Translate

Monday, January 10, 2011

காத்திருக்கும் நேரமிது




கையிக்குமினி எட்டவில்லை,

கவிஞனென பெயரெடுக்க.

கண்ணயரும் நேரத்திலும்

கற்பனைகளாய் தோன்றுவதை

கவிதையாய் யான் நினைத்து

கரிய எழுத்தில் அத்தனையும்

காகித்ததில் பதித்து வைப்பேன்.

கட்டி வைத்த காகிதமெல்லாம்

கைப்படா நிலையாலே

கல்லறையில் உறங்குவது போல்

களையிழந்து கிடக்குதம்மா.

2 comments:

Anonymous said...

கல்லறையில் உறங்குவது போல்


களையிழந்து கிடக்குதம்மா.
செழிப்பாக உலாவுதலே கவிஞனுக்கு மகிழ்வு! உலாவட்டும்! வாழ்த்துகள்!

Dhavappudhalvan said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி.