தள்ளாடலில் நீ
தனிமையில் நான்
மயக்கம் - ஏக்கம்
பகலில் மிதக்கிறாய் நீ
இரவில் பறக்கிறேன் நான்
கற்பனை - கனவு
வேகவில்லை உன்னிடமும்
நடக்கவில்லை என்னிடமும்
பொய்யும் - புரட்டும்
சந்திக்க போகிறாய் நீ
சந்திக்க செல்கிறேன் நான்
விடியல் - இரவு
மயக்கமுடன் வீதியில் நீ
மயக்கத்தில் வீட்டில் நான்
போதை - பசி
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.