Translate

Monday, April 22, 2013

பூமி அன்னையின் நாள்.


புதுமை எனும் பெயரிலே,
பாழ்படுத்தி விடாமல்,
புனிதமாய் போற்றுவோம்
பூமி அன்னையை என்றுமே.

பூத்துக் குலுங்கி மலர்ந்திருக்க,
புனித நீரும் நிறைந்திருக்க,
புத்துணர்வுடன் வாழ்ந்திருக்க,
பங்கமதை புரிய வேண்டாம்.

இன்றைய நாள்
பூமி அன்னையின் நாள்.
நினைவிலே கொள்வோம்.
நீடித்தே இயற்கை மனம் கமழ
நிலைத்திருக்க செய்வோம்.

மதிய வணக்கம் நண்பர்களே

No comments: