உறங்கும் நேரத்திலும்
உறங்க விடாமல் எனை தடுத்தாய்.
உச்சி முதல் பாதம் வரை
ஊடுறுவி சிலிர்க்க வைத்தாய்.
உள்ளத்தில் சங்கிலியாய்
உன் நினைவு நிலைத்திருக்க,
உறுதுணையாய் நீ மட்டும்
உடனிருந்து பார்த்திருக்க,
உவ்வகை யானடைய, உனை
உதறி எப்படித் தள்ளுவேனோ?
உன்னிடம் யாசித்தால்
உதவியெனக்கு புரிவாயோ?
உள்ளங்கை கனி போல
உன் நிலை தெரிந்தாலும் - கம்பிளி
உடுப்பில்லா நிலையினிலே
உதறலுடன் சரணடைந்தேன்
"குளிரே"
No comments:
Post a Comment