Translate

Monday, December 17, 2007

ஏனிந்த நினைவு ????

உன் மனநிலை
அறிந்திருந்தால்!
வளைவுகளை
ரசித்திருப்பேன்.

முயன்றிருப்பேன்
உனை அடைய,
நீயும் மகிழ்திருப்பாய்
உன் முடிவு சரியென.

நானும்
மகிழ்ந்திருப்பேன்
கிடைத்த வாய்ப்பை,
பயன்படுத்தி.

பாவி,
பாடாய் படுத்தி விட்டாய்,
சென்றபின் எனை பற்றி
உன் நினைப்பை வெளியிட்டு.

காமாலைக்காரனுக்கு
கண்டதெல்லாம்
மஞ்சளாம்.

அதனால் தானோ
என்னை பார்த்ததும்
காமுகனாய்
நினைத்திருக்கிறாய்.

வேறு எப்படி
புரிய வைப்பேன்
இளநங்கையே.

No comments: