Translate

Saturday, December 29, 2007

தனிமையில்

தாயை இழந்தேன்.
தாயென நினைக்கும்
சோதரியே
உமையும் இழப்பேனோ.

நலம் பெற்று வருவீரோ
எமைக் காண
அன்றி வரட்டுமா
உமைக் காண.

உங்கள் பதிலுக்காக
தனியானாய்
தவிக்கின்றேன்,
தனையனாயிருந்து.

05\ 06 \2006 ல் எமது H.V.சகோதரிக்காக எழுதியது.

Friday, December 21, 2007

யாருக்காக ?

பரமாத்மாவாக நீங்கள்,பாவங்களை
யாருக்காக சுமக்கிறீர்கள்?
ஆத்மாக்களை இரச்சிக்கவா!

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்.
யானை இறந்தாலும்
ஆயிரம் பொன்.
இருப்பீர் என்றும்
எம் இதயத்தில்
பல்லாயிரம் பொன்னாக.

உங்களுக்காக
எம் இதயத்தில்
இடமிருக்கிறது
ஆனால்
வசதியோ குறைவு.

கடமைக்கோ
மனமில்லை
இடம் கொடுக்க
வாய்ப்பிருந்தும்.

போன பின்னே
'கோ' வென
துடித்தாலும்
கிடைக்காது
அறியா மூடர்கள்.

'கோ' வுக்கே
இந்நிலை என்றால்
நாளை
'பா' வுக்கு
எந்நிலையோ?

நீரின்றி
வளமில்லை,

பாசமின்றி
வீடில்லை.
அறிய வேண்டியவர்
அறிந்துக் கொண்டால்
மகிழ்ச்சிக்கு
பஞ்சமில்லை.

உறவுகளிடம்
இடம் பிடித்தீர்.
உறைவிடத்தில்
ஏன் இழந்தீர்?

உரிமை
எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்பைக் காட்டி
வெல்லுங்கள்.
பாசத்தால்
உருகி குலையாதீர்கள்.

சேதத்திற்கு
அளவில்லை,
பாச அணைகள்
உடைந்து விட்டால்.

ஆறுதல் சொல்ல
நினைக்கின்றேன்,
வழி அறியாமல்
முழிக்கின்றேன்.

ஆற்றி விட
நினைக்கின்றேன்,
வார்த்தைகளின்றி
தவிக்கின்றேன்.

தேற்றி விட
நினைக்கின்றேன்,
தேடிக் கொண்டே
இருக்கின்றேன்.

சுற்றிச் சற்றி
வருகின்றேன்,
அடை(டி)ப்பட்ட
புலியாக.

அறிந்த உங்களுக்கு
அறியாத நான்,
உடமையை
இழக்க விரும்பாமல்.

Wednesday, December 19, 2007

உன்னிலே அமிழ்ந்த....

மேகங்கள் நிறைந்து போனால்
வானமே மறைந்து போகும்.

கடலலைகள் மிஞ்சி போனால்
புவியும் அழிந்து போகும்.

உன் நினைவுகள் இன்பமானால்
நெஞ்சமும் மிதந்து போகும்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

புவியிலே ஊஞ்சலாய்
கடல் அலைகள்.

வானிலே ஊஞ்சலாய்
பஞ்சு மேகங்கள்.

நெஞ்சிலே ஊஞ்சலாய்
உன் நினைவுகள்.
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ


என்றேனும்
வருவாய்
எனைத்தேடி,
விழி வைத்து
காத்திருப்பேன்
உனை நாடி.

எஎஎஎக்கக்கக்க







இறைவனாய் நினைத்து

புரிதல் இல்லை
நமக்குள்ளே
அதனால்
என்னுடையது
என்னிடமும்,
உன்னுடையது
உன்னிடமும்.

உனது உயர்ந்தது
எனது தாழ்ந்ததென்று
போடாதே தவறாக
அன்பு கணக்கை.

புரிதல் இருப்பின்
நமைக் காத்திடுவோம்
ஒருவரை ஒருவர்
அரவணைத்து.

கோபப்படுகிறாய்
காக்கும் இறைவனாய்
எனை நினைத்து.

அன்பினால் உனை
கட்ட முடியவில்லை
மனிதனாய் இருந்தும்.

மிக மலிவாக

மிக உயர்வான
அன்பை தருகிறாய்
மிக மலிவாக.

உன்னிடமிருந்து
பெற முடியவில்லை
என்னால் மட்டுமே.

உன் பார்வையில்
நான் படாததாலா?

அதற்குறிய தகுதி
எனக்கில்லையென
கருதுவதாலா?

நீ கட்டியிருக்கும்
அன்பெனும்
பெருங்கோட்டையில்,

எனக்கொரு சிறு இடம்
தருவாயா?

வேண்டுவேன்
இறைவனிடமும்
உன் அன்பு கிடைக்க.

கொடுப்பான் அருள்
என்னிடம்
நீ அன்பு காட்ட.

எனக்கோ
உன் அன்பு
கிடைத்து விட்டால்,

பறப்பேன்
இறக்கைகள் இல்லாமலே.

நீந்துவேன்
துடுப்பு போடாமலே.

கேட்பேன்
காதுகள் இல்லாமலே.

நடனமிடுவேன்
கால்கள் இல்லாமலே.

பாடுவேன்
வாய் இல்லாமலே.

ரசிப்பேன்
கண்கள் இல்லாமலே.

படைப்பேன்
கைகள் இல்லாமலே.

கொடுத்து விடுவேன்
இதயத்தையே
உன் அன்புக்கு
காணிக்கையாகவே.

Monday, December 17, 2007

ஏனிந்த நினைவு ????

உன் மனநிலை
அறிந்திருந்தால்!
வளைவுகளை
ரசித்திருப்பேன்.

முயன்றிருப்பேன்
உனை அடைய,
நீயும் மகிழ்திருப்பாய்
உன் முடிவு சரியென.

நானும்
மகிழ்ந்திருப்பேன்
கிடைத்த வாய்ப்பை,
பயன்படுத்தி.

பாவி,
பாடாய் படுத்தி விட்டாய்,
சென்றபின் எனை பற்றி
உன் நினைப்பை வெளியிட்டு.

காமாலைக்காரனுக்கு
கண்டதெல்லாம்
மஞ்சளாம்.

அதனால் தானோ
என்னை பார்த்ததும்
காமுகனாய்
நினைத்திருக்கிறாய்.

வேறு எப்படி
புரிய வைப்பேன்
இளநங்கையே.

அகவை ஒன்று மலர்ந்ததிற்கு

qqqqttttqqqquuuuqqqq


அகவைகள் கடந்தாலும்
அகத்தின் எழுச்சி
அகமதில் காட்டி
அகமகிழச் செய்து

அன்புரை பூண்டு
அளவுலாவி
அன்பான குடும்பந்தனை
அரவணைத்துச் செல்லும்
அங்கயற்கரசியே !

அளவிலா வாழ்த்துக்களை
அன்புடன் வழங்கினேன்
அதிகாலைப் பொழுதினிலே
அகவையொன்று
அருமையாய் மலர்ந்ததற்கே.

Sunday, December 2, 2007

சொல்லிக் கொடுக்கிறார் "கிறுக்க(ன்)(ர்)"

கிறுக்கல்கள்
திரு.பாலு அவர்கள்,


எம்முடைய பல சந்தேகங்களுக்கு [பதிவு செய்வதற்கான] வழிகளை

சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதன்படி அவரின்

வலைப்பெயரை
கிறுக்கல்கள்

தமிழில், எம் வலைப்பதிவிலே வெளியிட்டு


முதல் முயற்ச்சி மேற்கொண்டிருக்கிறேன். சரியாக வருமென்ற

நம்பிக்கையில். தவறாக இருப்பினும் அப்படியே வைத்திருக்கப் போகின்றேன்.

ஏனென்றால் இதைப் பார்க்கும் நீங்கள் , சரி செய்துக் கொள்ளவும்,புதிய

விசயங்களையும் கற்றுக் கொடுப்பீர்கள்.

Saturday, December 1, 2007

நட்புக்கொரு புது இலக்கணம்.

மவுனமாய் வாயும்
பூட்டிக் கொள்ள,
மனத்திலுள்ள செய்திகளை
விழி கூறும்.

இதயம் கூறும்
ந்ட்புறவோ,
சிந்துகின்ற புன்னகையாய்
முகத்திலே வழிந்தோடும்.

குடும்ப நினைவுகளோ
மனத்திலோட,
சோகமே வெளிக்காட்டும்
பின்னனியாய்.

நண்பிகள் பலருண்டு.
நட்பிலே வகையுண்டு.
மொழி பேச வாயிருந்தும்,
சந்திப்பிலே கண்ணசைய,
பிரிவுக்கு கையசைய,
மவுனமாய் காலங்கள்
கழிந்தோடும்.

தேவைகள் குறைந்தளவே.
வாயசைவும் சிறிதளவே.
மவுனமொழி ஓரிரண்டை
கற்றுக் கொண்டேன்
நானும் உன்னிடமே.

நட்புக்கு, இதுவும்
ஒரு இலக்கணமாய்
சொல்லிக் கொடுத்தாய்-
நீ எனக்கு.
நீங்கா நினைவுகளில்
நீயும் இருப்பாய்
நண்பியாய் என்றும்
எம் மனத்தினிலே.



ஆவியின் குரல்.

உன் மடியில்

தலை வைத்து

நாம் மகிழ்ந்திருக்க

அன்று மறுத்த நீ.


எதை நினைத்து

கதறுகிறாய் இன்று

உன் மடியில்

உயிற்ற என் தலை வைத்து.

இந்த குட்டி புடிச்சிருக்கா....!!




ஹா...ஹா எம் பெயர் தெரியுமா?


ரூபி. ரூபி.. ரூபி. ஹையா!
இந்த குட்டி புடிச்சி இருக்கா?


இந்த குட்டி பெயர் ருபி