Translate

Wednesday, April 10, 2013

உன் தாயும் பெண்தானடா!



காதலியாய் நினைத்துக் கொண்டு, காமத்தில் எண்ணம் கொண்டு,
கன்னியவளைக்  காதலித்தாய். காதலோ ஒருதலையாய் ஆகிவிட,
கர்ஜித்ததோ உன் மனமும், கற்பழித்துக் கொன்றுவிட.

கந்தக அமிலத்தில் உருக்குலைக்க நினைத்தாயோ?
   காட்சிப்பொருளாய் மாற்றிவிட துணிந்தாயோ?
கயமை அதுவென நினைவிலே உறுத்தாமல்,
   கண் மறைத்ததோ உன் உணர்ச்சி?.
கடமைகளை நீயும் மறந்து போக,
   கண்டந்துண்டமாய் அவளும் சிதைய,
கடும் சிறையில் நீ தனித்திருக்க,
   கடும் உளைச்சலில் குடும்பமோ மூழ்கியிருக்க,
நிர்கதியாய் போனதே, உன்னை வளர்த்த குடும்பமது.

கடற்கரையில் இணையாக, கலகலப்பாய் மகிழ்வோடு,
    கதைகள் பல கதைத்தபடி, காலமெல்லாம் இன்பமென,
கண்ட உன் கனவுகளோ, காற்றிலேஅநோப்பி விட்டாய்,,
   காமத்தின் வெறியாலே,  கண்மூடிய நிலையாலே, 
அழகு பதுமை பிணமாக, குடும்பமோ சோகத்தில் தள்ளாட,
    கரையுமே உன் வாழ்க்கை, காலமெல்லாம் நடைப்பிணமாய்..

காதலித்தேன் என்றொருவன், உன் தாயை கொன்றிருந்தால்,
     உன் பிறப்பு ஏதடா,பூமித்தாய் மடியினிலே?
காதல் என்றவுடன், கண்டவனிடமும் அனுப்பி வைப்பாயோ?
    கட்டில் ஏற்றிவிட துடிப்பாயோ, கன்னியவள் உன் சகோதரியை?

குழந்தை கூட விரும்பும் பொருளை,
   மறைத்து வைக்கும் எடுத்துக் கொண்டு.
இல்லையென்று போனாலோ அழுதுதான் கதறுமது,
    உனைப்போல சிதைக்கவே நினையாது என்றுமேயது.
கண் விழிக்கா உன் அறிவாலே, கண் கேட்ட பின்னாலே,
   கதிரவனின் ஒளிக் காண, கடுந்தவத்தின் பயனேது?






--
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.

No comments: