Translate

Wednesday, April 3, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம்



தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள், மூன்று சதவீதம் [3%] பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர் கல்விக் கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.   

[* அப்படியா? அவ்வளவு தூரம் வாய்ப்புகளும், வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா!!!!!!! ]   
வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாமல் இருந்தனர். எனவே இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 – 3அ மற்றும் 38 – 3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012 நவம்பர் 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மானிய கோரிக்கையில் அரசு தெரிவித்து உள்ளது.

·         அப்பாடா...! இப்போது சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுது நடைமுறைக்கு வருமோ?

செய்தி:- காலைக்கதிர் நாளிதழ் ( 02/04/2013)
·          
·         வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம்  செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 



No comments: