Translate

Sunday, June 21, 2009

சொல்லி விடு


கேட்காமல் விட்டு விட்டேன்
என்னத்தான் நினைப்பாயோ
தயங்கித்தான் நிற்கிறேன்.
கடந்த காலத்தை நினைத்துத்தான்.

என்ன இது கொடுமையென
சீறித்தான் விழுவாயோ,
அன்பான பதிலைத்தான்
ஆறுதலாய் சொல்வாயோ.

காரியத்தில் கண்ணாக
முடிவதை செய்துவிட்டேன்.
மாறுப்பட்ட காலத்தால்
எப்படியிருக்கு வெயிலுயென?
கேட்டுத்தான் முடித்து விட்டேன்
உன் பதிலை எதிர்நோக்கி.


#உமக்கொரு கேள்வி.
**என்னங்க?
#பாருங்க: www.http://aambalmalar.blogspot.com

**பதில் சொல்லிவிடுங்க. 

Saturday, June 20, 2009

கவிதைக் கோலம்

சிந்தனையிலே தான்
உதிக்க,
கவிதையாய்
கருக் கொள்ள,
வரிசையாய்
வாய் முனுக்க,
தாட்களில்
பதித்து வைக்க,
அற்புதமாய்
கைகளோ,
வரி வடிவாய்
கோலமிட்டது

Friday, June 19, 2009

நண்பர் A.இராமசந்திரன் -நினைவஞ்சலி.

நண்பர் A.இராமசந்திரன் அவர்களுக்கு 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
(சேலம் மாவட்ட சங்க முன்னாள் தலைவர்.)
ஜூன் 16 2009.

திட்டங்கள் தீட்டியிருந்தோம்
விண்ணை முட்ட.
மண்ணிலே புதைந்தது
கைக் கொடுக்க ஆட்களின்றி.
உம்மிடம் உறவாட வழியின்றி
நிழலாடும் அத்தனையும்
எம் நினைவுகளில்.

உமது நினைவுகளில்,
நண்பன்,
A.M.பத்ரி நாராயணன்.