கண்களை வழங்க
வரிசையில் இருங்கள்.
கண்ணொளி இல்லாதோர்
உமக்குப் பின்னால்
இப்புவியைக் காண.
விழி இரண்டு திறக்கட்டும்,
நீங்கள் கண் மூடியபிறகு.
ஒளி பரவ விடுங்கள்,
கண்களைக் கொடுத்து.
மானிடருக்கு
மகிழ்வுடன் வழங்கி,
மண்ணுக்குப் போகும் கண்களை
மண்ணிலே விடுவீரே உலவ.
நீங்களே போன பின்
உங்களுக்கு எதற்கு கண்கள் ?
பொருள் சேர்த்த உடம்போடு,
புகழுடம்பையும் சேர்ப்பீர்-
கண்களையும் உடலையும்
தானமாக் கொடுத்து.
நீங்கள் பார்த்து பார்த்து
சேர்த்தைப் போல,
அவர்களும் சேர்க்கட்டும்
உங்கள் கண்வழிப் பார்த்து.
ஏழேழுத் தலைமுறை சொத்தை
உறவுக்கு கொடுங்கள்.
கண்களை பிறருக்குக கொடுங்கள்
ஏழேழுத் தலைமுறையை கண்டு மகிழ.
உங்கள் மறைவுக்கு பிறகும்,
உங்களை மறக்காமல் இருக்க,
உலகுக்கு கொடுத்து உதவுங்கள்
உங்கள் கண்களை.
பல நன்மைகளை
வீட்டுக்கு செய்த நீங்கள்,
பெரிய நன்மை செய்யுங்களேன்
நாட்டுக்கு கண்களைக் கொடுத்து.
நீங்கள்
காணாத காட்சிகளையும்,
உங்கள் கண்கள்
தொடர்ந்து காணட்டும்.
பொன் போல பாதுகாத்து
பொருப்பாகக் கொடுங்கள்.
நிலையாக இருக்க,
நினைவாகக் கொடுங்கள்.
Translate
Showing posts with label கண் தானம். Show all posts
Showing posts with label கண் தானம். Show all posts
Thursday, May 31, 2007
Sunday, May 27, 2007
தாயிக்கு சமர்பணம்
எனது அம்மாவுக்காக
***********************
விழி இரண்டு ஈந்தீர்
வாழ்வு இருவர் பெற்றார்
அவர் வழியே- உமை
நாங்கள் கண்டோம்.
உங்கள் விழி
வழியே
உலகை அவர்
கண்டார்.
செய்யும் செயலை
நிறைவாய்
துணிந்து செய்தீர்
மகிழ்வாய்.
***********************
விழி இரண்டு ஈந்தீர்
வாழ்வு இருவர் பெற்றார்
அவர் வழியே- உமை
நாங்கள் கண்டோம்.
உங்கள் விழி
வழியே
உலகை அவர்
கண்டார்.
செய்யும் செயலை
நிறைவாய்
துணிந்து செய்தீர்
மகிழ்வாய்.
Subscribe to:
Posts (Atom)