Translate

Friday, December 21, 2007

யாருக்காக ?

பரமாத்மாவாக நீங்கள்,பாவங்களை
யாருக்காக சுமக்கிறீர்கள்?
ஆத்மாக்களை இரச்சிக்கவா!

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்.
யானை இறந்தாலும்
ஆயிரம் பொன்.
இருப்பீர் என்றும்
எம் இதயத்தில்
பல்லாயிரம் பொன்னாக.

உங்களுக்காக
எம் இதயத்தில்
இடமிருக்கிறது
ஆனால்
வசதியோ குறைவு.

கடமைக்கோ
மனமில்லை
இடம் கொடுக்க
வாய்ப்பிருந்தும்.

போன பின்னே
'கோ' வென
துடித்தாலும்
கிடைக்காது
அறியா மூடர்கள்.

'கோ' வுக்கே
இந்நிலை என்றால்
நாளை
'பா' வுக்கு
எந்நிலையோ?

நீரின்றி
வளமில்லை,

பாசமின்றி
வீடில்லை.
அறிய வேண்டியவர்
அறிந்துக் கொண்டால்
மகிழ்ச்சிக்கு
பஞ்சமில்லை.

உறவுகளிடம்
இடம் பிடித்தீர்.
உறைவிடத்தில்
ஏன் இழந்தீர்?

உரிமை
எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்பைக் காட்டி
வெல்லுங்கள்.
பாசத்தால்
உருகி குலையாதீர்கள்.

சேதத்திற்கு
அளவில்லை,
பாச அணைகள்
உடைந்து விட்டால்.

ஆறுதல் சொல்ல
நினைக்கின்றேன்,
வழி அறியாமல்
முழிக்கின்றேன்.

ஆற்றி விட
நினைக்கின்றேன்,
வார்த்தைகளின்றி
தவிக்கின்றேன்.

தேற்றி விட
நினைக்கின்றேன்,
தேடிக் கொண்டே
இருக்கின்றேன்.

சுற்றிச் சற்றி
வருகின்றேன்,
அடை(டி)ப்பட்ட
புலியாக.

அறிந்த உங்களுக்கு
அறியாத நான்,
உடமையை
இழக்க விரும்பாமல்.

No comments: