Translate

Wednesday, January 19, 2011

திருமணநாள் வாழ்த்து 2011


கனவிலே கண்டது போல்
காலமது கடந்ததே.

ஒன்றிலே தொடங்கியது
ஓராண்டாய் ஆனதே.

விரைந்து சென்ற நேரமது
வினாடியாய் தெரியுதே.

இனிமையான நாட்களாய்
இனியும் தொடர்ந்து நடக்கவே,

வாழையடி வாழையாக
வளமையுடன் திகழவே,

ஆல் விரிக்கும் விழுது போல்
குடும்பமது செழிக்கவே,


வளமும் புகழும் பெற்று நீங்கள்
நலமுடன் வாழவே,

உள்ளம் நிறைந்த அன்புடன்
வாழ்த்தினோம் உங்களை.



18/01/2011 எமது மகளின் முதல் திருமணநாளுக்கா
அனுப்பிய வாழ்த்து




  • விருப்பக்குறிட்டும், கருத்தும் பதித்த நண்பர்கள்:-
    Krishnamal Krish and Mohana Somasundram like this.

    • M Venkatesan MscMphil இனிமையாகட்டும் ......
      January 19 at 11:47pm · · 1 person

    • Kalam Kadir தொடரட்டும் இல்லறம்
      படரட்டும் நல்லறம்

      January 19 at 11:50pm · · 1 person

    • Shanmuga Murthy தங்களின் மகள் மீதான அன்பு எம்மை நெகிழ வைக்கிறது.
      இன்றுபோல் அவர் என்றும் வாழ வாழ்த்துகிறேன்..

      January 19 at 11:53pm · · 1 person

    • Murugan Loganathan எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.......
      January 20 at 12:02am · · 1 person

    • Vetha ELanga ஆல் விரிக்கும் விழுது போல

      குடும்பமது செழிக்கவே,
      vaalka! vaalka!..

      January 20 at 1:08am · · 1 person

    • Kovai Bala S
      வாழ்க வளர்க!

      January 20 at 6:38am via Facebook Mobile ·

    • Jayanthy Morais எல்லா செல்வங்களும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துக்கள்....
      January 20 at 7:01am · · 1 person

    • Lakshmi Narayanan இனிமையாகட்டும் ......
      January 20 at 8:16am · · 1 person

    • S.k. Dogra நூறாண்டு சந்தோஷமான இல்வாழ்க்கைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
      January 20 at 9:08am · · 1 person

    • Shanmuganaathan Venkata Kandar Swaminathan Convey my love and regards to the young couple anna..!
      January 20 at 7:11pm · · 1 person

    • Krishnamal Krish இல்வாழ்க்கையில் சந்தோசங்கள் தொடர மனமுவந்து வாழ்த்துகிறேன்.
      January 21 at 1:18pm · · 1 person

    • Kuselan Kalimuthu எல்லா செல்வங்களும் பெற்று பார்ப்பவர் பாராட்டும் வகையில் வாழ்க ,வாழ்க, வாழ்க ,என்று வாழ்த்துகிறேன் .
      January 21 at 8:40pm · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! உங்கள் அன்பான வாழ்த்துக்கள், ஆசிகள் எம் பெரியமகள் & மருமகனுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      January 24 at 11:08pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவே எனது நன்றியை, மகிழ்ச்சியை பதிக்காமல், தெரிவிக்காமல் விட்டு விட்டேன். இரவு வணக்கம்.
      January 24 at 11:23pm ·





Monday, January 10, 2011

காத்திருக்கும் நேரமிது




கையிக்குமினி எட்டவில்லை,

கவிஞனென பெயரெடுக்க.

கண்ணயரும் நேரத்திலும்

கற்பனைகளாய் தோன்றுவதை

கவிதையாய் யான் நினைத்து

கரிய எழுத்தில் அத்தனையும்

காகித்ததில் பதித்து வைப்பேன்.

கட்டி வைத்த காகிதமெல்லாம்

கைப்படா நிலையாலே

கல்லறையில் உறங்குவது போல்

களையிழந்து கிடக்குதம்மா.

