரிந்து கொண்டு வாழ்வோமே
மனத்திலே கொண்டு.

கழிவுகளைப் பூசிக்கொண்டு
கதற வேண்டாம்.
வாலறுந்த நரியாக
அலைய வேண்டாம்.

கூட்டுக்குடும்ப வசதியினை
உணர்ந்துக் கொள்ளுவோமே.
கூடி வாழ்ந்து பெருமைதனை
நாட்டிக் கொள்ளுவோமே.

இளமையிலே புதுமையென்று
ஆட்டம் போடாதே.
முன்னோர் கொடுத்த புதையலையே
நாசம் செய்யாதே.

மூத்தவனாய் நானுமிருந்து
சொல்லிக் கொடுக்கின்றேன்.
விளைநிலத்தை அழித்து நீயும்
வீனாய் போகாதே.

சீராக வைத்திருந்தால்
கணனி என்றுமே,
சிறப்பாக இருக்குமென்று
நீ அறிந்தது தானே.

சீராக அமைத்துக் கொண்டால்
வாழ்வுதனையே,
நலமாக வாழ்ந்திடலாம்
நீயுமே அறியாயோ!

சாதனைகள் பல புரிய
நம் நாட்டிலே,
நல்லவைகள் பலயிருக்கு
வாழும் வாழ்விலே.

கேடுகெட்ட நினைவுகள்
வேண்டாம் மனத்திலே.
உயர்வான எண்ணம்
வேண்டும் உன் செயலிலே.

இருக்கின்ற நல்லதை
தேடிப்பெறுவாயே.
திட்டங்களை செய்ததை
மேன்மை அடைவாயே.

பஞ்சமில்லா......


மோசடி ஆண்களுக்கும்,
மோசமான பெண்களுக்கும்
கிடைத்ததே வாய்ப்பு
பொன்னான வாய்ப்பு.

நீதியாய் கிடைத்ததே
சட்டங்களில்லாமலே.
மேலைநாட்டு நாகரீகம்
பாதுகாப்பாய் நுழைந்தே.

'' லிவ் இன் ரிலேசன்ஷிப்''
என்ற உறவு வந்ததே.
பாரத்தின் பண்பாட்டை
ஒழிக்கத் தான் வந்ததே.

மோதிரமும் தேவையில்லை,
தாலிக்கும் வேலையில்லை,
''தலாக்''குக்கும் வழியில்லை,
உறவுக்கும் முறைக்கும்
இனி தான் சோதனையே. 

இருவரிடை மட்டுமே
விருப்பம் இருந்தால் போதுமே.
காத்திருக்க தேவையில்லை
தாளிட்டுக் கொள்ளலாம்.

தேவையின்றி போனாலே
திறந்து விட்டு போகலாம்.
மற்றொன்று கிடைத்தாலே
தள்ளி விட்டும் மூடலாம்.

சேர்ந்திருந்த காலத்துக்கு
அத்தாட்சி தேவையாம்.
இது மட்டும் சட்டமாம்
காக்கவென்று வந்ததாம்.
பெண்களுக்கு பாதுகாப்பாம் 
ஆண்களுக்கு இரும்பு காப்பாம்.

கழிசலான நிலையை வைத்து
பணம் நிறைய பார்க்கலாம்.
மிரட்டி, சுருட்டி வாழ்பவரோ
வளமையாக வாழலாம்.


பின் குறிப்பு; இன்றைய 23\ 12\ 2008 சென்னை தினமலர் 
   நாளிதழில், '' லிவ் இன் ரிலேசன்ஷிப்'' பற்றி செய்தி வந்திருந்தது.
 திருமண சடங்கு முறையின்றி சேர்ந்து வாழ சட்டமியற்றவோ, 
  அனுமதி வழங்கவோ இயலாது. ஆனால் அப்படி வாழ்கின்ற 
  பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று பார்லிமெண்டில் ஒரு எம்.பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மேற்படி பதிலை அளித்துள்ளார். அந்த செய்தி படித்ததின் தாக்கமிது.

Friday, December 19, 2008

தூணும் துரும்பும்


நினைப்பு

தூணாகக் கருதி
துணையாய் வரிந்தாள்.
துரும்பாகிப் போனான்
துணையவன் அவனே.



மாற்றம்

தூணென நினைத்து
துணையைப் பார்த்தான்.
துரும்பென நினைத்தாள்
துணையவள் அவனை.


கிண்டல்

தூணாக அவனும்
துரும்பாக அவளும்.
மாறித்தான போனாரே,
தூணாக அவளும்
துரும்பாக அவனும்.


காலம்

துரும்பாக இருந்தாள்
பல் குத்த தோதாக,
தூணாகி போனாளே
பாழான வயதாலே.


கோலம்

தூணாக இருந்தானே
இளமைக் காலத்தில்.
துரும்பாகி போனானே
முதுமைக் கோலத்தில்.


கேலி

செய்தார் அன்று
தூணுடன் துரும்பென்று.
செய்கிறார் இன்று
துரும்புடன் தூணென்று.

வளமை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.

நிலமை

தூணென்ற நிலையும்
மறைந்து விட,
துரும்பென்ற நிலையில்
வாழ்வதுவே.


ஏமாற்றம்

தாணுக்கு நிகராய்
நினைத்திருந்தார்.
துரும்புக்கு சமமாய்
மாறி விட்டார்.


ஏக்கம்

தூணுக்கு நிகராய் இருந்தாலும்,
துரும்புக்கு சமமாய் நினைத்திருந்தார்.
துரும்புபென்ற நிலையில் இருக்கையிலே,
தூணாய் மாற முடியவில்லை.


நம்பிக்கை

தூணாக இருந்தது
துரும்பாகி போனது.


அவநம்பிக்கை

தூணாக இருப்பது
துரும்பாக மாறுமோ.


துக்கம்

தூணாக உள்ளார்
துணையைக் கொண்டு.
துரும்பாகி போவாரோ
துணையை இழந்து.

ஓரு இளமையின் சோகம், பூத்த பூ காய்க்க வில்லை



கூட்டமாக இருந்த போது
குறிப்பாக கவர்ந்தானே.

துள்ளிக் குதிக்கிற வயதாலே
குதுகுலத்தை உணர்ந்தேனே.

ஒன்றாக சேர்ந்து தான்
சுற்றித் திரிந்தோமே.

கட்டவிழ்த்த கன்று போல
கடலையில் புரண்டோமே.

ஒன்றாக இருப்பது போல்
ஒரே பொருளை ருசித்தோமே.

எச்சிலெல்லாம் இனிப்பதாய்
மயக்கத்தில் சொன்னேனே.

தனியாக சென்ற போது
தவறிழைக்க செய்தானே.

கட்டு காவல் அத்தனையும்
கத்தரித்து சென்றேனே.

ஒன்று சேர நினைத்தபோது
ஒதுங்கித்தான் போனானே.

விட்டுவிட மனமின்றி
வீம்பாக இருந்தேனே.

நானவனை வளைத்ததாய்
சொல்லித்தான் திரிந்தானே.

அறைகூவல் விடுத்தபோது
அடங்கித்தான் போனானே.

சேர்த்து வைத்த பின்னாலும்
சேராமல் உள்ளோமே.

காலுக்கிட்ட விலங்காக
கோபமாக உள்ளானே.

இணைந்திருக்க நினைக்கின்றேன்
முடியாமல் போகிறதே.

சொல்லம்புகள் பட்டுத்தான்
கூசித்தான் போகிறதே.

மலிவான காதலாய்
மாறியது போனதே.

வலியச் சென்று, விஷப்பாம்பை
சுற்றித்தான் கொண்டேனே.

குடும்பத்துக்கு பாரமாய்
மாறித்தான் போனேனே.

கழுத்திலிட்ட தூக்காக
துடித்துத்தான் போகிறேனே.

பூவாய் பூத்திருந்தேனே,
உரியதான காலத்தில்.

காய்க்காமல் இருக்கின்றேனே,
காய்க்க வேண்டிய நேரத்தில்.








Thursday, December 11, 2008

ஏனோ ?

கூடிக் கழித்தேன்
கனவுகளில்.

விடிந்த பிறகும்
உன் நினைவு.

ஏனோ மறுக்கிறது
இதயம்.

நீ இல்லை என்பதை
அறிந்தும்.

Saturday, December 6, 2008

சாப விமோசனம்

மேலும் கீழும்
பட்டாடை மூடியிருக்க,
காலிலும் கையிலும்
வளையல்கள் பூட்டியிருக்க,

மூக்கிலும் காதிலும்
குத்திகள் பளபளக்க,
கழுத்திலிருந்த சரங்கள்
மார்புடன் உறவாட,

வண்ணப்பூச்சிகளாய்
இமைகளோ சிறகடிக்க,
கோளங்களாய்
விழிகள் ஒளி வீச,

நிறமிட்ட உதடுகளில்
நீர்ப்பூச்சு துளிர்த்திருக்க,
உடுக்கையாய்
இடை சிறுத்திருக்க,

நறுமணம் உமிழ்ந்தாள்
நாசிகள் உறுஞ்சிக் கொள்ள,
நின்ற நிலையாலே
சொரிய வைத்தாள் பெருமூச்சை.

காற்றின் விசையாலே
உடைகளோ பட்டமாக,
மனமோ பறந்தது
அப்பட்டமாக.

என் இதயத்தின்
துடிப்போசை,
அவளை எட்டியதோ
நாதமாக.

பரிதவித்த எனை நோக்கி
இளநகைக் காட்டினாள்,
விழிதனை
கணநேரம் ஓட விட்டு.





Thursday, December 4, 2008

மிக்கி எலி குடும்பம்

அன்பான குடும்பம்




களங்கமில்லா நட்பு !

வழியிலே கண்டோம்.
முறுவலித்துக் கொண்டோம்.
நாள்தோரும் தொடர
நட்பிலே முடிய,
உள்ளளவும் நிலைக்க,
உறவுகள் செழிக்க...
காலங்கள் சென்றது.
களங்கமின்றி இருந்தது.
குடும்பங்கள் ஆனது,
பேதமின்றி கலந்தது.
ஆலமரமாய் விரிந்தது
அருகாய் நிலைத்தது..
தலைமுறைகள் மாறினாலும்
தழைத்து ஓங்கட்டும்.
நட்பின் ஆதிக்கம்
என்றுமே தொடரட்டும்