Sunday, January 9, 2011

இனியப் பொங்கல் நல்வாழ்த்து - 2011


மனமென்பது ஒன்றானது அல்ல.
மாறுப்பட்ட எண்ணங்களை கொண்டததை
தீதில்லா வழியிலே இயக்கி
தீந்தமிழ் சொல்லில் நினைப்பதைப் புனைந்து
வண்ணப்பூக்களாய் வனமெங்கும் மலர
வண்ணக்கோளங்களாய் நிலமெங்கும் வரைய
வானில் காட்டும் வர்ணஜாலம்
வானவில்லாய் அதுவும் மிளிர,
பரிதியுடன் இணைந்தே
பூக்க செய்தது மழையின் சாரல்..

ஜாலங்கலில்லா வாழ்க்கையில்லை
ஜாலம் மட்டுமே வாழ்க்கையுமில்லை.
வெற்றி நோக்கி செல்லும் பாதை
என்றுமே சுகமாய் இருப்பதில்லை
திட்டமிட்ட உழைப்பே, ஈயும் வெற்றி.
நன்றே யாவரும் முனைந்து செய்க
தானே அடையும் புகழும் உமையே.
என்றன சொல்லி வாழ்த்தினேன் உம்மை
இனிய பொங்கல் திருநாளில் யாமும்

Saturday, January 8, 2011

வேட்கைத்தீரா நினைவு

வேட்கைதீரா நினைவதுவே

வேண்டுமது உமக்குத்தான்

விவேகமுடன் செயல்பட்டால்

வெற்றியது சரணடையும்.


வெற்றிமங்கை வந்திடுவாள்

வேட்கை உமக்கு கூட்டவே.

வெற்றி மகுடம் சூடியே

உமையவள் அணைத்திடுவாள்

Friday, January 7, 2011

அதிருமே....



ஆயிரமாயிர எண்ணங்கள்
ஆழ்மனத்தில் அலைமோத
அகழ்ந்தெடுக்கும் சொற்களெல்லாம்
அம்பலத்தில் நடனமாட
அருமையான காட்சிகளாய்
அதுவமைந்து விட்டால்
ஆரவாரம் பெருக்கெடுத்து
அதிருமே அரங்கமது.

Sunday, January 2, 2011

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து2011



புத்தாண்டு விழாவென
புதுமையாய் கொண்டாட,
வேண்டாம் அம்மணம்
வேண்டுமே மகிழ்ச்சி (அமைதி).
சீர்பட செய்ய
சீரிய சிந்தனை
செயலிலே திறமை
செய்வோம் உணர்ந்து.
உலகைக் காக்க
உன்னத செயல்கள்.
கற்பூரமாய் எரிந்து
கடமையை முடிப்போம்.
அன்பைக் காட்டி
அரவணைத்துக் கொள்வோம்.
பன்பட்ட மனத்துடன்
பகிர்ந்துக் கொள்வோம்.
நண்பராய் நாடினோம்
நயம்பட உரைக்க,
புரிந்துக் கொண்டு
புணரமைத்துக் கொள்வோம்
புத்தாண்டு முதலே
புதுவாழ்வு மலர,
இனி வரும் நாட்களெல்லாம்
இன்பமாய் தொடர,
இயன்றதை கூறி இன்முகமுடனே
வாழ்த்தினோம் உமையே
வளமும் நலமும்
என்றுமே நிலைக்க.
அன்புடன்,
-தவப்புதல்வன்

Saturday, January 1, 2011

நெகிழியை நீக்க மாரத்தான்



நெகிழியை நீக்க மாரத்தான்.


ஓ..வென சத்தம்
ஓடி வந்து பார்த்தேன்.
மலையருவிப் போல
மகிழ்ச்சியின் வெள்ளம்.
என்னவென கேட்டபடி
எட்டியேப் பார்த்தேன்.
திக்கெட்டும் கீட்டம்
திருவிழாப் போல.
நெகிழியை நீக்க
நெடியதொரு பயணம்.
உள்ளதை அறிய
ஊட்டி விட முனைந்தோம்.
ஊணையும் உலகையும்
ஊனமின்றிக் காக்க,
விழித்தெழச் சொல்லி
விழிப்புணர்வுப் பயணம்.
வெற்றியின் படியில்
வெகமுடன் விரைவோம்.
விழிப்புடன் இருந்து
விவேகமுடன் செய்வோம்.
எத்தனையோப் படிகள்
நம்முன் இருக்க,
முதல்படி இதுவென
முயல்வோம் தொடர்ந்து.

-தவப்புதல்வன்.